சென்னை உள்பட 22 மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 18, 2021

சென்னை உள்பட 22 மாவட்டங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிகரிக்கும்

சென்னை, ஏப்.18 தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒருசில மாவட் டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது.

மகாராட்டிரா முதல் உள் தமிழகம் வரை 1.5 கி.மீ. உயரம் வரை நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் கேரளா அதனையொட்டி தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஒருசில மாவட்டங் களில் லேசான மழை பெய்யக்கூடும்.

மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்கள், வடக்கு உள் தமிழக மற்றும் தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

18 முதல் 21-ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலையை ஒட் டிய மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற மாவட் டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வருகிற 20, 21-ஆம் தேதி வரை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப் பேட்டை, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், பெரம் பலூர், அரியலூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவா ரூர், திருச்சி, கரூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல் சியஸ் வரை அதிகரிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் புவியரசன் தெரிவித் துள்ளார்.

No comments:

Post a Comment