லண்டன், ஏப்.4 கரோனா பாதிப்புகளை முன்னிட்டு பாகிஸ்தான் உள்பட 4 நாடு களை இங்கிலாந்து அரசு பயண தடை பட்டியலில் சேர்த்து உள்ளது.
இங்கிலாந்து நாட்டில் இதுவரை 43 லட்சத்து 64 ஆயிரத்து 547 பேர் கரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் 1 லட்சத்து 27 ஆயிரத்து 6 பேர் உயிரிழந்து உள்ளனர் என ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல் கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.
இந்நிலையில், ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற் றும் தென் அமெரிக்கா உள் ளிட்ட 30 நாடுகளை சேர்ந்த மக்களுக்கு இங்கிலாந்தில் நுழைய தடை விதித்து உத்த ரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து பாகிஸ்தான், கென்யா, பிலிப் பைன்ஸ் மற்றும் வங்காள தேசம் ஆகிய நாடுகளை இங் கிலாந்து சிவப்பு பட்டியலில் சேர்த்து உள்ளது. இதன்படி, இந்த நாடுகளில் இருந்து இங் கிலாந்து மற்றும் அயர்லாந்து நாட்டு மக்களை தவிர்த்து பிறர் வருவதற்கு தடை விதிக் கப்படும்.
இந்த பயண தடையானது, வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி காலை 4 மணியில் இருந்து அம லுக்கு வரும் என அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.
இதற்கு பின்னர் அந்த நாடுகளில் இருந்து வருகிற இங்கிலாந்து மக்கள் 10 நாட்கள் கட்டாயம் ஓட்டல் களில் தங்கியிருக்க வேண்டும் என உத்தரவு வெளியிடப் பட்டு உள்ளது.
No comments:
Post a Comment