காங்கிரஸ் அணிக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை ஏற்க பேரவைத் தலைவர் மறுப்பு! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அமைச்சரவை பதவி விலகல்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 22, 2021

காங்கிரஸ் அணிக்கு பெரும்பான்மை உள்ளது என்பதை ஏற்க பேரவைத் தலைவர் மறுப்பு! புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி அமைச்சரவை பதவி விலகல்!

 புதுச்சேரி, பிப். 22  எங்களுக்குப் பெரும்பான்மை உள்ளது என்பதை நாங்கள் கூறியும் பெரும்பான்மையை அவைத் தலைவர் ஏற்கவில்லை. ஆகவே, நாங்கள் அவையில் இருந்து வெளியேறுகிறாம் என்றார் புதுவை முதலமைச்சர்.

புதுச்சேரி சட்டசபையில் அரசு மீதான நம்பிக்கை கோரும் தீர்மானம் மீது இன்று (22.2.2021) முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:-

மிகுந்த நெருக்கடிக்கு மத்தி யில் மக்களின் நலனுக்காக ஆட்சி செய்தேன். எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் மக் களுக்காக இரவு, பகல் பாரா மல் போராடினோம். கடந்த ஆட்சி செய்யத் தவறிய திட் டங்களை நாங்கள் நிறைவேற்றி னோம். கரோனா காலத்தில் புதுச்சேரி அரசு ஊழியர் களுக்கு முழு சம்பளம் வழங் கப்பட்டது. மக்களுக்காகத் தொடர்ந்து பல நல திட்டங் களை செயல்படுத்தி வரு கிறோம். புதுச்சேரி மாநில மக்கள் காங்கிரஸ் ஆட்சி மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள்.

ஆனால், மக்களால் புறக் கணிக்கப்பட்டவர்கள் ஒன்றி ணைந்து ஆட்சியை கவிழ்க்க முயன்றார்கள். முன்னாள் ஆளுநர் கிரண் பேடியும், மத் திய அரசும் எதிர்க்கட்சிகளு டன் இணைந்து ஆட்சியை கவிழ்க்க முயன்றனர். நான்கு ஆண்டுகளாக எங்களை எதிர் கொள்ள முடியாத எதிர்க்கட்சி கள் இப்போது  ஆட்சிக் கவிழ்ப்பு அஸ்திரத்தை' எடுத் துள்ளார்கள். புதுச்சேரியை மத்திய பாஜக அரசு வஞ்சித்துள்ளது உறுதியாகிவிட்டது. பல மாநிலங்களுக்கு 41 சதவீத வரி கொடுத்தார்கள். ஆனால், புதுச்சேரிக்கு 21 சதவீத வரி மட்டுமே கொடுத்தார்கள். சட்டமன்றம் உள்ள புதுச்சேரி யும் டில்லியும் நிதி ஆணை யத்தில் சேர்க்கப்படாமல் புறக் கணிக்கப்பட்டுள்ளன.

மத்திய அரசு இந்தியை திணிக்க முயன்றது. நாங்கள் இருமொழிக் கொள்கையை கடைப்பிடிக்கிறோம். இலவச அரிசி உள்ளிட்ட அனைத்து திட்டங்களையும் மத்திய அரசு தடுத்தது. நாங்கள் கேட்ட நிதியை மத்திய அரசு தரவில்லை. இது துரோகம் இல்லையா? மத்திய அரசு செய்யும் துரோகத்தை எதிர்க் கட்சிகள் ஆதரித்தால், அது அவர்களைப் பாதிக்கும், என்றார் அவர்.

ஆளுங்கட்சி புறக்கணிப்பு

நியமன சட்டமன்ற உறுப் பினர்கள் மூன்று பேரும் வாக்களிக்க அனுமதிக்கப்படு வர்  என்று பேரவைத் தலைவர் அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து முதல்வர் நாரா யணசாமி கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கோரும் தீர்மானம் மீது வாக்களிக்காமல் ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் வெளியேறினர். இதனால், முதல்வர் கொண்டு வந்த நம் பிக்கை வாக்கெடுப்புக் கோரும் தீர்மானம் தோல்வியடைந்த தாக பேரவைத் தலைவர் சிவக் கொழுந்து அறிவித்தார். நம் பிக்கை வாக்கெடுப்பு தோல்வி யடைந்ததை அடுத்து, முதல் வர் நாராயணசாமி உள்ளிட்ட அமைச்சர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.  இதனை அடுத்து பெரும் பான்மை உள்ளது என்பதை நாங்கள் கூறியும் அவைத்தலை வர் சிவக்கொழுந்து ஏற்க வில்லை. ஆகையால் நாங்கள் அவையில் இருந்து வெளியேறி, எங்கள் பதவி விலகல் கடி தத்தை துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கொடுத்தோம் என்று புதுவை மாநில முதல்வர் நாராயண சாமி கூறியுள்ளார்.

No comments:

Post a Comment