ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை உயர் நீதிமன்றம் கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 21, 2023

ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை, மார்ச் 21- மேனாள் முதல மைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய விசாரணை அறிக்கை சுகாதாரத்துறையின் ஆய்வில் உள் ளது என தமிழ்நாடு அரசு, உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

மேனாள் முதலமைச்சர் ஜெய லலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஆணையம் கடந்த 2022 ஆக.23ஆ-ம் தேதி தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில், ஜெயலலிதா மரணம் தொடர்பாக வி.கே.சசிகலா, டாக் டர். கே.எஸ்.சிவகுமார், அப்போ தைய தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன், அப் போதைய சுகாதாரத் துறை அமைச் சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்டோ ரிடம் மீண்டும் விசாரணை நடத்த பரிந்துரை செய்திருந்தது. நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை அடிப்படையில் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்த சிபிஅய்அய்க்கு உத்தர விடக்கோரி கோபால்ஜி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், ஜெயலலிதாவுக்கு வழங் கப்பட்ட சிகிச்சையில் வெளிப் படைத்தன்மை பின்பற்றப்பட வில்லை. எனவே ஜெயலலிதாவுக்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சை, மரணம் குறித்த சந்தேகங்களை தீர்க்கும் வகையில் முழுமையான, நியாயமான விசாரணை நடத்த வேண்டியது அவசியம். நீதிபதி ஆறு முகசாமி ஆணையம் அறிக்கை சமர்ப்பித்து ஆறுமாதங் களுக்கு மேலாகியும், இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. இந்த விவகாரத்தில் தமிழ் நாடு அரசின் உயரதிகாரிகள், மேனாள் அமைச்சர்கள் சம்பந் தப்பட்டுள்ளதால் சிபிஅய் விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும் என கோரி யிருந்தார். இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும்நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று (20.3.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம் ஆஜராகி, நீதிபதிஆறுமுகசாமி ஆணைய அறிக்கைசட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, தற்போது சுகாதாரத்துறையின் ஆய்வில் உள்ளது. 

மருத்துவ கவனக்குறைவு இருப் பதாக தெரியவந்தால் சுகாதாரத் துறை முடிவெடுக்கும் என்றார். அதையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையின் அடிப் படையில் எடுக்கப்பட்ட நடவடிக் கைகள் குறித்து அரசின் விளக்கத் தைப் பெற்று தெரிவிக்க அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தர விட்ட நீதிபதிகள், விசாரணையை மார்ச் 27-ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment