இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து உங்களையும், நாட்டையும் காப்பாற்றிட இதுவே தக்க தருணம்! திண்டுக்கல்லில் தமிழர் தலைவர் சங்கநாதம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 6, 2024

இந்தியா கூட்டணிக்கு வாக்களித்து உங்களையும், நாட்டையும் காப்பாற்றிட இதுவே தக்க தருணம்! திண்டுக்கல்லில் தமிழர் தலைவர் சங்கநாதம்!

featured image
* ‘திராவிட மாடல்’ ஆட்சி உலகத்திற்கே எடுத்துக்காட்டு! 
* மாணவர்களுக்குக் காலைச் சிற்றுண்டியை கனடாவே பின்பற்றுகிறது! 
* விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்ட தொகையைக்கூட செலவழிக்காமல் 
  துரோகம் செய்யும் ஒன்றிய பி.ஜே.பி. ஆட்சி! 
* காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை இளைஞர்களே, கவனியுங்கள் – 
  உங்கள் வேலை வாய்ப்புக்கு உத்தரவாதம்!
* மீண்டும் மனுதர்மமா? மக்களாட்சி மலரவேண்டாமா?
திண்டுக்கல், ஏப்.6    ஊழல் ஆட்சி, விவசாயிகளை வஞ்சிக்கும் ஆட்சி, இளைஞர்களின் வேலை வாய்ப் பைப் பறிக்கும் ஆட்சி, அரசமைப்புச் சட்டத்தைத் தகர்க்கும் ஆட்சிதான் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி! இதனை வீழ்த்தி ஜனநாயகம் காப்பாற் றப்பட – மக்கள் நலம் மேலோங்க இந்தியா கூட்டணிக்கே வாக்களித்து வெற்றி பெறச் செய்வீர் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தத்தை ஆதரித்து திண்டுக்கல்லில் தமிழர் தலைவர் பிரச்சாரம்
நேற்று (5.4.2024) மாலை 7 மணியளவில் திண்டுக்கல் நாடாளுமன்றத் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் ஆர்.சச்சிதானந்தம் அவர்களை  ஆதரித்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரை வருமாறு:
கவனச் சிதைவு இல்லாமல்….
தமிழ்நாட்டில் திண்டுக்கல் தொகுதிக்கு, இந்தியாவிற்கு வருகின்ற 19 ஆம் தேதியன்று நடைபெறவிருக்கக் கூடிய 18 ஆவது மிக முக்கியமான பொதுத் தேர்தலில் நம்முடைய வாக்காளர்கள் கவனச் சிதைவு இல்லாமல் தங்களுடைய கடமையை ஆற்றவேண்டும் – வாக் களிக்கவேண்டும். நமது வெற்றி வேட்பாளருக்காகவோ  அல்லது மேடையில் அமர்ந்திருக்கின்ற எங்களுக் காகவோ வாக்களிக்கவேண்டிய அவசியமில்லை.
எவ்வளவு அடக்குமுறைகள் வந்தாலும் – அதனை ஏற்பதற்குத் தயாராக இருக்கிறோம்!
இந்தக் கூட்டணியின் கொள்கைக்காக, அதேநேரத் தில், இந்தியாவைப் பாதுகாக்க – எங்களைப் பாதுகாக்க அல்ல – உங்களைப் பாதுகாக்க; அதனால் எவ்வளவு துயரங்கள், எவ்வளவு தொல்லைகள், எவ்வளவு அடக்குமுறைகள் வந்தாலும், அதனை ஏற்பதற்குத் தயாராக இருக்கின்றவர்கள்தான் இந்த மேடையில் இருக்கின்ற எங்களுடைய கூட்டணி கட்சிகளின் தோழர்கள்.
ஆகவே, அவர்களைப்பற்றி கவலையில்லை. ஆனால், இந்த நாட்டில் இருக்கின்ற கோடான கோடி மக்கள், ஏழை, எளியவர்கள், ஒடுக்கப்பட்ட சமுதாயத் தைச் சார்ந்தவர்கள், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஏழைகளாக இருக்கக்கூடிய சமுதாயத்தைச் சேர்ந்த வர்கள், 50 சதவிகிதமாக இருக்கக்கூடிய நம்முடைய மகளிர் தோழர்கள் – இப்படி எல்லா வகையிலும் இருக்கும் மக்கள் கடந்த 10 ஆண்டுகாலத்தில் மிகப் பெரிய அவதிக்குள்ளாகி இருக்கிறார்கள்.
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை வீட்டிற்கனுப்ப நல்ல வாய்ப்புதான் – சட்டப்பூர்வமான வாய்ப்புதான்!
சுதந்திரக் காற்றை சுவாசிக்க முடியாமல், மூச்சுவிட முடியாமல் ஒன்றிய ஆட்சியின் கொடுமையால் திணறிக் கொண்டிருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களை வீட் டிற்கு அனுப்பவேண்டும். அதற்குரிய நல்ல வாய்ப்புதான் – சட்டப்பூர்வமான வாய்ப்புதான் இந்தத் தேர்தல் முறை.
ஆகவேதான், இந்தத் தேர்தலில் உங்களுடைய கடமையை நினைவூட்டுவதற்காக நாங்கள் இங்கே வந்து உங்களுக்குச் சொல்கிறோம். வெப்பம் அதிகமாக இருக்கிறது – அந்த வெப்பத்தையும் பொருட்படுத்தாமல் இங்கே வந்திருக்கிறீர்கள். காரணம் என்னவென்றால், மோடி ஆட்சியினுடைய வெப்பம் இதைவிடக் கொடு மையானது; ஆகவே, அதனை வெளியேற்றிவிட் டோமேயானால், இந்த வெப்பம் நமக்கு சாதாரணமானது என்று சொல்லக்கூடிய அளவிற்கு அந்த உணர்வோடு அமர்ந்திருக்கின்றீர்கள்; அதற்கு உங்களுக்கு நன்றி!
நம்முடைய மாண்புமிகு அமைச்சர் அவர்கள் சுருக்க மாக, ஆனால், அழகாக, தெளிவாக விளக்கிச் சொன்னார்.
காஷ்மீர்முதல் கன்னியாகுமரி வரையில் வந்திருக்கக் கூடிய  இந்தியா கூட்டணி!
நம்முடைய கூட்டணிக்கு வழிவகுத்த, இந்தியா கூட்டணிக்கு வழிவகுத்த நம்முடைய ஆற்றல்மிகு திராவிட மாடல் ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சராக இருக்கின்ற முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் மிகத் தெளிவாக தமிழ்நாட்டில் பெறுகின்ற வெற்றிகள் மட்டும் போதாது; இந்தியா முழுவதும் இந்தத் தேர் தலின்மூலமாக ஒரு பெரிய வெற்றியை அடைய வேண்டும் என்பது எங்களுக்காக அல்ல – உங்களுக்காக. உங்களுக்காக என்று சொல்லும்பொழுது, மக்களுக்காக – எளிய மக்களுக்காக என்பதை வலியுறுத்துவதற் காகத்தான் இந்தியா கூட்டணி – காஷ்மீர்முதல் கன்னியாகுமரி வரையில் வந்திருக்கக் கூடிய கூட்டணி.
இந்தக் கூட்டணியினுடைய பரப்புரைதான் இந்த மேடை. இந்தப் பரப்புரைக் கூட்டத்திற்குத் தலைமை யேற்று இருக்கக் கூடிய மாவட்டக் கழகத் தலைவர் அருமைத் தோழர் அன்பில் முரளிராஜ் அவர்களே,
தலைமைக் கழகத்தின் சார்பில் வரவேற்புரையாற்றி அமர்ந்திருக்கின்ற தோழர் வீரபாண்டியன் அவர்களே,
பி.ஜே.பி.க்குச் சவாலாக 
திகழ்ந்து வருகின்ற அய்.பெரியசாமி!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், தான் எடுத்தக் காரியத்தில் எவ்வளவு சங்கடங்கள் வந்தாலும் எதிர்த்து நின்று வெற்றி பெறக் கூடியவர் – கொஞ்சம்கூட அசராமல் நான் உங்களைப் பார்க்கிறேன், களத்தில் சந்திக்கிறேன் என்று பி.ஜே.பி.க்கு சவாலாக திகழ்ந்து வருகின்ற நம்முடைய அய்.பி. அவர்களே,
இந்நிகழ்வில் கலந்துகொண்டிருக்கக்கூடிய தீக்கதிர் ஆசிரியர் அருமைத் தோழர் மதுக்கூர் இராமலிங்கம் அவர்களே,
அனைத்துக் கட்சி பொறுப்பாளர்களே, தோழர்களே, சான்றோர்களே, பெரியோர்களே, சகோதர சகோதரிகளே, கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்முடைய இந்தியா கூட்டணியின் வெற்றி வேட் பாளராக நிறுத்தப்பட்டு இருக்கக்கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அருமைத் தோழர் ஆர்.சச்சி தானந்தம் அவர்களுடைய சின்னமான அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்திற்கு வாக்களிக்கவேண்டும் என்பதற்காக நாம் இங்கே கூடியிருக்கின்றோம்.
இரண்டு பொதுத் தேர்தல்கள் 
மிக முக்கியமானவை!
இந்தியாவிலே இதுவரை 17 பொதுத் தேர்தல்கள் நடந்திருக்கின்றன. இந்த 18 பொதுத் தேர்தல்களில், எல்லாத் தேர்தல்களுமே முக்கியத்துவம் வாய்ந்தவை தான். ஆனால், இரண்டு பொதுத் தேர்தல்கள் மிக முக்கியமானவையாகும்.
நெருக்கடி காலத்தில் எங்களைப் போன்றவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்றவர்களும், பலரும் சிறைச்சாலையில் இருந்து வெளியே வந்த பிறகு, பிரதமர் இந்திரா காந்தி அம்மையார் தேர்தலை அறிவித்து, நடத்தினார்.
எதிர்க்கட்சித் தலைவர்கள் எல்லாம் சிறைச்சாலையில் இருந்து அப்பொழுதுதான் வெளியே வந்தார்கள். ஆனால், தேர்தல் சுதந்திரமாக நடந்தது.
அன்றைக்கு நெருக்கடி காலமாக இருந்தாலும்கூட, அன்றைக்கும், இன்றைக்கு உள்ள மோடி ராஜ்ஜியத் திற்கும் வேறுபாடு என்னவென்று சொன்னால், அன் றைக்கு, அறிவு நாணயத்தோடு அறிவித்து, அவர்கள் அதைப் பதிவு செய்தார்கள்.
கடந்த 10 ஆண்டுகாலமாக நடக்கிறது. மாநில உரிமைகள் அத்தனையும் நசுக்கப்பட்டு இருக்கின்றன!
ஆனால், இன்றைக்கு அறிவிக்கப்படாத நெருக்கடி. அதுமட்டுமல்ல, எல்லாவித அமைப்புகளும் அவர்களு டைய காலடியில் இருக்கவேண்டும் என்று கருதிக் கொண்டிருக்கின்ற ஆட்சி கடந்த 10 ஆண்டுகாலமாக நடக்கிறது. மாநில உரிமைகள் அத்தனையும் நசுக்கப்பட்டு இருக்கின்றன. ஜனநாயகம் இப்பொழுது கொஞ்சம் கொஞ்சமாக தீவிரச் சிகிச்சைப் பிரிவிற்குப் போய், அங்கே சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருக்கின்றது. மீண்டும் பிழைக்குமா? என்று சொல்லக்கூடிய அளவி லேதான் அது இருக்கிறது. அவற்றைக் காப்பாற்றுவதற்காக இருக்கக்கூடிய டாக்டர்கள்தான் நீங்கள்.
வாக்காளர்களே, உங்கள் கைகளில் 
வாக்குச் சீட்டு என்னும் மருந்து!
நீங்கள் அத்துணைப் பேரும் அங்கே செல்ல முடி யாது என்பதால், ஒருவரிடம் அந்தப் பொறுப்பைக் கொடுக்கிறீர்கள். நமக்குத்தான் மருத்துவம் தெரியாது என்று நினைக்கலாம்; ஆனால், உங்கள் கைகளில் மருந்து இருக்கிறது. என்ன மருந்து என்றால், வாக்குச் சீட்டு என்னும் மருந்து.
நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் என்னவென்றால், அமைச்சர் அவர்கள் சொன்னதைபோல, 19 ஆம் தேதியன்று வாக்குச் சாவடிக்குச் சென்று அரிவாள் சுத்தியல் நட்சத்திர சின்னம் எங்கே இருக்கின்றது என்று பார்த்து, அந்தப் பொத்தானை அழுத்தவேண்டும். அந்தப் பொத்தானை அழுத்திக்கொண்டே இருங்கள், பச்சை விளக்கு எரிகின்ற வரையில் அழுத்திக் கொண்டு இருங்கள். அங்கே விளக்கெரிந்தால், இந்த நாட்டில் விளக்கெரியும். இருட்டு விலகும் – வெளிச்சம் தெரியும் – புது வாழ்க்கை வரும் – ஜனநாயகம் காப்பாற்றப்படும். அதற்குரிய மருத்துவராகத்தான் எங்கள் தளபதி இருக் கிறார்கள்.
காலைச் சிற்றுண்டித் திட்டம் இந்தியாவில் 
வேறு எங்கேயாவது உண்டா?
இங்கே இருக்கின்ற தாய்மார்கள் மகிழ்ச்சியோடு அமர்ந்திருக்கின்றீர்கள். காரணம் என்ன? நாளைக்குக் காலையில் பிள்ளைகளைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்ப வேண்டுமே, சிற்றுண்டி செய்யவேண்டுமே என்கிற கவலையில்லாமல் இருக்கிறார்கள். அந்தக் கவலை அரசாங்கத்திற்குரியது – எனவே, நம்முடைய பிள்ளை கள் பள்ளிக்கூடத்திற்குச் சென்றால், காலைச் சிற்றுண்டி தயாராக இருக்கும்; அதனைச் சாப்பிட்டுவிட்டு, நம்மு டைய பிள்ளைகள் சிறப்பாக படிக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.
இந்தக் காலைச் சிற்றுண்டித் திட்டம், இதுவரையில் இந்தியாவில் வேறு எங்கேயாவது உண்டா?
மதிப்பிற்குரிய பிரதமர் மோடி அவர்களே, டபுள் இன்ஜின், டபுள் இன்ஜின் என்று, குஜராத் மாடல், குஜராத் மாடல் ஆட்சி என்று சொல்வீர்களே, அந்த ஆட்சியில் இருக்கிறதா? அல்லது  உத்தரப்பிரதேசத்தில் இந்தத் திட்டம் இருக்கிறதா?
தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் மாணவர்களின் சேர்க்கை அதிகமாகி இருக்கிறது. அதனை செய்த ஆட்சிதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி.
இந்தத் ‘திராவிட மாடல்’ ஆட்சி இந்தியா முழுவதும் ஏற்படவேண்டும் என்பதற்காகத்தான் இந்தியா கூட்டணி.
தமிழ்நாட்டைப் பார்த்து பல மாநிலங்கள் பின்பற்று கின்றன. இதைவிட நமக்கு என்ன பெருமை வேண்டும்?
‘திராவிட மாடல்’ ஆட்சியில், மகளிருக்கு ஆயிரம் ரூபாய் மாதம் தவறாமல் வருகிறது. இந்தத் திட்டத்தைக் கொச்சைப்படுத்தும் விதமாக அதை பிச்சைக்காசு என்றெல்லாம் பா.ஜ.க.வினர் பேசுகின்றனர்.
சுயமரியாதையை உலகுக்குச் சொல்லிக் கொடுக்கின்ற இயக்கம் திராவிடர் இயக்கம்!
‘‘சுயமரியாதை இயக்கத்திலிருந்து வந்த இயக்கம் எங்களுடைய இயக்கம். சுயமரியாதையை உலகுக்குச் சொல்லிக் கொடுக்கின்ற இயக்கம் திராவிடர் இயக்கம் – திராவிட முன்னேற்றக் கழகம்” என்று காட்டுவதற் காகத்தான், நம்முடைய முதலமைச்சர் சிறிய சிறிய செயல்களில்கூட எவ்வளவு கவனமாக இருக்கிறார்கள் என்பதற்கு அடையாளம் – இதை யாரும் சலுகை என்று சொல்லிவிடக் கூடாது; கொடுக்கின்ற அரசு அதிகாரி களுக்குக்கூட ஏதோ அரசாங்கம் பிச்சைக் கொடுக்கிறார் கள் என்று  நினைத்துவிடக் கூடாது என்பதற்காகத்தான் அந்தத் திட்டத்திற்கு என்ன பெயர் வைத்திருக்கின்றார் தெரியுமா? ‘‘மகளிர் உரிமைத் தொகை” என்று. அதனை உரிமையாக நீங்கள் கருதித்தான், கொடுப்பதை அவர்கள் கடமையாகக் கருதுகிறார்கள் என்றாலும், வாங்குவது உங்களுடைய சலுகையல்ல, பிச்சையல்ல – உங்கள் உரிமை. ‘‘எங்கள் உரிமைக்காக அதனை நாங்கள் பெறுகிறோம்” என்று சுயமரியாதையோடு அதனைப் பெறக்கூடிய வாய்ப்பைப் பெற்றிருக்கிறீர்கள்.
எந்த ஆட்சிக்கு இந்த சிந்தனை உள்ளது? அதே நேரத்தில், எல்லோராலும் பாராட்டப்படக் கூடிய அளவிற்கு இத்திட்டம் இருக்கிறது.
‘நியூயார்க் டைம்ஸ்’  பத்திரிகையின் 
தலையங்கம்!
புகழ்பெற்ற பத்திரிகையான ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகையில் தலையங்கம் எழுதுகிறார்கள்.
இந்தியாவிலேயே தொழில் வாய்ப்பிற்கு எடுத்துக் காட்டான, பக்குவமான, தொழில் முதலீடு செய்வதற்கு மிக முக்கியமான மாநிலம் இருக்கிறது என்று சொன்னால், அந்த மாநிலம் தமிழ்நாடுதான் என்று எழுதியிருக்கிறது.
நாங்கள் இதைச் சொல்லியிருந்தால், கூட்டணிக் கட்சிக்காரர்கள், ஆசிரியர், அவருக்குத் தெரிந்தவர்கள் என்றெல்லாம் எங்களுக்கு முத்திரை குத்தலாம்.
ஆனால், நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை என்ன தி.மு.க.வின் பிரச்சார பத்திரிகையா? அந்தப் பத்திரிகை தலையங்கம் தீட்டுகிறது.
அமைதிப்பூங்காவான தமிழ்நாடு!
எடுத்துக்காட்டான அளவிற்கு இந்தியாவிலேயே எப்படி நிர்வாகம் செய்வது? எப்படி மக்களை அர வணைப்பது? அமைதிப் பூங்காவாக தமிழ்நாடு இருக்கிறது என்பதற்கு அடையாளமாக இருக்கிறது. காரணம், இங்கே மதக்கலவரங்கள் இல்லை.
அரசமைப்புச் சட்டத்தினுடைய அய்ந்து அம்சங்கள் என்ன?
டாக்டர் அம்பேத்கர் அவர்கள் அரும்பாடுபட்டு அரசமைப்புச் சட்டத்தை எழுதியதோடு, அதற்கு பிரியாம்பிள் – பீடிகையை உருவாக்கினார்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 
அய்ந்து அம்சங்கள்!
‘‘வீ தி பீப்பிள்” என்றுதான் ஆரம்பித்தார். ‘‘மக்க ளாகிய நாங்கள் மக்களுக்கே வழங்கிக் கொள்கிறோம்” என்றுதான் அரசமைப்புச் சட்டத்தின் பீடிகை தொடங்குகிறது.
‘‘இறையாண்மை, சமத்துவம், மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு” – இந்த அய்ந்து அம்சங்கள் இன்றைக்குக் காணாமல்  போயிருக்கிறது.
யார் வரவேண்டும் என்பதைவிட, 
யார் வரக்கூடாது என்ற தத்துவம் மிக முக்கியம்!
அவற்றை மீண்டும் கொண்டுவருவதற்காகத்தான், யார் வரவேண்டும் என்பதைவிட, யார் வரக்கூடாது என்ற தத்துவம் மிக முக்கியம் என்ற அடிப்படையில் இந்தத் தேர்தலை சந்திப்பதற்கு நாம் தயாராக இருக் கிறோம்.
அமைச்சர் அவர்களும், முதலமைச்சர் அவர்களும் என்னைப் பார்த்து அன்போடு கேட்டார்கள், ‘‘உங்களு டைய வயது என்ன?”
91 வயது!
இந்த வயதிலே நீங்கள், இவ்வளவு வெப்பமான சூழ்நிலையில், பிரச்சாரத்திற்குப் போகவேண்டுமா? எழுதினால் போதாதா? என்று சொன்னார்கள்.
எங்கள் உயிர் முக்கியமல்ல; 
மக்களாகிய உங்கள் வாழ்வு முக்கியம்!
ஆனால், அதைப்பற்றி நான் கவலைப்படவில்லை. ஏனென்றால், எங்கள் உயிர் முக்கியமல்ல; மக்களாகிய உங்கள் வாழ்வுதான் முக்கியம். எங்களுக்கு முடிவு எழுதியாயிற்று; ஒரு காலை கல்லறையில் வைத்திருக் கின்றோம்; இன்னொரு காலை இந்த மேடையில் வைத்திருக்கின்றோம்.
அப்படிப்பட்ட சூழ்நிலையில்கூட, மக்களை சந்திக் கின்றோம் என்றால், ஜனநாயகம் பிழைக்கவேண்டும்; ஜனநாயகம் காப்பாற்றப்படவேண்டும். ஜனநாயகத் தினுடைய மிக முக்கிய கூறுபாடாக எது இருக்கிறதோ, அந்த அரசமைப்புச் சட்டம் காப்பாற்றப்படவேண்டும்; மதிக்கப்படவேண்டும்; செயல்படுத்தப்படவேண்டும் என்பதற்காகவே!
ஆனால், நம்முடைய பிரதமர் போன்ற மகா நடிகன் உலகத்தில் வேறு யாரும் இல்லை. ‘மகா நடிகன்’ என்ற திரைப்படத்தில் இனமுரசு சத்தியராஜ் நடித்திருக்கிறார். அந்தத் திரைப்படத்தை, பிரதமர் மோடியை மனதில் வைத்து எடுத்தாரோ, என்னவோ இயக்குநர்.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மேல் 
தலை வைத்து வணங்கும் பிரதமர் மோடி!
2019 ஆம் ஆண்டு இரண்டாம் முறை வெற்றி பெற்றவுடன், பிரதமராக மோடி பதவியேற்கின்றபொழுது, மேடையிலிருந்து கீழே இறங்கிப் போனார்; எதற்காக இறங்கிப் போகிறார் என்று எல்லோரும் வியப்புடன் பார்த்தனர். அங்கே ஒரு பெரிய போர்டு வைத்திருந் தார்கள். அது என்னவென்றால், அரசமைப்புச் சட்டம் என்று எழுதப்பட்டு இருந்தது. உடனே மோடி அவர்கள், அந்தப் போர்டின்மீது தலையை வைத்து இரண்டு நிமிடம் மவுனம் காத்தார்.
இப்படிச் செய்து அரசமைப்புச் சட்டம் காப்பாற்றப் படவேண்டும் என்று சொன்னார். இதைவிட மகா வித்தை வேறு என்ன இருக்க முடியும்? அரசமைப்புச் சட்டத்தில் உள்ள மேற்சொன்ன அய்ந்து அம்சங்கள் காப்பாற்றப்பட்டு இருக்கின்றனவா?
மக்களிடம்தான் இறையாண்மை, அந்த அடிப்படை யைத் தாண்டிவிட்டார்.
மதச்சார்பின்மைக்கு இடமே இல்லாத அளவிற்கு ஆக்கிவிட்டார்.
எந்தப் பொதுத் துறையும் இப்பொழுது கிடையாது; எல்லாம் தனியார் மயம்!
அதேபோலத்தான் சமதர்மத்திற்கு வாய்ப்பே இல்லை. எந்தப் பொதுத் துறையும் இப்பொழுது கிடை யாது. எல்லாத் துறையும் இப்பொழுது அதானியிடம், அம்பானியிடம், டாட்டாவிடம், பிர்லாவிடம், மற்ற மற்ற பெருமுதலாளிகளிடம்தான் இருக்கிறது.
அதைத்தாண்டி வெறும் குடியரசு அல்ல – ஜனநாய கக் குடியரசு.
பிரதமர் மோடியைப் பொறுத்தவரையில், அரசமைப் புச் சட்டமோ, குடியரசுத் தலைவரோ அவருக்கு முக்கியமல்ல.
இந்தியா கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கைகள் மக்கள் நலன் சார்ந்ததாகும்!
நம்முடைய கூட்டணி என்பது கொள்கைக் கூட்டணியாகும். அதனால்தான், இன்றைக்கு வெளியான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையாக இருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கையாக இருந் தாலும், திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய தேர்தல் அறிக்கையாக இருந்தாலும், எல்லா தேர்தல் அறிக்கை களும் மக்கள் நலன் சார்ந்ததாக இருக்கின்றது.
அதேநேரத்தில், பா.ஜ.க. கூட்டணி, யாரைப் பொருத் ததாக இருக்கிறது?
மக்களோடு அல்ல – கட்சிகளோடு அல்ல; யாரும் அங்கே போவதற்குத் தயாராக இல்லை.
ஆகவேதான், சிலரை மிரட்டிக் கொண்டிருக்கின் றார்கள். திரிசூலத்தை கையில் வைத்திருக்கிறார்கள்.
அடக்குமுறையை ஏவி எல்லாவற்றையும் அவர்கள் சாதிக்கிறார்கள்!
அந்த திரிசூலத்தின் ஒரு முனை, சி.பி.அய்.; இன் னொரு முனை வருமான வரித் துறை; மூன்றாவது முனை அமலாக்கத் துறை. இந்த மூன்றையும் பயன் படுத்தித்தான், அடக்குமுறையை ஏவி எல்லாவற்றையும் அவர்கள் சாதிக்கிறார்கள்.
இன்றைக்குக்கூட வெளிவந்த ஒரு செய்தி, கருநாடக மாநிலம் பெங்களூருவில், காங்கிரஸ் சட்டமன்ற உறுப் பினரை மிரட்டி, பா.ஜ.க.வில் சேரவில்லையானால், உங்களை சும்மாவிட மாட்டோம் என்று சொல்கிறார்கள். அதற்கடுத்தபடியாக அமலாக்கத் துறை அவர் வீட்டுக்குச் செல்கிறது.
யாரும் விருப்பப்பட்டோ, கொள்கைவயப்பட்டோ செல்வதில்லை!
புதுச்சேரியில் இன்றைக்கு ஆளுங்கட்சிக் கூட்டணி யாக பா.ஜ.க. இருக்கிறது என்றால், அதற்குக் காரணம் அமலாக்கத் துறை மிரட்டல், வருமான வரித் துறை மிரட்டல், சி.பி.அய். மிரட்டல் காரணமாகத்தான்.
ஆகவே, அவர்களுடைய கூட்டணிக்கு யாரும் விருப்பப்பட்டோ, கொள்கைவயப்பட்டோ செல் வதில்லை.
ஆனால், இந்தியா கூட்டணி என்பது அப்படிப் பட்டதல்ல. இது கொள்கைக் கூட்டணி.
யார் இரண்டாமிடத்தைப் பிடிக்கவேண்டும் என்பதில்தான் அவர்களுக்குள் போட்டி!
தமிழ்நாட்டில் மூன்று அணி போட்டி என்றாலும், யார் இரண்டாமிடத்தைப் பிடிக்கவேண்டும் என்பதில்தான் அவர்களுக்குள் போட்டியே தவிர, பா.ஜ.க.வை ஒரு பொருட்டாக நாங்கள் கருதவில்லை. ஆனால், தேர்தல் ஆணையத்தை அவர்கள் கையில் வைத்துக்கொண்டு, கொடுமைகளைச் செய்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் இவ்வளவு விளக்கத்தைச் சொல்லக்கூடிய அளவில் இருக்கின்றோம்.
கடந்த 10 ஆண்டுகால ஆட்சியில் மக்கள் ஏராளமான கொடுமைகளை அனுபவித்துவிட்டனர். ஆகவே, அவர்கள் பா.ஜ.க.விற்கு வாக்களிப்பதற்குத் தயாராக இல்லை.
நாட்டின் முதுகெலும்பான விவசாயிகளை எடுத்துக் கொண்டால், அவர்கள் டில்லிக்குள் நுழையாமல் தடை ஏற்படுத்தி வைத்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
விவசாயிகளுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு கொடுத்த வாக்குறுதிகள் என்னாயிற்று?
மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து நாட்டிலுள்ள விவசாயிகள் ஓராண்டிற்கு மேலாக கொளுத்தும் வெயில், கொட்டும் பனி, மிரட்டும் இடி, மழையில் குடும் பம் குடும்பமாகத் திரண்டு வந்து டில்லியில் போராட்டம் நடத்தினார்கள். அதற்குப் பிறகு வேறு வழியில்லாமல், அந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுகிறோம் என்று சொன்னது ஒன்றிய பா.ஜ.க. அரசு.
அப்பொழுது நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் என்ன?
குறைந்தபட்ச ஆதார விலை கொடுக்கிறோம்; விவசாயிகளின்மீது போடப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறுகிறோம் என்று சொன்னீர்களே, அந்த வாக்குறுதியை ஏன் நிறைவேற்றவில்லை என்று கேட்டு, கடந்த மாதம் விவசாயிகள் ‘‘டில்லி சலோ” என்ற போராட்டத்தை நடத்துவதற்காக டில்லிக்கு வந்தார்கள். ஆனால், அவர்களை டில்லிக்குள் வரவிடாமல், கண் ணீர்ப் புகைக் குண்டுகளை வீசினார்கள்;  சாலைகளில் ஆணிகளை அடித்து வைத்திருந்தனர்; காவல்துறை யினரை வைத்து தடியடி நடத்தினார்கள். துப்பாக்கி சூடு நடத்தினார்கள். அதனால், சில விவசாயிகள் உயி ரிழந்தனர்.
வாக்குறுதி கொடுத்த பிரதமர் மோடி, அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றினாரா?
சொன்னதை செய்துவிட்டு, செய்த சாதனைகளை சொல்லித்தான் இந்தியா கூட்டணி உங்களிடம் வாக்குக் கேட்கிறது.
ஆனால், பா.ஜ.க. கூட்டணி அதுபோன்று செய் கிறதா?
விவசாயிகளுக்காக நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகையைப் பயன்படுத்தவில்லை!
கடந்த 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. அரசினுடைய, நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்காக ஒதுக்கிய தொகை ஒரு லட்சத்து 544 கோடி ரூபாய்.
ஆனால், விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியிலி ருந்து கடந்த 5 ஆண்டுகளில் மொத்தம் ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையைப் பயன் படுத்தாமல், விவசாயிகளுக்குப் போய்ச் சேராமல், அதை யும் திரும்ப வைத்துக் கொண்டார்கள்.
அதனுடைய விளைவு என்ன?
ஒரு லட்சத்து 70 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டிருக்கின்றார்கள்.
இன்றைக்கு வந்திருக்கின்ற காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் மிக முக்கியமாக பல அம்சங்களை சொல்லியிருக்கிறார்கள்.
அதில் மிக முக்கியமான ஒன்று, விவசாயிகளுக்கு அடிப்படையான பொருள் நிர்ணயம் செய்து, குறைந்த பட்ச ஆதார விலையை நிறைவேற்றுவோம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
இந்தியா கூட்டணி திட்டமிட்டு உருவாக்கியுள்ள கொள்கைகள், மக்கள் நலன்சார்ந்ததாக இருக்கிறது.
விவசாயிகளை அட்டை போல் உறிஞ்சக் கூடியவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது!
எனவேதான், இப்போதுள்ள ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி, விவசாயிகளை அட்டை போல் உறிஞ்சக்கூடியவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது.
இளைஞர்களைப் பார்த்து என்ன சொன்னார்கள், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று சொன்னார்கள். செய்தார்களா, என்றால், இல்லை என்பதுதான் பதில்.
மக்கள் கேட்கும் எந்தக் கேள்விக்கும் அவர்கள் பதில் சொல்வதற்குத் தயாராக இல்லை.
ஒவ்வொரு குடிமகன் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பொத்தென்று வந்து விழும் என்று சொன்னார் களே, செய்தார்களா என்றால், இல்லை என்பதுதான் பதில்.
இந்தியா முழுவதும் வங்கியில் அபராதமாக வசூலித்த தொகை ரூ.21 ஆயிரம் கோடி
கிராமத்திலுள்ள தாய்மார்கள் சுருக்குப் பையிலும், பானைக்குள்ளும் வைத்திருந்த சேமிப்புப் பணத்தைத் தேடிப் பிடித்து 15 லட்சம் ரூபாய் வரும் என்பதற்காக வங்கிக் கணக்கைத் தொடங்கினார்கள். வங்கிக் கணக்கில் மினிமம் பேலன்ஸ் இருக்கவேண்டும். மினிமம் பேலன்ஸ் இல்லாத வங்கிக் கணக்கிற்குப் போடப்பட்ட அபராதமாக மோடி அரசு இந்தியா முழுவதும் வசூலித்த தொகை 21 ஆயிரம் கோடி ரூபாய்.
இது யாருடைய பணம், அம்பானியினுடைய பணமா?
அல்லது அதானியினுடைய பணமா?
அல்லது பெருமுதலாளிகளுடைய பணமா?
இல்லை, தோழர்களே! சாதாரணமான ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் பணம் அது.
இந்தியா கூட்டணியின் உறுதிமொழி!
அதுமட்டுமல்ல நண்பர்களே, ஒன்றிய அரசு அலுவலகங்களில் 30 லட்சம் பணியிடங்கள் காலியாக இருக்கின்றன.
இந்தியா கூட்டணியின் சார்பாக உறுதிமொழி கொடுக்கப்பட்டு இருக்கிறது- ஒன்றியத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் காலியாக உள்ள அந்த 30 லட்சம் பணியிடங்களை நிரப்புவோம் என்று.
ஒன்றிய அரசைப் பொறுத்தவரையில், 78 துறைகளில் 9 லட்சத்து 64 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்; அதுபோலவே, பட்டதாரிகளுக்கான சகோ தரர்கள் 42 சதவிகிதம் பேர் இன்றைக்கு வேலையில் லாமல் இருக்கிறார்கள். அதற்குக் காரணம் என்ன?
இன்றைக்குப் பெரிய பிரச்சினையாக இருப்பது என்னவென்றால், அந்த இளைஞர்களைப் போதைப் பழக்கத்திலிருந்து காப்பாற்றவேண்டும். ஏன் அவர்கள் இந்தப் பழக்கத்திற்கு ஆளாகியிருக்கிறார்கள்? அதை சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக மட்டும் பார்க்கக் கூடாது.
இளைஞர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்ட காரணத்தினால்தான்….
வேலையில்லாத பிரச்சினையால்தான்; எவ்வளவு காலத்திற்கு நாம் பெற்றோருக்குப் பாரமாக இருப்பது என்று நினைத்து, அவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்ட காரணத்தினால்தான் அவர்கள் குடிப் பழக்கத்திற்கும், போதைப் பழக்கத்திற்கும் ஆளாகிறார்கள்.
இது அவர்களை மட்டும் பாதிக்கவில்லை, ஒட்டு மொத்த சமூகத்தையும் பாதிக்கிறது.
தமிழ்நாட்டில், ஒரு லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள்!
அதேநேரத்தில், தமிழ்நாட்டில் பார்த்தீர்களேயானால், நம்முடைய முதலமைச்சரால் 79 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கக் கூடிய புதிய தொழிற் சாலைகள் இன்றைக்கு வரவிருக்கிறது. ஒரு லட்சத்து 61 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் – 30 லட்சம் பேருக்கு புதிய வேலை வாய்ப்புகள்.
இந்த வாய்ப்புகள் இந்தியாவில் உள்ள  இளைஞர் களுக்கு இல்லாததால், வெளிநாடுகளை நோக்கிச் சென்றார்கள். ஆனால், தமிழ்நாட்டில் உள்ள திராவிட மாடல் ஆட்சியின் காரணமாக முதலீடுகள் தமிழ்நாட்டை நோக்கி வரத் தொடங்கின. அதற்கான முயற்சிகளை நம்முடைய முதலமைச்சரும், அமைச்சர்களும் மேற் கொண்டனர்.
இன்றைக்கு இருக்கின்ற தமிழ்நாடு அரசு நாணயமான அரசு என்பதால்தான்!
இதைப்பற்றித்தான் ‘நியூயார்க் டைம்ஸ்’ பத்திரிகை தலையங்கம் எழுதியது. ஏன் முதலீடுகள் தமிழ்நாட்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கின்றன என்று சொன் னால், தமிழ்நாட்டில் மதக் கலவரங்கள் கிடையாது; ஜாதிக் கலவரங்கள் கிடையாது. தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக இருக்கிறது என்கின்ற காரணத்தினால்தான். அதுமட்டுமல்ல, இன்றைக்கு இருக்கின்ற தமிழ்நாடு அரசு நாணயமான அரசு என்பதால்தான்.
இன்றைக்கு நம்பகத்தன்மையோடு வெளிநாட்டு முதலீடுகள் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றன.
எனவே நண்பர்களே! ஒன்றிய பா.ஜ.க. அரசு, ஒரே ஒரு கேள்விக்குப் பதில் சொல்லட்டும் பார்க்கலாம்!
2014 ஆம் ஆண்டு விலைவாசி நிலவரம் எப்படி இருந்தது?
பண வீக்கம் எவ்வளவு இருந்தது?
கடந்த 10 ஆண்டுகால ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியில், அதனைக் குறைத்திருக்கிறீர்களா? அல்லது உயர்ந் திருக்கிறதா?
‘‘அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு?” என்று சொன்ன ஒரு காலகட்டம் உண்டு. ஆனால், அது நம்மு டைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கால கட்டத்தில் ஊதுகின்ற அடுப்பே இல்லாமல் போனது. தாய்மார்கள், திருகியதும் எரிகின்ற அடுப்பை – கியாஸ் அடுப்பைக் கொடுத்தார். இன்றைய தலைமுறையினருக்கு ஊதாங்கோல் என்றால் என்னவென்றே தெரியாது.
தேர்தலுக்காக இப்பொழுது சமையல் எரிவாயு உருளையின் விலையைக் குறைத்திருக்கிறார்கள்
தாய்மார்களுக்கு நன்றாகத் தெரியும்; சமையல் எரிவாயு உருளையின் விலை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு எவ்வளவு? இப்பொழுது எவ்வளவு? தேர்தல் வருகிறது என்பதற்காக இப்பொழுது விலையைக் குறைத்திருக்கிறார்கள்.
ஒட்டகத்தின் முதுகில் ஏராளமான சுமையை ஏற்றி விட்டு, கடைசியாக ஒட்டகம் பார்க்கும்படியாக ஒரு சிறு சுமையை இறக்கி வைப்பார்களாம்; அது நினைத்துக் கொள்ளுமாம், எல்லா சுமையையும் இறக்கிவிட்டார்கள் என்று நினைத்து வேகமாகச் செல்லுமாம் என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோன்று  முழுக்க முழுக்க அதுபோன்றுதான் செய்கின்றது இன்றைய ஒன்றிய அரசு.
பன்னாட்டளவில் கச்சாப் பொருள்களின் விலை குறைந்தாலும், இங்கே சமையல் எரிவாயு உருளையின் விலையோ, பெட்ரோல், டீசல் விலையையோ குறைக்க வில்லை அவர்கள்.
பா.ஜ.க. என்பது ஊழலின் ஊற்றுக்கண்!
‘‘ஊழலை ஒழிப்போம்” என்று சொல்லிக்கொண்டு ஆட்சிக்கு ‘அவதாரங்கள்’ போன்று வந்தார்கள் இவர்கள்.
ஊழலுக்கு எதிராக உலகளாவிய இருக்கக்கூடிய ஓர் அமைப்பு ஆய்வு செய்து பட்டியலை வெளியிட்டு இருக்கிறது. அதில், இந்தியா ஊழல் பட்டியலில் 93 ஆவது இடத்தில் உள்ளது. ஆகவேதான், பா.ஜ.க. என்பது ஊழலின் ஊற்றுக்கண்.
நிலைமை இப்படி இருக்கின்றபொழுது, கடந்த 10 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு மீனவர்கள் எவ்வளவோ இன்னல்களுக்கு ஆளாகி, உடைமைகளை இழந்தனர், உயிர் துறந்தனர்.  அப்பொழுதெல்லாம் கண்டுகொள்ளாத ஒன்றிய பா.ஜ.க. அரசு, இன்றைக்குத் திடீரென்று  கச்சத்தீவுப் பிரச்சினையை கையிலெடுத்திருக்கிறார்கள்.
இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் 
இல்லாத நிலை!
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சி ஜனநாயகத்திற்கு விரோத மான ஆட்சி என்பதற்கு அடையாளம், இதுவரையில், இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் 146 உறுப்பினர்களை ஒரு தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து, அதற்குப் பிறகு நடைபெறும் அடுத்த தொடர் கூட்டத்திற்கும் சேர்த்து சஸ்பெண்ட் செய்த வரலாறு கிடையாது.
கடந்த 5 ஆண்டுகாலங்களாக நாடாளுமன்றத்தில் துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்காமலேயே ஓட்டி விட்டார்கள்.
விஸ்வகுருவாம் – கேள்வி கேட்டால்,
மவுன குருவா?
உலகத்திற்கே வழிகாட்டக்கூடிய ‘விஸ்வகுரு’ என்ற தன்னைத்தானே சொல்லிக் கொள்கிறார் பிரதமர் மோடி. விஸ்வ குருவாம், கேள்வி கேட்டால், மவுன குருவா? என்பதை நன்றாக நீங்கள் சிந்தித்துப் பாருங்கள்.
ஒன்றிய ஆட்சியின் ஊழலைப்பற்றி சொல்வதற் காகவும், ஆட்சியின் கொடுமைகளைப்பற்றி முழுமை யாக சொல்வதற்கு நேரமின்மையால்தான், நான்கு சிறிய நூல்களை வெளியிட்டு இருக்கின்றோம்.
தேர்தல் பரப்புரைக்காக 
நான்கு சிறிய நூல்கள்!
1. ‘‘2024 இல் மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணியை (தி.மு.க. அணியை) ஆதரிக்கவேண்டும் ஏன்?’’
2. ‘‘மக்கள் விரோத பா.ஜ.க. அரசை விரட்டியடிப் போம்!’’
3.‘‘பிரதமர் மோடிக்கு கருஞ்சட்டைக்காரனின் திறந்த மடல்!’’
4. ‘‘பா.ஜ.க.வின் ப்ரீபெய்டு, போஸ்ட்பெய்டு ஊழல்கள் தேர்தல் பத்திர முறைகேடுகள்.’’
ஊழல்களிலேயே புதிய வகையைக் கண்டுபிடித்தவர்கள் பா.ஜ.க.வினர்தான். மோடியின் வித்தைகளிலேயே உச்சகட்டமான வித்தைகளில் ஒன்றுதான், ப்ரீபெய்டு ஊழல், போஸ்ட்பெய்டு ஊழல். தேர்தல் பத்திர திட்ட ஊழல்.
பெரிய பெரிய கம்பெனிகள் நன்கொடைகள் கொடுக்கலாம் அரசியல் கட்சிகளுக்கு.
நன்கொடை என்றால் என்ன அர்த்தம்?
மிரட்டி வாங்கினால், அதற்குப் பெயர் நன்கொடையல்ல!
விருப்பப்பட்டு கொடுப்பதற்குப் பெயர்தான் நன் கொடை. ஆனால், மிரட்டி வாங்கினால், அதற்குப் பெயர் நன்கொடை அல்ல.
சி.பி.அய்., வருமான வரித் துறை, அமலாக்கத் துறை ஆகிய துறைகளால் மிரட்டப்பட்ட நிறுவனங்கள் சில நாள்களில், பா.ஜ. கட்சிக்கு மிகப்பெரிய அளவில் நன்கொடைகளைக் கொடுத்திருக்கின்றன.
நஷ்டத்தில் மூழ்கிய 33 கம்பெனிகளிடம் 
அடித்துப் பிடுங்கிய பா.ஜ.க!
நேற்று ‘இந்து’ பத்திரிகை உள்பட நிறைய பத்திரிகை களில் அந்தச் செய்தி வெளிவந்திருக்கிறது.
‘‘எரியற வீட்டில் பிடுங்குகிற வரைக்கும் லாபம் – நஷ்டத்தில் மூழ்கிய 33 கம்பெனிகளிடம் அடித்துப் பிடுங்கிய பா.ஜ.க.” – தேர்தல் பத்திரங்கள் குறித்த புதிய தகவல்கள் அம்பலம்.”
2017 முதல் 2023 வரை நஷ்டத்தில் மூழ்கினாலும், பா.ஜ.க.வுக்கு நிதி தந்த டாப் 5 நிறுவனங்கள்!
கம்பெனி வாங்கிய தேர்தல்
பத்திரம்பா.ஜ.க. பெற்றதுநஷ்டம்
பார்தி ஏர்டெல் ரூ.198 கோடி 99.7% ரூ.76954 கோடி
டிஎல்எப் லக்சரி
ஹோம்ஸ் ரூ.25 கோடி 100% ரூ.-128 கோடி
எஸ்டி கார்ப்பரேசன் ரூ.17 கோடி 100% ரூ.-10 கோடி
யூனியா பார்மா ரூ.15 கோடி 100% ரூ.-29 கோடி
சாடெக் என்வைரோ ரூ.12 கோடி 100% ரூ.-146 கோடி
லாபத்தைவிட அதிக நன்கொடை தந்த நிறுவனங்கள்
கம்பெனி வாங்கிய தேர்தல்
பத்திரம்பா.ஜ.க. பெற்றது  லாபம்
குயிக் சப்ளை
செயின் ரூ.410 கோடி 93.9% ரூ.144 கோடி
மதன்லால் ரூ.1855 கோடி 94.6% ரூ.2.07 கோடி
நெக்ஸ்ஜி ரூ.35 கோடி 100% ரூ.28 கோடி
நன்கொடை அல்ல; வன்கொடைதான்!
பா.ஜ.க. பெற்றது நன்கொடை அல்ல; வன்கொடை தான். புதிய வார்த்தையை நான் சொல்கிறேன்.
இதுவரை நன்கொடையைப்பற்றி கேள்விப்பட்டி ருப்பீர்கள் – ஆனால், மோடி அரசினுடைய கைங்கரியத் தினால், தமிழுக்கு ஒரு புதிய வார்த்தையை வன்கொடை என்று உருவாக்கக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவு!
பா.ஜ.க. செய்தது சாதாரணமான ஊழல் அல்ல! தேர்தல் பத்திர ஊழல் செய்ததற்கான ஆவணங்களை ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’வை உச்சநீதிமன்றம் கேட்டது. கால அவகாசம் வேண்டும் என்று ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’ கேட்டபொழுது, அதனை உச்சநீதிமன்றம் கண்டித்துச் சொன்னவுடன், அதற்குரிய ஆவணங்களை தேர்தல் ஆணையத்திடம் ‘ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா’ கொடுத்தது.
ஊழலுக்கு எதிராக இருக்கக்கூடிய இயக்கம் கம்யூனிஸ்ட் இயக்கம்!
பா.ஜ.க.வின் தேர்தல் பத்திர திட்ட ஊழல் இன்றைக்கு வெட்ட வெளிச்சத்திற்கு வந்துவிட்டது. இந்த ஊழல் வெளிவருவதற்குக் காரணமாக இருந்த கட்சி, கம்யூனிஸ்ட் கட்சிதான். எப்பொழுதுமே ஊழலுக்கு எதிராக இருக்கக்கூடிய இயக்கம் அது.
தேர்தல் நன்கொடைகளை எதிர்க்கட்சிகளுக்கும் கொடுத்திருக்கிறார்களே என்று சொல்கிறார்கள். அவர்கள் விருப்பப்பட்டு கொடுத்தார்கள் என்பதுதான் உண்மை.
பா.ஜ.க.வில் ஊழல் வெளியே தெரிந்துவிடக் கூடாது என்பதற்கான திசை திருப்பலே கச்சத்தீவு பிரச்சினை!
ஆனால், பா.ஜ.க. 42 கம்பெனிகளிடமிருந்து தேர்தல் பத்திரம் வாங்கியிருக்கிறது என்றால், அதில் 33 கம்பெனி கள் மிரட்டப்பட்டு கொடுக்க வைக்கப்பட்டு இருக்கிறது என்றால், அதனுடைய அர்த்தம் என்ன? என்பதை நன்றாக நினைத்துப் பாருங்கள்.
ஆகவே, இந்த ஊழல் வெளியே தெரிந்துவிடக் கூடாது. அதைப்பற்றி விரிவாக நாங்கள் பேசிவிடக் கூடாது என்பதற்காகத்தான், இப்பொழுது கச்சத்தீவு பிரச்சினையை திடீரென்று கையிலெடுக்கிறார்கள்.
விஞ்ஞானபூர்வமான ஊழலை செய்திருக்கிறார்கள்!
எனவேதான், ஊழலை அவர்கள் ஒழிக்கவில்லை – விஞ்ஞானபூர்வமாக செய்திருக்கிறார்கள். சட்ட வித்தையோடு செய்திருக்கிறார்கள்.
இப்படிப்பட்ட யோக்கியர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால், இந்த நாடு தாங்குமா? என்பதை நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டிய செய்தியாகும்.
மனித தர்மம்தான் இந்த நாட்டை ஆளவேண்டும் என்பதற்காகத்தான் எங்களுடைய பிரச்சாரம்!
எனவேதான், நாங்கள் எங்களைப்பற்றி கவலைப்பட வில்லை; உங்களைப்பற்றி கவலைப்படுவதால், உங்களு டைய தலைமுறையைப்பற்றி கவலைப்படுவதால், நம்முடைய சமுதாயத்தைப்பற்றி கவலைப்படுவதால், இன்றைக்கு உள்ள இந்திய அரசமைப்புச் சட்டம் உள்ள இடத்தில், மனுதர்மம் வந்துவிடக் கூடாது. மனித தர்மம்தான் இந்த நாட்டை ஆளவேண்டும் என்பதற் காகத்தான் இந்தப் பிரச்சாரத்தை நாங்கள் தொடர்ந்து செய்கின்றோம்.
நிச்சயம் ஒன்றை நீங்கள் குறித்து வைத்துக் கொள் ளுங்கள்  ஜூன் 3  ஆம் தேதியன்று கலைஞருடைய நூற்றாண்டு விழா நிறைவு –  அந்த நேரத்தில், அவருக்கு ஒரு பரிசைக் கொடுக்கவிருக்கின்றோம்.
ஜூன் 5 ஆம் தேதிக்குப் பிறகு 
மக்களாட்சி மீண்டும் மலருகிறது!
என்ன அந்த பரிசு என்றால், ஒன்றியத்தில் இந்தியா கூட்டணியினுடைய ஆட்சி- மக்கள் எல்லாம் புகழக் கூடிய ஆட்சி – ஜனநாயகம் சுதந்திரமாக மூச்சுவிடக் கூடிய ஆட்சி –  மக்களாட்சி மீண்டும் மலருகிறது என்று சொல்லக்கூடிய மிகப்பெரிய பரிசுதான் அது.
ஒன்றியத்தில் ஆட்சி மாற்றம் வருவதற்கு உங்களு டைய கடமையை நீங்கள் செய்யவேண்டும். 18 வய துள்ள இளந்தலைமுறையினரே, ஏமாந்துவிடாதீர்கள். 11 லட்சம் பேர் தமிழ்நாட்டில் இருக்கிறீர்கள். வித்தையைப் பார்த்து ஏமாந்துவிடாதீர்கள். விளையாட்டுத்தனமாக வாக்குப் பெட்டியில் ஏதாவது ஒரு பொத்தானை அழுத்தலாம் என்று நினைக்காதீர்கள்;
வருகின்ற 19 ஆம் தேதி வாக்குச் சாவடிக்குச் செல் லும்  நீங்கள் அழுத்த வேண்டிய பொத்தான் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் – பச்சை விளக்கு எரியும்வரை அந்தப் பொத்தானை அழுத்துங்கள். ஒப்புகைச் சீட்டு இருந்தால், அதை சரி பாருங்கள்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கக்கூடிய 
மிகப்பெரிய ஒரு வாய்ப்பு
அதன்மூலம் உங்களையும் பாதுகாத்து, இந்த நாட்டையும் பாதுகாத்து, அரசமைப்புச் சட்டத்தையும் பாதுகாத்து, ஜனநாயகத்தையும் பாதுகாக்கக்கூடிய மிகப்பெரிய ஒரு வாய்ப்பு  என்று சொல்லி, வாய்ப்பளித்த, ஏற்பாடு செய்த அத்துணை தோழர்களுக்கும் நன்றி! நன்றி!!
மறவாதீர்,
அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னம் – நம்முடைய வேட்பாளர் சச்சிதானந்தம்!
நன்றி, வணக்கம்!
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

No comments:

Post a Comment