புற்றுநோய் அறிகுறிகள்: உடலில் கவனிக்க வேண்டிய 9 மாற்றங்கள் என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 29, 2024

புற்றுநோய் அறிகுறிகள்: உடலில் கவனிக்க வேண்டிய 9 மாற்றங்கள் என்ன?

புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால், அனை வருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத் தான நோய்தான் நினைவுக்கு வரும்.
ஆனால் 1970களில் இருந்து, புற்றுநோயிலிருந்து பிழைத்து உயிர்வாழும் விகிதம் மூன்று மடங்கு அதிகரித்து உள்ளது. இதற்குக் காரணம் ஆரம்பக் கால நோயறிதல்.
உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சை யளிக்கப் படக்கூடியவை. பிரச்சினை என்னவென்றால், பல சமயங்களில், மருத்துவரைத் தொந்தரவு செய்ய விரும்பாத தாலும், அதற்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்காத தாலும், நாம் ஆரம்பகால நோயறிதலுக்கு முக்கியமான சில அறிகுறிகளை புறக் கணிக்கிறோம்.

Cancer Research UK என்ற அமைப்பு நடத்திய ஆய்வின்படி, இங்கிலாந்தில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் சில சமயங்களில் புற்றுநோயின் இருப்பைக் குறிக்கும் அறிகுறிகளில் ஒன்றை அனுபவித்திருக்கிறார்கள். ஆனால் இவர்களில் 2% பேர் மட்டுமே தாம் இந்த நோயால் பாதிக்கப்படுவோம் என்று நினைத்தார்கள். மேலும் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தச் சமிக்ஞைகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டனர்.

இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட லண்டனில் இருக்கும் யுனிவர்சிட்டி காலேஜைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கத்ரீனா விட்டேக்கர், “மக்கள் தங்கள் உடல்நிலையைப் பற்றிக் காரணமில்லாமல் கவலைப்படக் கூடாது” என்கிறார். “ஆனால் நிறைய மக்கள் மருத்துவரிடம் செல்ல வெட்கப்படு கிறார்கள். அவர்கள் நேரத்தை வீணடிக்கப் போகிறோம் என்றோ, சுகாதார அமைப்பின் வளங்களை வீணடிக்கப் போகிறோம் என்றோ நினைக்கிறார்கள்,” என்கிறார்.

மேலும் பேசிய அவர், “உங்களுக்கு மறைந்து போகாத அறிகுறிகள் இருந்தால், குறிப்பாக புற்றுநோய்க்கான அறிகுறி களாகக் கருதப்படுபவை இருந்தால், நீங்கள் அவற்றைப் புறக்கணிக்கக்கூடாது, மருத்துவரிடம் சென்று உதவி பெற வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.
அமெரிக்க புற்றுநோய் சங்கத்தின் அறிவுரைப்படி, புற்று நோயின் இந்த 9 அறிகுறிகளை நீங்கள் புறக்கணிக்கக்கூடாது.

1. காரணமில்லாத உடல் எடை இழப்பு
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பெரும்பாலான மக்கள் ஒரு கட்டத்தில் உடல் எடையை இழக்கின்றனர்.
எந்தக் காரணமும் இல்லாமல் உடல் எடை 5 கிலோ அல்லது அதற்கு மேற்பட்டு குறைந்தால், அது புற்றுநோயின் முதல் அறிகுறியாக இருக்கலாம்.
கணையம், வயிறு, உணவுக்குழாய் அல்லது நுரையீரல் புற்றுநோய்களால் இது அடிக்கடி நிகழ்கிறது.

2. அடிக்கடி காய்ச்சல்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு காய்ச்சல் வருவது மிகவும் பொதுவானது. புற்றுநோய் தொடங்கிய இடத்திலிருந்து பரவ ஆரம்பித்தப் பிறகு இது அடிக்கடி நிகழ்கிறது.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரும் ஒரு கட்டத்தில் காய்ச்சலை அனுபவிப்பார்கள். புற்றுநோய் அல்லது அதன் சிகிச்சைகள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பாதிப்பதால் இது நிகழ்கிறது.
பொதுவாக, காய்ச்சல், ரத்தப் புற்றுநோய் அல்லது நிணநீர்க்குழியப் புற்றுநோய் போன்ற புற்றுநோய்களில் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

3. தீவிரமான உடல் சோர்வு
ஓய்வெடுத்தாலும் தீராத தீவிரமான உடல் சோர்வும் ஒரு அறிகுறி.
புற்றுநோய் பரவும்போது இது ஒரு முக்கியமான அறிகுறியாக இருக்கலாம்.
லுகேமியா போன்ற சில புற்றுநோய்களில், முதலில் சோர்வு ஏற்படலாம்.
சில பெருங்குடல் அல்லது வயிற்றுப் புற்றுநோய்கள் வெளிப்படையாகத் தெரியாத இரத்த இழப்பை ஏற்படுத்தும். அதனாலும் உடல் சோர்வு ஏற்படலாம்.

4. தோலில் ஏற்படும் மாற்றங்கள்
தோல் புற்றுநோய்களுடன், வேறு சில புற்றுநோய்களும் வெளிப்படையாகத் தெரியும் தோல் மாற்றங்களை ஏற்படுத்தும்.
இதற்கான அறிகுறிகள்:
சருமம் கருமையாகுதல்
தோல் மற்றும் கண்கள் மஞ்சள் நிறமாக மாறுதல்
தோல் சிவத்தல், அரிப்பு)
அதிகப்படியான முடி வளர்ச்சி

5. மலம் அல்லது சிறுநீர் கழிக்கும்…
மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு அல்லது உங்கள் மலத்தின் அளவு நீண்ட காலமாக மாறுவது பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
மறுபுறம், சிறுநீர் கழிக்கும் போது வலி, சிறுநீரில் இரத்தம் அல்லது சிறுநீர்ப்பை செயல்பாட்டில் ஏற்படும் மாற்றங்கள் (அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சிறுநீர் கழிப்பது போன்றவை) சிறுநீர்ப்பை அல்லது புரோஸ்டேட் புற்றுநோய் களுடன் தொடர்புடையதாக இருக்கலாம்.

6. ஆறாத காயங்கள்
மச்சங்கள் – குறிப்பாக வளரும், வலி ஏற்படுத்தும், அல்லது இரத்தம் கசியும் மச்சங்கள் புற்றுநோயின் அறி குறிகளாக இருக்கலாம் என்பது பலருக்கும் தெரியும்.
ஆனால் நான்கு வாரங்களுக்கு மேல் குணமடையாத சிறிய காயங்கள் குறித்தும் நாம் கவனமாக இருக்க வேண்டும்.
ஆறாத வாய்ப் புண் வாய்ப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
நீண்ட காலமாக ஆறாத வாயில் ஏற்படும் எந்த மாற்றமும் உடனடியாக ஒரு மருத்துவர் அல்லது பல் மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும்.
ஆண்குறி அல்லது பெண்ணுறுப்பில் ஏற்படும் புண்கள், தொற்று அல்லது ஆரம்ப நிலை புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். இவையும் ஒரு மருத்துவரால் பரிசோதிக்கப்பட வேண்டும்.

7. இரத்தப்போக்கு
புற்றுநோயுடன் ஆரம்ப அல்லது மேம்பட்ட நிலைகளில் அசாதாரண இரத்தப்போக்கு ஏற்படலாம்.
இருமும் போது இரத்தம் வருவது நுரையீரல் புற்று நோயின் அறிகுறியாக இருக்கலாம்.
மறுபுறம், மலத்தில் இரத்தம் தோன்றினால் (இது மிகவும் கருமையான நிறத்தில் இருக்கலாம்) அது பெருங்குடல் புற்றுநோய் அல்லது மலக்குடல் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
கர்ப்பப்பையின் உட்பரப்பின் புற்றுநோயால், கருப்பையிலிருந்து அசாதாரண ரத்தப்போக்கு ஏற்படலாம்.
மேலும், சிறுநீரில் இரத்தம் வருவது சிறுநீர்ப்பை அல்லது சிறுநீரகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.
முலைக் காம்பிலிருந்து இரத்தம் தோய்ந்த கசிவு வெளி வருவது மார்பகப் புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.

8. உடலில் தடிப்பு அல்லது கட்டிகள்
பல புற்றுநோய்களை தோலில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் உணர முடியும்.
இந்தப் புற்றுநோய்கள் முக்கியமாக மார்பகங்கள், விரை, நிணநீர் கணுக்கள் (சுரப்பிகள்) மற்றும் உடலின் மென் மையான திசுக்களில் ஏற்படுகின்றன.
தடிப்பு அல்லது கடினமாக்குதல் புற்றுநோயின் ஆரம்ப அல்லது மேம்பட்ட நிலையின் அறிகுறியாக இருக்கலாம்.

9. விழுங்குவதில் சிரமம்
தொடர்ந்து செரிமானமாவது அல்லது விழுங்குவதில் சிரமம் இருந்தால் அது உணவுக்குழாய், வயிறு அல்லது குரல் வளை (தொண்டை) புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
இருப்பினும், இந்தப் பட்டியலில் உள்ள பெரும்பாலான அறிகுறிகளைப் போலவே, அவை பெரும்பாலும் புற்று நோயைத் தவிர வேறு காரணங்களாலும் ஏற்படுகின்றன.

No comments:

Post a Comment