Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
தனியார் ஆலையில் நன்கொடை கேட்டு மிரட்டிய பா.ஜ.க. நிர்வாகி கைது!
March 18, 2023 • Viduthalai

தூத்துக்குடி, மார்ச் 18- சாத்தான்குளம் அருகே தனியார் கிரசர் ஆலை யில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக பாஜக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்ட தோடு அவர்கள் வந்த சொகுசு கார்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான் குளம் அருகே உள்ள வேலன் புதுக்குளம் பகு தியில் தனியார் கிரஷர் ஆலை ஒன்று செயல் பட்டு வருகிறது. இங்கு மேலாளராக நவீன் குமார் என்பவர் பணி புரிந்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று மாலை நேரத்தில் இடைச்சிவிளை ஆனந்த விளையைச் சேர்ந்த பா.ஜ.க. மாநில இளைஞரணி செயலாளரார் பூபதிபாண்டியன், திருச்செந்தூர் சரண் (எ) ஜெய ஆனந்த் ஆகிய இருவரும் இந்த நிறுவனத்திற்கு காரில் வந்துள் ளனர்.

அங்கு வந்த அவர்கள் அந்த நிறுவனத்தில் மேலாளர் நவீன் குமாரி டம் நன்கொடை கேட்டுள்ளனர். அப்போது மேலாளர் நவீன் குமார், பூபதி பாண்டியிடம் தங்களது நிறுவன உரிமையாளர் வெளியே சென்றுள்ளதாகவும், நிறுவன உரிமையாளர் வந்த பின்னர் அவரிடம் நன்கொடை வாங்கி செல்லுமாறும் கூறியுள் ளார். இருப்பினும் தொடர்ந்து அவர்கள் இருவரும் நன்கொடை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். அப்போ தும் நிறுவன உரிமையாளரிடம் வாங்கிக் கொள்ளுமாறு நவீன் கூறியிருக்கிறார்.

இதனால் ஆத்திரம டைந்த பாஜக நிர்வாகிகள் பூபதிபாண்டியன், ஜெய ஆனந்த் ஆகிய இருவரும் அந்த நிறுவனத்தின் நுழைவு வாயி லில் தாங்கள் வந்த 2 கார்களையும் நிறுத்தி ரகளை செய்யத் தொடங் கினர். அதோடு அங்கு வந்த லாரிகளை தடுத்து நிறுத்தி வாக்குவாதத் திலும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் அங்கு பணி யில் இருந்த மேலாளர் நவீன்குமாருக்கு என்பவரை கொலை மிரட்டல் விடுத்ததாக வும் கூறப்படுகிறது. இதையடுத்து இதுகுறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த சாத்தான்குளம் காவல் அதிகாரிகள், 506/1, 341, 294/ஙி, ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கிரஷரின் முன்பு அடாவடி செய்த பூபதி பாண்டியன், ஜெய ஆனந்த் ஆகிய 2 பேரை யும் கைது செய்தனர். அதோடு அந்த நிறுவனத் தின் முன்  நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவர்களது 2 சொகுசு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

இது போன்று பாஜக வினர் அடிக்கடி அராஜக செயல்களில் ஈடுபட்டு கைது செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. அண்மையில் கூட திருக் கோவிலூர் பகுதியில் குடிப்பதற்காக தொடர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட பாஜக நகர செயலாளர் அறிவழ கனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn