இரா.கோவிந்தசாமி படத்திறப்பு-நினைவேந்தல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, April 27, 2023

இரா.கோவிந்தசாமி படத்திறப்பு-நினைவேந்தல்

செங்கல்பட்டு, ஏப். 27- செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் கழகத்தின் மாவட்ட காப்பாளராக செயல் பட்டு வந்த சுயமரியாதை சுடரொளி இரா. கோவிந்தசாமி அவர்களின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்வு 23.4.2023 ஞாயிறு காலை 11 மணிக்கு அவருடைய இல்லத்தில் நடைபெற்றது.

செங்கல்பட்டு மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் அ.பா. கருணாகரன் வரவேற்புரை ஆற்ற  செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் செங்கை சுந்தரம் தலைமையில் மாவட்ட அமைப்பாளர் பொன். ராஜேந்திரன், மாவட்ட துணைத் தலைவர் நெல்லை சாலமன், காஞ்சி மாநகரத் தலைவர் சா. வேலா யுதம்,  நகரத் தலைவர் க.தனசேகரன், நகர செயலாளர் கவிஞர்யாழன், கல்பாக்கம் நகர செயலாளர் சாமு ஆகியோர் முன்னிலையில் காஞ்சிபுரம் மாவட்ட காப்பாளர் டி.ஏஜி.அசோகன் படத்திறப்பு செய்து நினைவேந்தல் உரையாற்றினார். களியப்பேட்டை தமிழ்மணி, ம.கரு ணாநிதி ஆகியோர் கடவுள் மறுப்பு கூறி நினைவேந்தல் உரையாற்றினர்,

 தமிழ் பற்றாளர் அழகொளி. ஓய்வு பெற்ற காவலர் சங்க மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி (எஸ்அய், ஓய்வு), மாவட்ட பொரு ளாளர் தேவராஜ் (எஸ்அய், ஓய்வு), நாகேந்திரன் (எஸ்அய், ஓய்வு), ஆகியோர் கோவிந்தசாமி அவர் களின் காவல்துறை பங்களிப்பு பற்றி உரையாற்றினர்,

திருக்குறள் பயிற்றுநர் தமிழ் மகிழ்நன் திருக்குறளின் மீது அவ ருக்கு இருந்த பெரியார் பார்வை குறித்து பேசினார். குடும்பத்தினர் பானுமதி அம்மாள், தஞ்சை கபிஸ்தலம் திராவிடர் கழகத் தோழர் மலர்கொடி, சேலம் செல்லம்மாள், மறைமலைநகர் நகர தலைவர் திருக்குறள் வெங்கடேசன், கல்பாக் கம் நகர தலைவர் ம.விஜயகுமார், காஞ்சிபுரம் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் காஞ்சி முகிலன், தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ரா. பார்த்தசாரதி, காஞ்சிபுரம் மாவட்ட இணை செயலாளர் ஆ.மோகன், ஆகியோர் நினைவேந் தல் உரைக்கு பின் காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் அ.வெ.முரளி சிறப்புரையாற்றினார். கூட்டத் தின் முடிவில் கோவிந்தசாமி அவர் களின் மகன் கோ.தமிழ்ச்செல்வன் செங்கல்பட்டு அமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அனை வருக்கும் நன்றி கூறினார்.

அ‌.ராமகிருஷ்ணன் ரா.பிரபா கரன், கோ.ரவி, த. அசோக், ஆர்த்தி, ஜெ.கண்மணி மற்றும் குடும்பத் தினர் நண்பர்கள் அனைத்து கட்சி தோழர்கள் கலந்து கொண்டனர் குடும்பத்தினர் சார்பாக ஜெயக் குமார் நன்றிட நினைவேந்தல் கூட்டம் நிறைவுற்றது.

No comments:

Post a Comment