Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
பெரியார் 1000 வினா-விடை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா
March 18, 2023 • Viduthalai

வழக்குரைஞர் அ.அருள்மொழி பங்கேற்பு

ஆவடி,மார்ச்18- ஆவடி கழக மாவட்டம் சென்னை  அயப்பாக்கம் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பெரியார் 1000 பரிசளிப்பு விழா 2.3.2023 அன்று காலை 10 மணியளவில் நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளர்களோடு கலந்து கொண்ட வழக்குரைஞர் அ.அருள்மொழி, பிரின்சு என்னாரெசு பெரியார், சி.அரசு, சண்முகநாதன் ஆகியோரை தலைமை ஆசிரியர், ஆசிரிய பெருமக்கள், மாணவர்கள் பள்ளியின் வாசலில் இருந்து வரவேற்றனர்.

பள்ளியின் அரங்கில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சி.கருணாகரன் தலைமையில் பெரியார் 1000 வினா-விடை பரிசளிப்பு நிகழ்ச்சி நடை பெற்றது.

அவர் தனது உரையில்: தேர்வினையும் பரிசளிப்பு நிகழ்வினையும் சிறப்பாக நடத்த உதவிய அனைவருக்கும் நன்றி கூறினார். பின்னர் வழக்குரைஞர் அ.அருள்மொழி, பள்ளியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து வரும் சி.அரசு, பிரின்சு என்னாரெசு பெரியார், சண்முகநாதன், கோவி.கோபால், பா.இராமு, ஏஜஸ் அகமது ஆகியோருக்கு பள்ளியின் சார்பாக பொன்னாடை போர்த்தி சிறப்பு செய்தார். 

பெரியார் 1000 தேர்வினைப் பற்றிய அறிமுக உரையினை கோவி.கோபால் ஆற்றினார். 

தோழர் சி.அரசு தனது தொடக்க உரையில், அரசுப் பள்ளிகள் சிறப்பாக செயல்படவேண் டியதின் அவசியத்தை விளக்கினார். தந்தை பெரியார் போன்ற தலைவர்களை பற்றி இன் றைய தலை முறையினர் தெரிந்து கொண்டால் தான் அடுத்த தலைமுறை சிறப்புறும் என்றார். பள்ளியில் தேர்வு எழுதிய 200 மாணவர் களுக்கான கட்டணத்தை தானே ஏற்றுக் கொள்வதாகவும் அடுத்த ஆண்டு இன்னும் அதிக மாணவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என்றும் தனது எண்ணத்தை தெரிவித்தார். 

பள்ளியின் கட்டமைப்பிற்காக தொடர்ந்து உதவி வரும் சி.அரசு அவர்களுக்கு பள்ளியின் சார்பில் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவரும் கரவொலியுடன் நன்றி தெரிவித்தனர்.

ஊடகவியலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் தனது உரையில்:- 

தடைகளை தாண்டி படிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத் தினார். போட்டித் தேர்வுகளுக்கு பெரியார் 1000 வினா-விடை எப்படியெல்லாம் உதவுகிறது என் பதையும், தலைவர்களைபற்றி தெரிந்துகொள்ள வேண்டியதன்  முக்கியத்துவத்தையும் கூறினார்.

பெரியார் 1000 தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு, பரிசுகள், மெடல்கள், புத்தகங்கள் போன்றவற்றை வழங்கி வழக்குரைஞர் அ.அருள்மொழி சிறப்புரை ஆற் றினார்.

அவர் தனது உரையில், அரசுப் பள்ளி மாண வர்கள் தன்னம்பிக்கையுடன் படிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தானும் தனது பள்ளி படிப்பு, கல்லூரிப் படிப்பு என அனைத்தையும் அரசுப் பள்ளிகளிலேயே படித்ததை நினைவு கூர்ந்தார். திராவிட இயக்கங்களினால் தமிழ் நாடு மாண வர்கள் பெற்ற, பெற்றுக் கொண்டிருக்கிற பயன் களை கூறினார். கல்வி எப்படியெல்லாம் ஒரு காலத்தில் மறுக்கப்பட்டது என்பதை மாணவர்கள் உணரும் வண்ணம் பேசினார். மறுக்கப்பட்ட கல்வி பெரியார் போன்ற தலைவர்களால் அனைவருக்கும் கிடைத்ததை நினைவு படுத்தினார். எனவே மாணவர்கள் தன்னம்பிக்கையுடனும், ஒழுக்கத்துடனும் படித்து வாழ்வில் முன்னேற வேண்டும் என் பதினை  வலியுறுத்தி பேசினார். மாணவர்களும், ஆசிரியர்களும் ஆர்வத்துடன் செவிமெடுத் தனர் .

பள்ளி தலைமை ஆசிரியரிடம் தந்தை பெரியார் ஒளிப்படம் மற்றும் புத்தகங்களை வழக்குரைஞர் அ.அருள்மொழி, பிரின்சு என்னாரெசு பெரியார், சி.அரசு, சண்முகநாதன், ஆகியோர் வழங்கினார்கள்.

தோழர் பா.இராமு நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn