தனியார் மயத்திற்கு எதிராக நாடாளுமன்ற முற்றுகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 20, 2021

தனியார் மயத்திற்கு எதிராக நாடாளுமன்ற முற்றுகை

  -வங்கி ஊழியர் கூட்டமைப்பு அறிவிப்பு-

 புதுடில்லி, பிப்.20 வங்கிகளை தனியார்மய மாக்கும் மோடி அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்ச் 10 ஆம் தேதி நாடாளுமன்றம் நோக்கி பேரணி செல்ல இருப்பதாக  அனைத்திந்திய வங்கி ஊழி யர்கள் கூட்டமைப்பினர் அறிவித்துள் ளனர்.

மோடி தலைமையிலான மத்தியஅரசு, வங்கிகள் உள்பட பொதுத்துறை நிறுவனங் களை தனியாருக்கு விற்பனை செய்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந் துள்ளது. சமீபத்தில்  நிதியமைச்சர் தாக்கல் செய்த பட்ஜெட்டிலும், இரு அரசு வங்கிகள் தனியார்மயமாக்கப்படும என்று அறிவிக் கப்பட்டது. அரசின் இந்த அறிவிப்புக்கு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இதையடுத்து, அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு ஆலோ சனை நடத்தியது. இந்த கூட்டத்தில்,  ஊழி யர்கள் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட ஏஅய்பிஇஏ, ஏஅய்பிஓசி, என்சிபிஇ, ஏஅய்பிஓஏ, பிஇஎப்அய், அய்என்பிஓசி, என்பிபிசி, என்ஓபிஓ ஆகிய சங்கங்களும் கலந்துகொண்டு, மத்தியஅரசின் நடவடிக் கைகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்தன. இதைத்தொடர்ந்து, அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சி.எச். வெங்கடாச்சலம் வெளியிட்ட அறிவிப்பில் போராட்டம் குறித்து அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘வங்கிகள் தனி யார் மயம் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி அனைத்து தலை நகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. அடுத்த 15 நாள்களுக்கு நாடு முழுவதும் இதுபோன்று போராட்டம் நடத்தப்படும்.

ஆனால், எங்கள் கோரிக்கைகள் ஏதும் நிறைவேற்றப்படாவிட்டால் மார்ச் 10- ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர் நடக்கும் போது, நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி நடத்தப்படும். மேலும் மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் தொடர்ந்து வங்கி வேலைநிறுத்தமும் செய்யப்படும்.ஆனால், மத்திய அரசு தொடர்ந்து அதன் நிலைப்பாட்டில் பிடி வாதமாக இருந்தால், போராட்டம் தீவிர மடைந்து, காலவரையற்ற போராட்டம் நடத்த வேண்டியது இருக்கும். மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

தனியார் வங்கிகளும் இன்று சீர் குலைந்து இருக்கின்றன. கடந்த ஆண்டு யெஸ் வங்கி, லட்சுமி விலாஸ் வங்கி சிக்கலில் இருந்தன. அய்சிசிஅய் வங்கியில் கூடபிரச்சினை இருக்கிறது. தனியார் துறை சிறப்பாகச் செயல்படுகிறது என்பதை ஏற்க முடியாது.

பொதுத்துறை வங்கிகள் மட்டுமே சாமா னியர்களுக்கும், ஏழைகளுக்கும், வேளாண்மைக்கும், சிறு, குறுந்தொழில் களுக்கும் கடன் வழங்குகின்றன. தனியார் வங்கிகள் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தான் உதவுகின்றன. பொதுத்துறை வங்கி கள் இளைஞர்களுக்கு நிரந்தரவேலை வாய்ப்பு தருகின்றன. தனியார் வங்கிகள் ஒப்பந்தப்பணி மட்டும் தருகின்றன. வேலையில் இட ஒதுக்கீடும், பட்டியலி னத்தவர்களுக்கு ஒதுக்கீடும் இல்லை.

ஆதலால், மக்களின் மிகப்பெரிய சேமிப்புத் தொகையைத் தனியாரின் கைகளில் சேருவதற்கு அனுமதிக்கமாட் டோம். தனியார்மயம் என்பது மோசமான சிந்தனை.பொதுத்துறை வங்கிகள் வலி மைப்படுத்தப்பட வேண்டும். மக்களின் நலனே நாட்டின் நலன்!

 இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

No comments:

Post a Comment