'நீட்' தேர்வு குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முக்கிய கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 1, 2023

'நீட்' தேர்வு குறித்து உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி முக்கிய கருத்து

புதுடில்லி, மார்ச் 1- "நீட் தேர்வு குறித்த வழக்குகளின் எண்ணிக்கை, லட்சக் கணக்கான மாணவர்களின் விருப்பங்களை மட்டும் உணர்த்த வில்லை, மருத்துவக் கல்வியில் சீர் திருத்தம் தேவை என்பதனையும் அது குறிக்கிறது" என்று உச்ச நீதி மன்ற தலைமை நீதிபதி தெரிவித் துள்ளார்.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் 26.2.2023 அன்று 19ஆவது கங்கா ராம் சொற்பொழிவில் கலந்துகொண்டார். அதில், 'சுகா தாரத்தில் நியாயம் மற்றும் சமத் துவத்துக்கான வேட்கை' என்ற தலைப்பில் உரையாற்றினார். அப் போது பேசிய அவர் கூறியதாவது: பெரும்பாலும், கொள்கைத் தளங் களில் நீதிமன்றம் தலையிட முடி யாது என்றாலும் மாணவர்களின் பிரதிநிதித்துவத்தை கேட்பது அர சின் கடமையாகும். அநீதி இழைக் கப்படும் போதெல்லாம் தலையிடு வது நீதி மன்றங்களின் கட்டமைக்கப் பட்ட கடமையாகும்.

நீட் தேர்வு தொடர்பாக தொட ரப்பட்டுள்ள வழக்குகள் லட்சக் கணக் கான மாணவர்களின் கனவு, விருப் பங்களைச் சுட்டிக்காட்டு கின்றன. இது இந்தியாவில் மருத் துவம் மிகவும் விரும்பக்கூடிய தொழிலாக இருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றன. மேலும், இந்த வழக்குகள் இந்தியாவில் மருத் துவக் கல்வியில் சீர்திருத்தம் தேவை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றன.

நீதியின் குறிக்கோள் சட்டம் மற்றும் மருத்துவம் ஆகிய இரு துறைகளுக்கும் வழிகாட்ட வேண் டும் -_ இரண்டு துறைகளும் நேர்மை, சமத்துவம் மற்றும் தனிநபர், சமூக நலன்களின் அக்கறை கொண் டுள்ளது. சட்டத்தில் மக்கள் நியாய மாக நடத்தப்பட வேண்டும். சுகா தாரத்தில் சேவை மற்றும் வளங்கள் மக்களுக்கு சமமாக வழங்கப்பட வேண்டும். சுகா தாரத்தைப் பெறு வதில் விளிம்புநிலை மக்கள் எப் போதும் பல தடங்கல்களை எதிர் கொள்கின்றனர். வகுப்பு, ஜாதி, பாலினம், மதம் போன்ற சுகா தாரத்தைச் சேராத புறக்காரணிகள் தனிமனிதனின் சுகாதார நிலையைத் தீர்மானிக்கின்றன.

காசநோய் பாதிப்பு விகிதம் ஏழை களிடமும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களிடமும் அதிக அளவில் காணப்படுகின்றன. காசநோய் சிகிச் சையின் போது ஊட்டசத்து குறை பாடு இருந்தால், அவர்கள் மரணமடை வதற்கான வாய்ப்பு ரு 3 மடங்கு  அதிகம். விளைவுகளில் உள்ள இந்த ஏற்றத் தாழ்வு சமூகத்தில் உள்ள கேடுகளை பிரதிபலிக்கிறது.

சுகாதாரத்துறையில் நீதியை நிலைநாட்ட, சமத்துவமும் நியாய மும் முதன்மையான காரணிகளாகும். சுகா தாரத்தில் நீதியை புரிந்து கொள் வதற்கான வழிகளில் ஒன்று, சுகா தாரத்தைப் பெறுவதில் பங்கு இருக்க வேண்டும். இதற்கான அர்த்தம், ஆரோக்கியமாக இருப்பதற்கு ஒவ் வொரு மனிதனுக்கும் நியாயமான, சமமான வாய்ப்புகள் உண்டு என்பதே.

சுகாதாரம் என்பது நீதியின் மற்றொரு கூறு, மருத்துவருக்கும் நோயாளிக்கும் இடையிலான நோயாளியின் நலன் மற்றும் அவரது உடல்குறித்த நெறிமுறை குறிக்கோள் களை உள்ளடக்கியதாகும். இறுதி யான நோக்கம் என்பது, நியாயத்தை அடைவது, கவுரவத்தை ஊக்கு விப்பது, மக்கள் ஆரோக்கியமான வாழ்க்கையே மேற்கொள்வது மற்றும் சமூகத்திற்கு பங்களிப்பு செய்வதேயாகும்.

சுகாதாரத்தில் ஏற்பட்டுள்ள பாகுபாடு மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கோபம், நோயாளி மருத்துவரை வெறும் சிகிச்சை அளிப்பாவராகவும், மருத் துவர் நோயாளியை, மருத்துவக் குறைபாட்டை சரிசெய்ய வந்தவராக வும் மட்டும் பார்க்கும் போது மேலும் மோசமடைகிறது.

சுகாதாரத்துறையில் உள்ள இந்த பாகுபாடு குடிமக்களுக்கும் மருத்துவ மனைக்கும் இடையில் வன்முறையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மருத் துவத் தொழில் இன்று சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது. இந்த வன்முறை நோயாளிக்கு மருத்துவச்சேவை வழங் குவதை தடுக்கிறது. இது நோயாளிக்கு பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

ஒட்டுமொத்த மருத்துவ சேவையை உயர்த்துவதற்கும், பாதிக் கப்படும் மக்களுக்கு தரமான மருத் துவச் சேவையை வழங்குவதற்கும் அரசின் கொள்கைகள் உறுதியாக உள்ளன. இந்திய மக்கள் தொகையில் உற்பத்தி திறனை ஊக்குவிக்க சுகா தார வல்லு நர்கள், சமூகத்தலைவர்கள், சட்டமியற் றுபவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் ஒருங்கி ணைந்து, சுகாதாரத்திற்கான அணு கலை அடைய சாத்தியமான தீர்வு களை கண்டடையும் முன்முயற்சி களில் ஈடுபட வேண்டும்" 

இவ்வாறு அவர் பேசினார்.


No comments:

Post a Comment