மத்திய அரசு உதவ தேசிய வாத காங்கிரஸ் எம்.பி. சுப்ரியா சுலே கோரிக்கை
பன்வெல்
மாநகராட்சியில் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மாநகராட்சி சார்பில் வெளியிடப்பட்டு உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், பன்வெலில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மய்யங்களிலும் தடுப்பூசி போடும் பணிகளானது, தடுப்பூசி பற்றாக்குறையால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. தடுப்பூசி
இருப்பு வைக்கப்பட்ட பின்னர் மய்யங்கள் திறக்கப்படும் என தெரிவித்துள்ளது.
மராட்டிய
மாநிலத்தின் பன் வெல் மாநகராட்சியை தொடர்ந்து புனே நகரில் தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ளது என கூறப்படுகிறது. புனேயில்
109 மய்யங்கள் மூடப்பட்டு விட்டன. இதனால்
பொதுமக்கள் பலர் தடுப்பூசி போட்டுக் கொள்ள முடியாமலேயே வீடு திரும்பினர் என தேசியவாத காங்கிரஸ்
கட் சியின் சுப்ரியா சுலே கூறியுள்ளார்.
இதுபற்றி
மக்களவை உறுப் பினரான சுலே சுட்டுரைப் பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, புனேயில் 391 மய்யங்களில் 55ஆயிரத்து 539 பேருக்கு தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. ஆனால்,
தடுப்பூசி இருப்பு இல்லாத நிலையில், ஆயிரக் கணக்கானோர் தடுப்பூசி போடா மலேயே திரும்பி சென்றுள்ளனர். புனே நகரில் தடுப்பூசி பற்றாக் குறையால் 109 தடுப்பூசி மய்யங்கள் மூடப்பட்டுள்ளன. ஏனெனில்
தடுப்பூசி கையிருப்பு இல்லை. பொருளாதார
மீட்சிக்கும், கரோனா தொற்று சங்கிலியை உடைக்கவும் மற்றும் உயிர்களை காக்க ஒவ்வொருவருக்கும் தடுப் பூசி செலுத்துவதற்கான தீர் மானத்தில் நாங்கள் உள்ளோம் என தெரிவித்து உள்ளார்.
கரோனா
தடுப்பூசிகளை வழங்கி மதிப்புமிகு மத்திய சுகா தார அமைச்சர் டாக்டர் ஹர் சவர்தன் எங்களுக்கு உதவ வேண்டும் என்றும் சுட்டுரையில் சுலே தெரிவித்து உள்ளார்.
No comments:
Post a Comment