தஞ்சை, பிப். 24-- தஞ்சை காவேரி அன்னை கலைமன்ற நிறுவனத் தலைவரும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்க ளால் பெரியார் விருது பெற்ற பெரியார்பற்றாளருமாகிய நாடகவேள் தஞ்சை மா.வீ. முத்து அவர்களுக்கு சிறந்த நாடக நடிகருக்கான தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் சார்பில் 2019ஆம் ஆண்டுக்கான "கலை மாமணி" விருதினை 20.2.2021 அன்று சென்னையில் நடை பெற்ற விழாவில் தமிழக முதல் அமைச்சர் வழங்கி சிறப்பித்தார்.
21.2.2021 அன்று காலை 10 மணியளவில் கழகப் பொதுச் செயலாளர்இரா.ஜெயக் குமார், தஞ்சை மாவட்டத் தலைவர் சி.அமர்சிங், மாநில ப.க. தலைவர் மா.அழகிரிசாமி, மண்டல மகளிரணி செயலா ளர் அ.கலைச்செல்வி, தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்தி ரன், மாநகர துணைத்தலைவர் ப.தேசிங்கு, மாநகர செயலா ளர் சு.முருகேசன், மாவட்ட துணைச் செயலாளர் ச.சந் துரு, மாவட்ட தொழிலா ளரணி அமைப்பாளர் செ. ஏகாம்பரம், அ.சாக்கரட்டீஸ் ஆகியோர் அவரது இல்லத் திற்கு சென்று திராவிடர் கழகத்தின் சார்பில் மாலை, பயனாடை அணிவித்து வாழ்த் துகளை தெரிவித்தனர். தொடர்புக்கு: 9994649864.
No comments:
Post a Comment