திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 44ஆவது ஆண்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 25, 2024

திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 44ஆவது ஆண்டு விழா

featured image

திருச்சி, ஜன.25- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 44ஆவது ஆண்டு விழா நேற்று (24.01.2024) காலை 10.00 மணி அளவில், பள்ளியின் வளாகத்தில் உள்ள என்.எஸ்.கலைவாணர் அரங்கில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது.
நிகழ்விற்கு பள்ளியின் தாளா ளர் வீ.அன்புராஜ் முன்னிலை வகிக்க, சிறப்பு விருந்தினராக, திருச்சி மாவட்ட தனியார் பள்ளி களுக்கான மாவட்டக் கல்வி அலு வலர் வி.சாரதி பங்கேற்றார்.
மொழி வாழ்த்துடன் தொடங் கிய நிகழ்வில், பள்ளி மாணவியர் தங்கள் கண்கவர் வரவேற்பு நடனம் மூலம் அனைவரையும் வரவேற்றனர்.
தொடர்ந்து பள்ளியின் தாளா ளர் வீ.அன்புராஜ் வரவேற்புரை யாற்றி நிகழ்விற்கு வந்திருந்தோரை வரவேற்று, சிறப்பு விருந்தினருக்குப் பயனாடை மற்றும் நினைவுப் பரிசு வழங்கிச் சிறப்பித்தார்.
நிகழ்வில் பள்ளியின் முதல்வர் டாக்டர் க.வனிதா 2023-2024 ஆம் கல்வி ஆண்டிற்கான ஆண்டறிக் கையை வாசித்தளித்து பள்ளியின் சாதனையைப் பறைசாற்றினார்.
அதனைத் தொடர்ந்து பெரி யார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கடந்து வந்த 44 ஆண்டு கால வரலாற்றைப் படம்பிடித்துக் காட்டக்கூடிய நாடகம் பள்ளியின் எட்டாம் வகுப்பு மாணவர்களால் மிகச் சிறப்பாக நடத்திக் காட்டப் பட்டது.
விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர் வி.சாரதி, கல்வியோடு கூடிய ஒழுக்கத்திற்கு வித்திடக் கூடிய இந்த பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களைச் சேர்த்த பெற்றோர்களுக்கு வாழ்த் துகளைத் தெரிவித்தோடு, மாண வர்களுக்கு விளையாட்டோடு கூடிய கல்வியின் முக்கியத்துவத்தை பெற்றோர்கள் எடுத்துரைக்க வேண்டும் என்றும் அறிவுறுத் தினார்.

மேலும், தற்போதைய மாணவர் களுக்குப் பெற்றோர்கள் கொடுக் கக்கூடிய அளவுக்கு மீறிய செல்லம் தவறான பாதைக்குச் செல்வதற்கு வழி வகுப்பதால் பெற்றோர்கள் கண்டிப்புடன் கூடிய கனிவைக் கையாள வேண்டியது இன்றைய சூழலில் மிக மிக அவசியம் என்றும் அறிவுறுத்தினார்.
மாணவர்களுக்கு அலைபேசி பயன்பாடு தற்போதைய படிக்கும் சூழலில் தேவையற்ற ஒன்று என்று கூறிய சிறப்பு விருந்தினர், மாண வர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளையும், பழ வகைகளை யும், காய்கறிகளையும் தங்கள் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று அறி வுறுத்தியதோடு, தவறாமல் உடற் பயிற்சி செய்து உடலையும் மன தையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்று நம் முன்னோர் சொன்னது வெறும் வார்த்தை அல்ல; அது வாழ்க்கைக்கான பழமொழி, என்றும் மாணவர் களுக்கு அறிவுரை வழங்கினார்.
விழாவில், ஒன்பது ஆண்டு களாகத் தொடர்ந்து பள்ளியில் பணிபுரிந்து வரும் சிறந்த ஆசிரியர்கள் பிரியா, மகேஸ்வரி, தேவிலெட்சுமி, மனோன்மணி, உமா மகேஸ்வரி, சமயபுரம் ஆகியோருக்கு ரொக்கப் பரிசு வழங்கி சிறப்பிக்கப்பட்டது.
மேலும், 10 மற்றும் 12ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வு களில் தங்கள் பாடங்களில் 100% தேர்ச்சியைத் தந்த ஆசிரியர்களுக் கும் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.
தொடர்ந்து 2023-2024 கல்வி ஆண்டில் 1 முதல் 9ஆம் வகுப்பு வரையில் முதல் மூன்று இடங் களைப் பிடித்த மாணவர்களுக்குக் கேடயங்களும் சான்றிதழ்களும் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது.

மேலும், பள்ளிக்கு விடுமுறை எடுக்காமல், நூறு சதவிகிதம் வருகை பதிவு புரிந்த மாணவர் களுக்கும் சான்றிதழ்களும், கேட யங்களும் வழங்கிச் சிறப்பிக்கப் பட்டது.
கடந்த கல்வியாண்டில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கும் சிறப்புப் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தது பெற்றோர்களின் பெரும் வரவேற்பைப் பெற்றது.
நிகழ்ச்சியின் இறுதியில் பள்ளி யின் கணித ஆசிரியரும், 44ஆவது ஆண்டு விழாவின் ஒருங்கிணைப் பாளருமான கே.அகிலாண்டேஸ் வரி நன்றியுரை வழங்கினார்.
நிகழ்வைப் பள்ளியின் பன்னி ரண்டாம் வகுப்பு மாணவிகள் சுவேதா மற்றும் சிறீமிதுனா ஆகிய இருவரும் மிகச் சிறப்பாக தொகுத்து வழங்கினர். நிகழ்வின் இறுதியில் நாட்டுப் பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
நிகழ்ச்சியில் பள்ளி மாணவர் கள் மற்றும் பெற்றோர்கள் ஆயிரத் திற்கும் மேற்பட்டோர் பங்கேற் றனர்.
விழாவிற்கான ஏற் பாடுகளை பள்ளியின் இருபால் ஆசிரியர்கள், அலுவலகப் பணித் தோழர்கள் மிகச் சிறப்பாக செய்திருந்தனர்.

No comments:

Post a Comment