நடக்க இருப்பவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 27, 2023

நடக்க இருப்பவை

 28.4.2023 வெள்ளிக்கிழமை

பாரதிதாசன் பிறந்த நாள்

சமூக நீதி பாதுகாக்கும் திராவிட மாடல் திறந்தவெளி கருத்தரங்கம்

புதுச்சேரி: மாலை 5 மணி * இடம்: அவ்வை திடல், சாரம், புதுச்சேரி * தலைமை: சி.துரை (எ) வீரமணிகண்டன் * வரவேற்புரை: மு.முகேஷ் * முன்னிலை: அய்.அன்பு, மோகன், ப.பசுபதி * தொடக்கவுரை: தீனா (பெரியார் சிந்தனையாளர் இயக்கம்) * படத்திறப்பு: இள.சொற்செல்வி (திராவிடர் கழகம்), பி.பிரவீனா (தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கம்) * சிறப்புரை: முனைவர் துரை.சந்திரசேகர் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி திராவிடர் கழகம்), சீ.சு.சாமிநாதன், எஸ்.பி.மணிமாறன், பி.பிரகாஷ், அ.அருள்ஒளி, பு.கலைப் பிரியன், சு.பஷீர் அகமது, பா.சக்திவேல் * ஒருங்கிணைப்பு: ச.லாரன்ஸ் (பெரியார் சிந்தனையாளர் இயக்கம்) * நன்றியுரை: கு.சபரி (பெரியார் படிப்பகம்) * ஏற்பாடு: பெரியார் சிந்தனையாளர் இயக்கம்.

29.4.2023 சனிக்கிழமை

சுயமரியதைச் சுடரொளி 

உரத்தநாடு மு.இராஜேந்திரன் நினைவேந்தல் படத்திறப்பு

தஞ்சாவூர்: மாலை 4:30 மணி * இடம்: அய்யன்குளம் கீழக்கரை, மேலராஜவீதி, தஞ்சாவூர் * படத்திறப்பாளர்: டாக்டர் அஞ்சுகம் பூபதி (துணை மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி, மாநில மருத்துவரணி துணைச் செயலாளர், தி.மு.க.) * நினைவேந்தல் உரை: திராவிடர் கழக பொறுப் பாளர்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் * அழைப்பு: இரா.மேகநாதன், இரா.ஈழமணி, சாமி.அரசிளங்கோ (திருவோணம் ஒன்றியத் தலைவர்).

புரட்சிக்கவிஞர் பாரதிதாசனார் 

133ஆவது பிறந்த நாள் கருத்தரங்கம்

புதுச்சேரி: மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை * இடம்: பெரியார் படிப்பகம், இராசா நகர், புதுச்சேரி * தலைமை: நெ.நடராசன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * முன்னிலை: வே.அன்பரசன் (மண்டலத் தலைவர், புதுச்சேரி) * வரவேற்புரை: வி.இளவரசி சங்கர் (மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழக எழுத்தாளர் மன்றம்) * தொடக்கவுரை: கு.இரஞ்சித்குமார் (மாநிலத் துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * புரட்சிக்கவிஞரின் படத்திறப்பு: சிவ.வீரமணி (மாநிலத் தலைவர், திராவிடர் கழகம், புதுச்சேரி) * சிறப்புரை: இரா.மங்கையர் செல்வம் * தலைப்பு: பாவேந்தர் பார்வையில் சனாதன எதிர்ப்பு * நன்றியுரை: ப.குமரன் (செயலாளர், பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி)

புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள்-பாவேந்தர் பாசறையின் 31ஆவது ஆண்டுக் கவிதைத் திருவிழா

சென்னை: மாலை 5 மணி * இடம்: இக்சா மய்யம், (கன்னிமாரா நூலகம் எதிரில்), சென்னை - 600 008 * மொழிவாழ்த்து: சொ.பத்மநாபன் * நல்லிசைப் பாடல்கள்: கவிஞர் ந.செகதீசன் * வரவேற்புரை: முனைவர் இளமாறன் * தலைமை: கவிஞர் தமிழ் இயலன் * “பாவேந்தர் மரபுப் பாவலர் விருது” மற்றும் பொற்கிழி ரூ.3000/- பெறுபவர் பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் * சிறப்புரை: கலைமாமணி கவிஞர் முத்துலிங்கம் * வாழ்த்துரை: மு.பொன்னியின் செல்வன் * ஏற்புரை: முனைவர் செல்வ.மீனாட்சிசுந்தரம் * நன்றியுரை: கவிஞர் கா.முருகையன்.


No comments:

Post a Comment