விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11ஆம் கட்ட பேச்சும் தோல்வி திட்டமிட்டபடி குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி என அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 24, 2021

விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய 11ஆம் கட்ட பேச்சும் தோல்வி திட்டமிட்டபடி குடியரசு தினத்தில் டிராக்டர் பேரணி என அறிவிப்பு

புதுடில்லி, ஜன. 24- வேளாண் சட்டங்கள் தொடர்பாக விவ சாய சங்கங்களுடன் மத்திய அரசு 22.1.2021 அன்று நடத் திய 11ஆம் கட்ட பேச்சுவார்த் தையும் தோல்வி அடைந்தது. இதனால், திட்டமிட்டபடி குடி யரசு தினத்தன்று டில்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும்  என்று விவசாய சங்கங்கள் திட் டவட்டமாக தெரிவித்துள்ளன.

11ஆவது கட்ட பேச்சு வார்த்தை நேற்று மதியம் ஒரு மணிக்கு டில்லி விக்யான் பவனில் தொடங்கியது. இதில். மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர், ரயில்வே  அமைச்சர் பியூஷ் கோயல், இணையமைச் சர் சோம் பர்காஷ், 41 விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

பேச்சுவார்த்தையின் ஆரம்பத்திலேயே சட்டங் களை ரத்து செய்ய வேண்டும் என்று விவசாயப் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.  ஆனால், இதற்கு முந்தைய பேச்சு வார்த்தைகளுக்கு மாறாக இந்த முறை கடுமையாக்கி இருந்தது. இதனால், எந்த வொரு  முடிவும் எட்டப்படா மல் பேச்சுவார்த்தை தோல்வி யில் முடிந்தது. இதைத் தொடர்ந்து, வேளாண் அமைச்சர் தோமர் அளித்த பேட்டியில், “சட்டங்கள் முழு மையாக ரத்து செய்யப்பட வேண்டும் என்று விவசாயி கள் பிடிவாதமாகக் கூறினார் கள். இதனால் 11ஆம் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும்  எட்டப்படவில்லை.   வேளாண் சட்டங்களை தற்காலிகமாக ஒத்திவைக்கும் அரசின் முடிவு குறித்து பிரதிநிதிகள் ஒன்று கூடி ஆலோ சித்து முடிவெடுத்த பின்னர், அரசுக்கு தெரிவித்தால் மட் டுமே மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தப்படும். இதற்காக அவர்களுக்கு நாளை  (இன்று) ஒருநாள் அவகாசம் அளிக்கப்படுகிறது.  நாளைக்குள் முடிவெடுத்து தெரிவித்தால் மட்டுமே, அடுத்த கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்படும். விவசாயிகள் விரைவில் அரசின் முடிவை ஏற்று கொள்வார்கள் என நம்புகிறோம். விவசாயிகளின்  இறுதி முடிவுக்காக நாளை (இன்று) வரை அரசு காத்தி ருக்கும்,” என்றார்.

பேச்சுவார்த்தை தொடங் குவதற்கு முன், அமைச்சர்கள் எங்களை மூன்றரை மணி நேரம் காத்திருக்க வைத்து விட்டனர். இது எங்களுக்கு நேர்ந்த அவமானம். அரசின் கோரிக்கையை மீண்டும் பரி சீலிக்கும்படி  மட்டுமே அவர் கள் கேட்டு கொண்டனர். அத்துடன் பேச்சுவார்த் தையை முடித்து விட்டனர்என்று கிசான் மஸ்தூர் சங்க தலைவர் பந்தர் தெரிவித்தார்.

பாரதிய கிசான் சங்க செய்தி தொடர்பாளர் ராகேஷ் திகாய்ட் கூறுகையில், “வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற எங்களின் நிலைப்பாட்டை தெளிவாக எடுத்து கூறிய பின்பும், அமைச்சர்கள் அர சின் தற்காலிக ஒத்திவைப்பு  முடிவை மீண்டும் பரிசீலிக் கும்படி  கேட்டுக் கொண்ட னர். இதில் எந்த முடிவும் எட் டப்படாததால், திட்டமிட்ட படி, குடியரசு தினத்தன்று டில்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும்,” என்றார்.

No comments:

Post a Comment