கிருட்டினகிரி, மார்ச் 21- கிருட்டினகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றிய திராவிட கழக கலந்துரையாடல் கூட்டம் 19-.3.-2023 அன்று மாலை 5 மணியளவில் மத்தூரில் மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா சரவணன் இல்லத்தில் நடைபெற்றது.
ஒன்றிய தலைவர் கி. முருகேசன் தலைமையில் நடைபெற்ற இக் கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் வே.திருமாறன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
இக்கூட்டம் மாவட்ட தலைவர் த. அறிவரசன், செயலாளர் கா.மாணிக்கம், துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மண்டல மகளிர் அணி செயலாளர் மு.இந்திரா காந்தி ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது.
கழகத் தோழர்கள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களின் கருத்துரை வழங்கினர். இறுதியாக மாநில பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் அண்ணா.சர வணன் வழிகாட்டுதல் உரையாற் றினார்.
இறுதியாக ஒன்றிய துணைத் தலைவர் சா. தனஞ்செயன் அனை வருக்கும் நன்றி கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் ச. கிருஷ்ணன் ,கிருட்டினகிரி நகர தலைவர் கோ. தங்கராசன், மத்தூர் நகர தலைவர் சி.வெங்கடாசலம், மாவட்ட இளைஞரணி செயலா ளர் ந.சிலம்பரசன், எழுத்தாளர் மன்ற மாவட்ட அமைப்பாளர் இரா. பழனி, மகளிர் அணி பொறுப் பாளர்கள் முருகம்மாள், உண்ணா மலை, தோழர்கள் சிறீதரன், செம் மொழி, இனியன் மற்றும் தோழர் கள் கலந்து கொண்டனர்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
தீர்மானம் 1. ஊற்றங்கரை அடுத்த கல்லாவி பகுத்தறிவாளர் கழக பொறுப்பா ளர் ஆசிரியர் இராம. சகாதேவனின் தாயார் அமராவதி மற்றும் பகுத் தறிவுப் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன் ஆகி யோரின் மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும், வீர வணக் கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
தீர்மானம் 2. மத்தூர் ஒன்றிய திரா விடர் கழகத்தின் சார்பில் மாதந் தோறும் ஒவ்வொரு இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை அன்றும் கூட் டம் நடத்துவது என தீர்மானிக் கப்படுகிறது.
தீர்மானம் 3. மாதந்தோறும் நடை பெறும் ஒவ்வொரு கூட்டத்தையும், ஒவ் வொரு ஊரிலும் கிளைக்கழகம் தோறும் நடத்துவது என தீர் மானிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment