வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு போராட்டம்: ஆளுநர் மாளிகை முற்றுகை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 24, 2021

வேளாண் சட்டங்களை திரும்பப் பெறுமாறு போராட்டம்: ஆளுநர் மாளிகை முற்றுகை

சென்னை, ஜன. 24- அகில இந் திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு, சிஅய்டி யு, தொமுச, எச்எம்எஸ் உள் ளிட்ட  தொழிற்சங்கங்கள், மக்கள் அதிகாரம் போன்ற அமைப்புகளின் சார்பாக,  டில்லியில் போராடும் விவ சாயிகளுக்கு ஆதரவாக 3 வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க கோரியும் நேற்று (23.1.2021) காலை சென்னை சைதாப்பேட்டை சின்ன மலையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய விவசாயிகள்  போராட்ட குழுவின் தமிழ் நாடு  ஒருங்கிணைப்பாளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். சிஅய்டியுவை சேர்ந்த .சவுந்தர்ராஜன், தொமுச பொருளாளர் நடராஜன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.

கே.பாலகிருஷ்னண் பேசு கையில் ‘‘26ஆம் தேதி நடை பெறும் குடியரசு தினத்தன்று லட்சத்துக்கும் மேற்பட்ட டிராக்டர்கள் மூலம் 10 லட் சம் விவசாயிகள் டில்லியில் நுழைய உள்ளனர். தமிழகத் தில் குடியரசு நாளன்று அனைத்து மாவட்டங்களி லும் டிராக்டர், மாட்டு வண்டி, பைக் பேரணி போன் றவை அம்பானி, அதானிக்கு எதிராக நடத்தப்படும்’’ என் றார்.

தொமுச பொருளாளர் நடராஜன் பேசும்போது, ‘‘தொழிற்சங்கங்கள் அனைத் தும் வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் முழுமை யாக கலந்துகொள்கிறது’’ என்றார். சிஅய்டி சவுந்ததர ராஜன் பேசும்போது  ‘‘வரும் 26ஆம் தேதி விவசாயத்துக்கு ஆதரவாக தேசியக் கொடியை ஏற்றிவிட்டு, விவசாயிகளுக்கு ஆதரவாக, 3 வேளாண் சட் டங்களை ரத்து செய்யும் வரை  தொடர்ந்து போராட் டம் நடத்துவோம்’’ என்றார்.

பின்னர் ஆளுநர் மாளிகை முற்றுகைப்போராட்டத்தில் மக்கள் அதிகாரம் அமைப்பி னர் தப்பு அடித்தும், பாட்டு பாடியபடியும் கலந்து கொண் டனர். ஊர்வலமாக புறப் பட்ட  போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய் யப்பட்டவர்கள் நேற்று மாலை விடுவிக்கப்பட்டனர்.

No comments:

Post a Comment