குஜராத் மாநிலத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் பெரிய மைதானமான ‘சர்தார் பட்டேல் ஸ்டேடியம்’ பெயரை ‘நரேந்திர மோடி மைதானம்’ என பெயர் மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மோடி
தலைமையிலான பாஜக அரசு, இந்தியாவின் இரும்பு மனிதரான வல்லபாய் பட்டேலை அவமதிக்கும்
நோக்கில், பெயரை மாற்றியிருப்பதாக எதிர்க்கட்சிகளும், சமூக ஆர்வலர் களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்துத்துவா
அமைப்பான ஆர்எஸ்எஸின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் மோடி அரசு, ஆர்எஸ்எஸ் தலைவர்களை மகிழ்விக்கும் வகையில், 1948ஆம் ஆண்டு ஆர்எஸ்எஸ் அமைப் புக்கு தடைவிதித்த, அப்போதைய அமைச்சர் வல்லபாய் பட் டேலை அவமதிக்கும் வகையில், இந்த செயலை செய்துள்ளதாக விமர்சிக்கப்படுகிறது.
குஜராத்
மாநிலம் அகமதாபாத்தில் உள்ள மோட்டேரா மைதானத்தில், ஏற்கெனவே இருந்த ஸ்டேடியத்தை இடித்துவிட்டு அதிநவீன முறையில் உலகின் மிகப் பெரிய மைதானம்
4 ஆண்டுகளாக கட்டப்பட்டு, கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் திறக்கப்பட்டது. இதன்
திறப்பு நிகழ்ச்சியில், அமெரிக்க
அதிபர் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்த
மைதானம் உலகின் மிகப்பெரிய மைதானம் என்பதுடன், பகலிரவு
போட்டிகளின்போது 4 திசைகளில் இருந்தும் மின்னொளி பரவும் வகையில் அமைக்கப்பட்டது. அத்துடன், மழைநீர் வடிகால் வசதி உடன்,
தரமான குடிநீர் வசதியும், மின்சாரத்தைச் சிக்கனமாக பயன்படுத்தும் வசதியும்
ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ரூ.800
கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த ஸ்டேடியத்தில் 1,10,000 ரசிகர்கள் அமரலாம். மேலும், 70 கார்ப்பரேட் பாக்ஸ், நான்கு உடை மாற்றும் அறைகள், ஒரு கிளப் ஹவுஸ் மற்றும் நீச்சல் குளம் உள்ளிட்ட பல நவீன வசதிகள்
உள்ளன. அத்துடன் உள்ளரங்க
பயிற்சி ஆடுகளங்கள், நவீன ஊடக அரங்கம், 3000 கார்கள், 10 ஆயிரம் இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடம், மெட்ரோ ரயில் இணைப்பு, 2 சிறிய கிரிக்கெட் மைதானம், இதர விளையாட்டு மைதானங்களும் அமைந்துள்ளன.
இந்த
மைதானத்தின் திறப்பு விழாவின்போது, சர்தார்
வல்ல பாய் பட்டேல் என பெயரிடப்பட்டது. ஏற்கெனவே
குஜராத்தின் சபர்மதி ஆற்றின் மத்தியில் வல்லபாய் பட்டேலுக்கு உலகிலேயே உயரமான சிலை அமைக்கப்பட்ட நிலையில், இந்த மைதானமும் குஜராத் மாநிலத்தின் பெயர் சொல்லும் ஒன்றாகப் பேசப்பட்டது.
இந்த
நிலையில், தற்போது, சர்தார்
வல்லபாய் பட்டேல் பெயர் மாற்றப்பட்டுள்ளது. குடியரசுத்தலைவர்
ராம்நாத் கோவிந்த் இதனை அறிவித்துள்ளார்.
இந்த
நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்வ்ரத், விளையாட்டு அமைச்சர் கிரேன் ரிஜிஜு, பிசிசிஅய் செயலாளர் ஜெய் ஷா ஆகியோரும் கலந்து
கொண்டனர். கடந்த 2020ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா
வந்தபோது, அவருக்கு 'நமஸ்தே டிரம்ப்' என்ற பெயரில் பிரமாண்டமான வரவேற்பு, குஜராத் மாநிலம் அகமதா பாத்தில் கட்டப்பட்டுள்ள உலகின் மிகப் பெரிய சர்தார் பட்டேல் கிரிக்கெட் மைதானத்தில் கொடுக்கப்பட்டது. இந்த மைதானத்தில் 1.60 லட்சம்
பேர் கலந்துகொண்டதாக கூறப்பட்டது.
நாட்டின் தேசத்தந்தை என போற்றப்படும்
காந்தியார் 1948 ஜனவரி
30ஆம் தேதி பிர்லா பவனில் நடைபெறவிருந்த பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகசென்றபோது, நாதுராம் கோட்சே என்ற ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரால் துப்பாக்கி யால் சுடப்பட்டு இறந்தார். இதையடுத்து, ஆர்.எஸ்.எஸ். இயக் கத்தை தடை செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
அப் போது சுதந்திர இந்தியாவின் முதல் துணைப் பிரதம அமைச் சராகவும் உள்துறை அமைச்சராகவும் பணியாற்றியவர் சர்தார் வல்லபாய் பட்டேல்.
ஆர்.எஸ்.எஸ். இயக்க நபரால் காந்தி கொலை செய்யப்பட்டதால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அப்போதைய தலைவர் எம்.எஸ்.கோல்வால்கரை கைது செய்ய உத்தரவிட்ட பட்டேல், தொடர்ந்து, 1948-ஆம்
ஆண்டு, பிப்.4-இல் ஆர்.எஸ்.எஸ். (ராஷ்ட் ரீய ஸ்வயம் சேவக்) இயக்கத்தை தடை செய்ய உத்தரவிட்டார்.
இதற்கு
எதிர்ப்பு தெரிவித்து
நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதை ஒடுக்கி நாட்டில் அமைதியை ஏற்படுத்தியவர் வல்லபாய்
பட்டேல். இவர்
தொடக்க காலத்தில் ஆர்.எஸ்.எஸ்.சுக்கு ஆதரவாகவே செயல் பட்டுவந்த நிகழ்வுகளும் உண்டு. காந்தியார்
கொலை செய்யப் படுவதற்கு முன்னர் லக்னோவில் பேசிய பட்டேல், தேசபக்தி கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நசுக்கும் வகையில் ஆட்சி யில் இருக்கும் காங்கிரசார் நடந்து கொள்ளக்கூடாது என எச்சரித் திருந்தார்.
ஆனால்
காந்தியார் படுகொலைக்கு பிறகு, ஆர்எஸ்எஸ் அமைப்புக்குத் தடை விதித்ததுடன், இதுதொடர்பான
கோரிக்கை களை புறந்தள்ளி, ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை விலக்க முடியாது என கூறியதுடன்,
ஆர்எஸ்எஸ் தலைவர் கோல்வால்கரை
சந்திக்க மறுத்து
நாக்பூருக்கே திரும்பிச் செல்லுமாறு கூறினார். இதனால் கோபமடைந்த ஆர்.எஸ்.எஸ். பட்டேல் மீது வன்மம் கொண்டது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். அமைப்பில் சில அடிப்படை வேற்றுமைகள் இருப்பதாகக் கூறி தடையை விலக்க உள்துறை மறுப்பு தெரிவித்தது.
தற்போது
குஜராத்தில் அமைக்கப்பட்டு, திறக்கப்பட்ட உலகின் பெரிய ஸ்டேடியமான சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தை, ஆர்எஸ்எஸ் அமைப்பின் விருப்பத்திற்கு ஏற்ப பெயரை மாற்றி உள்ளதாகவும், நரேந்திர மோடி ஸ்டேடியம் என பெயர் மாற்றம்
செய்யப்பட்டு உள்ளதாகவும் விமர்சிக்கப்படுகிறது. உலகில் மிகப் பெரிய பட்டேல் சிலையை குஜராத்தில் திறந்தது எல்லாம் காந்தியார் புகழை மறைக்கும் வஞ்சக செயலே! பிரதமர் மோடி விளம்பரத்தை விரும்பாதவர் - நம்ப முடிகிறதா?
No comments:
Post a Comment