30 முதல் 39 வயதினரே கரோனாவால் அதிகளவில் பாதிப்பு : சென்னை மாநகராட்சி தகவல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 9, 2021

30 முதல் 39 வயதினரே கரோனாவால் அதிகளவில் பாதிப்பு : சென்னை மாநகராட்சி தகவல்

சென்னை, ஏப்.9- சென்னையில் 30 முதல் 39 வயதினரே கரோனாவால் அதிகளவில் பாதிக்கப்பட்டு உள் ளனர். குறிப்பாக ஆண்களையே அதிகம் தாக்குகிறது என மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் நாளுக்கு நாள் கரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. தமிழகத்தில் 7.4.2021 அன்று கரோனா பாதிப்பு 4 ஆயிரத்தை நெருங்கியது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 1,459 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது வரை சென்னையில் 2 லட்சத்து 57 ஆயிரத்து 851 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 2 லட்சத்து 42 ஆயிரத்து 880 பேர் பூரணமாக குணமடைந்து உள்ளனர். 10 ஆயிரத்து 685 பேர் தற்போது அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுவரை 4 ஆயிரத்து 286 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து உள்ளனர்.

சென்னைக்கு இதுவரை வெளி மாநிலங்களில் இருந்து வந்த 24 ஆயிரத்து 684 விமானங்களில் பயணம் செய்த 23 லட்சத்து 77 ஆயிரத்து 375 பயணிகளை பரிசோ தித்ததில், 425 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. சென்னையில் அதிகமாக 30 முதல் 39 வயதினர் 20.14 சதவீதமும், 40 முதல் 49 வயதினர் 18.37 சதவீதமும், 50 முதல் 59 வயதினர் 17.97 சதவீதமும், 20 முதல் 29 வயதினர் 17.93 சதவீதமும், 60 முதல் 69 வயதினர் 11.13 சதவீதமும் பாதிக்கப்பட்டு உள்ளனர். குறைந்தப்பட்சமாக 9 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் 1.60 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இது வரை பாதிக் கப்பட்டவர்களில் ஆண்கள் 59.71 சதவீதமும், பெண்கள் 40.29 சதவீதம் பேரும் அடங்குவர் என பெருநகர சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment