இந்தியாவில் கரோனா தொற்று - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 22, 2023

இந்தியாவில் கரோனா தொற்று

புதுடில்லி, ஏப்.22 இந்தியாவில் நேற்று (21.4.2023) 11,692 பேருக்கு கரோனா தொற்று உறுதியான நிலையில் இன்று (22.4.2023) 12,193 ஆக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண் ணிக்கை 4,48,69,684-லிருந்து 4,48,81,877 ஆக அதிகரித்துள்ளது. 

இந்தியாவில் கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 66,170 லிருந்து 67,556 ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் கரோனாவால் மேலும் 42 பேர் உயிரி ழந்துள்ளனர். இதன் மூலம் கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,31,258-லிருந்து 5,31,300 ஆக உயர்ந்துள்ளது.


No comments:

Post a Comment