தேர்தல் களத்தில்..... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 31, 2021

தேர்தல் களத்தில்.....

தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் 2021

தமிழ்நாட்டுக்கு எத்தனை முறை பிரதமர் மோடி வருகிறாரோ, அந்த அளவுக்கு பா...வுக்கு வாக்குகள் குறையும் என்று மு..ஸ்டாலின் கூறினார்.

தி.மு.. தலைவர் மு..ஸ்டாலின் நேற்று (30.3.2021) ஆரல்வாய்மொழியில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, நாகர்கோவில் தொகுதி தி.மு.. வேட்பாளர் சுரேஷ்ராஜன், கன்னியாகுமரி தொகுதி தி.மு.. வேட்பாளர் ஆஸ்டின், கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் ஆகியோருக்கு ஆதரவு திரட்டினார். பொதுமக்கள் மத்தியில் மு..ஸ்டாலின் பேசியதாவது:-

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சில நாட்களுக்கு முன்பு இந்த கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வந்தபோது ஒரு கருத்தைச் சொல்லி இருக்கிறார். அதாவது, இந்த மாவட்டத்தில் இருப்பவர்கள் ஒரு .தி.மு.. சட்டமன்ற உறுப்பினரைக் கூட தேர்ந்தெடுக்கவில்லை. அதனால்தான் திட்டங்கள் எல்லாம் இந்த மாவட்டத்திற்கு வரவில்லை என்று பேசியிருக்கிறார்.

நினைத்துப்பாருங்கள். அவர் முதல்-அமைச்சர். அந்த கட்சியைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுக்கவில்லை என்பதற் காக இந்த மாவட்டத்தையே புறக்கணித்தவரை நீங்கள் புறக்கணிக்க வேண்டாமா?. அவரே பிரச்சாரத்திற்கு வந்தபோது வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

கடந்த முறை நான் தக்கலைக்கு வந்தபோது, மத்திய அரசு ஒரு புதிய பன்னாட்டு மாற்று முனையத்தை அமைக்கப்போகிறது. அதனால், மீனவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று நம்முடைய பேராயர்கள் வந்து என்னிடத்தில் முறையிட்டார்கள். தி.மு.. ஆட்சியில் நிச்சயமாக உறுதியாக அதற்கு நாங்கள் அனுமதி தர மாட்டோம் என்று அப்போது உறுதி அளித்துவிட்டுச் சென்றேன்.

அதற்கு பிறகு குமரிக்கு முதல்-அமைச்சர் வந்தார். அவர் ஸ்டாலின் பொய் சொல்கிறார். அவ்வாறு எந்த சரக்கு பெட்டக முனையத்தையும் அமைக்கப் போவதில்லை. எனவே ஸ்டாலின் பொய் சொல்லி ஏமாற்றுகிறார். யாரும் நம்பாதீர்கள் என்று சொல்லிவிட்டுச் சென்றார்.

நான் பொய் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. என் கையில் ஆதாரம் இருக்கிறது. நான் கலைஞரின் மகன். எதையும் புள்ளிவிவரத்தோடுதான் பேசுவேன். 20-2-2021 அன்றைக்கு பத்திரிகையில் அதிகாரபூர்வமான மத்திய அரசின் துறைமுகத் துறை விளம்பரத்தில் தெளிவாக இருக்கிறது. அதாவது மார்ச் 20-க்குள் யாராவது விண்ணப்பிக்க வேண்டி இருந்தால் நீங்கள் விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசின் மூலமாக விளம்பரம் தரப்பட்டிருக்கிறது. நான் உறுதியாகச் சொல்கிறேன், நாம் தான் ஆட்சிக்கு வரப்போகிறோம். இதற்கு அனுமதி தர மாட்டோம். இது உறுதி.

பிரதமர் எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வருகிறாரோ அந்த அளவிற்கு பா...வுக்கு வாக்கு குறையப்போகிறது. அதுதான் நடக்கப்போகிறது. அவர் ஒவ்வொரு முறை வரும்போதும் தமிழக மீனவர்களுக்கு நிம்மதியான வாழ்க்கையை உருவாக்கி கொடுத்துவிட்டதாக பேசிவிட்டுச் செல்கிறார். இதுதான் ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய் என்று சொல்வார்கள் அல்லவா, அப்படிப்பட்ட பொய்.

மீனவர்கள் பிரச்சினை

இன்றைக்கும் தொடர்ந்து மீனவர்கள் மீதான தாக்குதல் நடந்து கொண்டிருக்கிறது. மீனவர்களை மிரட்டுவது, வலைகளை அறுப்பது, படகுகளைப் பறிப்பது, இவ்வாறு அராஜகங்கள் அளவில்லாமல் போய்க்கொண்டிருக்கின்றன. பா... அரசோ, மோடியோ இதைப் பற்றி கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. அதனைத் தட்டிக் கேட்கப் போவதுமில்லை.

எனவே, தமிழகத்தில் நம்முடைய கழக அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு மீனவர்கள் உரிமையை நிலைநாட்ட அனைத்து நடவடிக்கைகளும் துரிதமாக எடுப்போம் என்ற உறுதியை இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

பா... நுழையவே முடியாது

இந்த தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்காக நடக்கின்ற தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய மானத்தை, மரியாதையை காப்பாற்றுகின்ற தேர்தல்.

பாஜக வரப்போவதில்லை. அவர்கள் தமிழ்நாட்டிற்குள் நுழையவே முடியாது. இது திராவிட மண். நம்முடைய தமிழை அழித்து ஒழிப்பதற்கு, சமஸ்கிருதத்தை - இந்தியைத் திணித்து, மதவெறியைத் திணிக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார்கள். அந்த மோடி மஸ்தான் வேலைகள் எல்லாம் தமிழ்நாட்டில் பலிக்காது.

எனவே, வருகின்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில், நாடாளுமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் நம்முடைய வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

திட்டங்களுக்கு அடிக்கல் மட்டும்

நாட்டிக் கொண்டிருக்கும் முதல்வர் -கனிமொழி எம்.பி

.தி.மு.. அறிவித்துள்ள இலவச சிலிண்டர்கள் வரும்.., ஆனால் வராது.., என்று தேர்தல் பிரசாரத்தில் வடிவேல் பட பாணியில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலகலப்பாக பேசினார்.

தி.மு.. மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி., சென்னை மயிலாப்பூர் தொகுதி தி.மு.. வேட்பாளர் .வேலுவை ஆதரித்து திறந்தவேனில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது:-

தி.மு.. ஆட்சி, தளபதி மு..ஸ்டாலினின் ஆட்சி வர போகிறது. நான் தற்போது தமிழ்நாடு முழுவதும் சென்று பார்த்ததில், எங்கும் புதிதாக சாலை போடப்படவில்லை. 8 வழிச்சாலைக்கு மட்டும் பழனிசாமி முக்கியத்துவம் தருகிறார். ஏனென்றால் அதில் தான் டெண்டர் விட்டு கொள்ளையடிக்க முடியும்.

அடிக்கல் நாயகன் பழனிசாமி. அவர் திட்டங்களுக்கு அடிக்கல் மட்டும் நாட்டிக்கொண்டிருக்கிறாரே தவிர, எதையும் செய்து கொடுப்பதில்லை.

உரிமைகளை மீட்டெடுக்க...

.தி.மு.. கடந்த தேர்தலின்போது, ஆட்சிக்கு வந்தால் இலவச செல்போன், ‘செட்-டாப்பாக்ஸ், ‘வை-பைவசதி தருவோம் என்றார்கள், வந்ததா?. பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொருவர் வங்கி கணக்கிலும் ரூ.15 லட்சம் போடுவேன் என்றார், வந்ததா?.

இவர்கள் மக்களை ஏமாற்றி பதவி, ஆட்சி அதிகாரத்தில் இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள். அடித்தட்டு மக்கள் முன்னேற வேண்டும் என்று நினைக் காதவர்கள்.

மொழி, நம்முடைய அடையாளத்தை காப்பாற்ற வேண்டும். டெல்லியில் அடமானம் வைக்கப்பட்ட தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்டெடுக்க வேண்டும். அதற்கு அனைவரும் தவறாமல்உதயசூரியன்சின்னத்துக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கனிமொழி பேசிக்கொண்டிருந்த போது பெண் ஒருவர், முதல்-அமைச்சர் அறிவித்த 6 இலவச சிலிண்டர்கள் கிடைக்குமா?’ என்று கேட்டார். அதற்கு கனிமொழி, ஸ்கூட்டி தருவோம் என்று சொன்னார்கள்.

உங்களுக்கு வந்ததா? அதுபோன்றுதான் இதுவும் (இலவச சிலிண்டர்கள்) வரும்..., ஆனால் வராது..., தி.மு.. தான் ஆட்சிக்கு வரபோகிறது. அப்புறம் எப்படி இவர்களால் கொடுக்க முடியும். வடிவேலு பட பாணியில் கனிமொழிவரும்.., ஆனா வராது..,’ என்று பேசியது தேர்தல் பிரச்சாரத்தில் கலகலப்பூட்டியது

No comments:

Post a Comment