பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, December 23, 2023

பள்ளி மாணவர்களுக்கு 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை

சென்னை, டிச. 23- அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. நேற்று டன் அரையாண்டு தேர்வுகள் முடிந்தது. இதை யடுத்து மாணவ-மாணவிகளுக்கு இன்று (23.12.2023) முதல் வருகிற 1ஆம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை விடப்படுகிறது. வருகிற 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப் படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதேபோல் தமிழ்நாடு பாடத்திட்டத்தில் செயல் படும் அனைத்து வகை தனியார் பள்ளி களும் அரை யாண்டு விடுமுறைக்கு பின் வருகிற 2ஆம் தேதி திறக்க வேண்டும் என்று தனியார் பள்ளிகளுக்கு சுற் றறிக்கை அனுப்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவ லர்களுக்கு தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தர விட்டுள்ளார்.

No comments:

Post a Comment