பிளஸ் - 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுக்கான 23 வழிகாட்டு நெறிமுறைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 11, 2021

பிளஸ் - 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுக்கான 23 வழிகாட்டு நெறிமுறைகள்

சென்னை, ஏப்.11  கரோனா  தடுப்பு கட்டுப் பாடுகளுடன் பிளஸ் - 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வுக்கான 23 வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

ஏப்ரல் 16 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் பிளஸ் 2 வகுப்புக்கான செய் முறைத் தேர்வுகள் தொடங்குகின்றன. இதை யடுத்து, செய்முறைத் தேர்வுக்கான 23 வழி காட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள் ளன. சிபிஎஸ்இ மற்றும் மாநில கல்வி வாரியத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு அட்ட வணை வெளியிடப்பட்டுள்ளது. 

பிளஸ் 2 பொதுத் தேர்வு மே 3 ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இதற்கு முன்பாக அந்த வகுப்புகளுக்கான செய்முறைத் தேவு ஏப்ரல் 16 ஆம் தேதி தொடங்கி, 24 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கரோனா  தடுப்பு கட்டுப்பாடுகளுடன் தேர்வு நடவடிக் கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

செய்முறைத் தேர்வின் போது கடைப் பிடிக்கப்பட வேண்டிய 23 வழிகாட்டு நெறி முறைகள் வெளியிடப்பட்டுள்ளன.

அரசு தேர்வுத்துறை இயக்குநர் உஷா ராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

1. தேர்வுக் கூடங்களை செய்முறைத் தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்த பின்பும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

2. செய்முறை தேர்வு முடிந்ததும் அனைத்து சாதனங்களும் கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்தப்பட வேண்டும்.

3. தேர்வுக்கு வரும் மாணவர்களை சமூக இடைவெளி விட்டு அமரச் செய்ய வேண் டும். ஒவ்வொரு முறையும் தேர்வுக்கு எத் தனை மாணவர்களை பங்கேற்கச் செய்வது என்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும்.

4. ஒவ்வொரு மாணவருக்கும் 4 சதுர மீட்டர் தொலைவில் தேவையான சாத னங்கள் வைக்கப்பட்ட வேண்டும்.

5. தேவையான அளவிற்கு மாணவ, மாணவிகளுக்கு கிருமிநாசினி வழங்கப்பட வேண்டும்.

6. கிருமிநாசினி தீப்பற்றும் தன்மை கொண்டதாகும். எனவே எரியக்கூடிய சாதனங்களை கவனமுடன் கையாள வேண்டும்.

7. கையில் கிருமிநாசினி பயன்படுத்திய மாணவர்கள் எரிந்து கொண்டிருக்கும் எந்த சாதனத்தையும் உடனடியாக தொடக் கூடாது.

8. செய்முறை கூடத்தில் உள்ள மாணவர் களுக்கும், ஊழியர்களுக்கும் கரோனா விதிமுறைகள் குறித்து முன்கூட்டியே தெரிவித்திருக்க வேண்டும். கண்டிப்பாக முகக் கவசம் அணிதல், கைகளை சுத்தப்படுத்துதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் உள் ளிட்ட விதிமுறைகளை சொல்லிக் கொடுக்க வேண்டும்.

9. செய்முறை தேர்வு நடக்கும்போது கதவு, ஜன்னல்களை கண்டிப்பாக திறந்து வைத்திருக்க வேண்டும்.

10. உள்காற்றை வெளியே தள்ளும் மின்விசிறியை ஓட விட்டிருக்க வேண்டும். உரிய காற்று வசதிகள் இருக்க வேண்டும்.

11. அனைத்து மாணவர்களும் ஊழியர் களும் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்த பிறகே பள்ளிக்குள் அனுமதிக்க வேண்டும்.

12. தேர்வு நடக்கும்போது மாணவர்கள், ஊழியர்கள் முகக்கவசம் அணிவது கட்டாய விதிகள் ஆகும்.

13. மாணவர்கள் சொந்தமாக கிருமி நாசினி, தண்ணீர் பாட்டில்கள் ஆகியவற்றை கொண்டு வர அனுமதிக்கலாம்.

14. ஒவ்வொரு மாணவரும் தேர்வு தொடங்குவதற்கு முன்பும், தேர்வு முடிந்த தற்கு பின்பும் கண்டிப்பாக கைகளை சுத்தம் செய்ய வேண்டும்.

15. ஆய்வுக்கூடத்தில் உள்ள எந்த ஒரு பொருளையும், வினாத்தாளையும் தொடு வதற்கு முன்பு கிருமிநாசினி பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

16. ஏற்கெனவே தேர்வு நடந்து கொண்டிருக்கும் நிலையில் ஒவ்வொரு பிரிவு மாணவர்களும் காத்திருப்பதற்கு உரிய ஓய்வு அறைகளை ஏற்பாடு செய்திருக்க வேண்டும்.

17. அந்த ஓய்வு அறைகளையும் ஒவ்வொரு பிரிவு மாணவர்கள் வருவதற்கு முன்பு கிருமிநாசினி கொண்டு சுத்தப்படுத்த வேண்டும்.

18. பாதுகாப்பான குடிநீர் தேர்வு மய்யத் திலும், ஓய்வு அறையிலும் வைத்திருக்க வேண்டும்.

19. கழிப்பறைகளை சிறந்த முறையில் சுத்தம் செய்து இருக்க வேண்டும். போதிய தண்ணீர் வசதிகள் செய்து இருக்க வேண்டும்.

20. மாணவர்கள் யாருக்காவது கரோனா பாதிப்பு இருந்தால் அவர்களுக்கு மறுபடியும் தேர்வு நடத்தப்படும். மாணவர்களுக்கு காய்ச்சல், சளி இருந்தால் அவர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள். அவர்களுக்கும் வேறு தேதியில் தேர்வு நடத்தப்படும். அதற் கான தேதியை முதன்மை கல்வி அதிகாரி அறிவிப்பார்.

21. நோய் பாதிப்பு மண்டலத்தில் பள்ளிகள் அமைந்து இருந்தால் அந்த மாண வர்களுக்கு வேறு ஒரு பள்ளியில் தேர்வு நடத்தப்படும். அதற்கான ஏற்பாடுகளை முதன்மை கல்வி அதிகாரி செய்து தருவார்.

22. வேதியியல் செய்முறைத் தேர்வில்பிப்பெட்உபகரணத்தை மாணவர்கள் பயன்படுத்தக்கூடாது. வாய்வழியாக ரசாயனங்களை உறிய இந்தக் கருவி பயன்படும் என்பதால் இதனை பயன்படுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது..

23. அதேபோல தாவரவியல் மற்றும் உயிரியல் பாட செய்முறைத்தேர்வில்மைக்ரோஸ்கோப்பயன்படுத்தக் கூடாது. மாணவர்கள்மைக்ரோஸ்கோப் லென்ஸ்அருகே கண்களை பதித்து செய்முறை தேர்வில் ஈடுபடுவார்கள் என்பதால் இதற்கு தடை விதிக்கப்படுகிறது.  அதன்மூலம் நோய் பரவலை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப் படுகிறது.

No comments:

Post a Comment