புத்தகப் புரட்சி - லியோனிக்கு முதலமைச்சர் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 26, 2023

புத்தகப் புரட்சி - லியோனிக்கு முதலமைச்சர் பாராட்டு

சென்னை, மார்ச் 26 தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தில் புத்தக புரட்சி நடப்பதற்கு லியோனியின் பணிகளே காரணம் என்று அவர் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். 

தமிழ்நாடு பாடநூல் கழகத் தின் தலைவர் திண்டுக்கல் அய்.லியோனி எழுதிய ''வளர்ந்த கதை சொல்லவா'' புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று (25.3.2023) நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, புத்தகத்தின் முதல் பிரதியை வெளியிட, அதை மக்க ளவை தி.மு.க. குழு தலைவர்  டி.ஆர்.பாலு   பெற்றுக் கொண் டார். 

விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:- இதுவரைக்கும், தான் வளர்ந்த கதையைத்தான் பேச்சு வழியாக நம்முடைய லியோனி சொல்லிக் கொண்டிருந்தார். இப்போது தான் முதன்முதலாகதான் வாழ்ந்த கதையை, வளர்ந்த கதையை எழுத்தாகவும் சொல்ல தொடங்கியிருக்கிறார்.

அவருடைய பேச்சு மாதிரியே எழுத்தும் அவருக்கு கை வந்தி ருக்கிறது. எல்லோருக்கும் இப் படி பேச்சும் எழுத்தும் ஒன்றாக கை வராது. அவருடைய எழுத் தும் சுவையாகத்தான் இருக் கிறது. பட்டிமன்ற மேடைகளில் லியோனியுடைய அடை மொழியே 'நகைச்சுவைத் தென்றல்'தான். தென்றல் எப்படி மிருதுவாக வருடி, ஒரு இதமான உணர்வை கொடுக்குமோ, அதே மாதிரி அவருடைய 'டைமிங் ஜோக்ஸ்' இருக்கின்றதே அதே மாதிரிதான் இருக்கும்.

அது பட்டிமன்றமாக இருந் தாலும் சரி, பாட்டுமன்றமாக இருந்தாலும் சரி, கருத்தரங்கமாக இருந்தாலும் சரி, விவாத மேடை களாக இருந்தாலும் சரி, பொதுக் கூட்டங்களாக இருந்தாலும் சரி, தொலைக்காட்சியினுடைய விவாதங்கள், எதுவாக இருந்தா லும், தன்னுடைய நகைச்சுவை பேச்சால், அந்த மேடையில் இருக்கக்கூடிய பார்வையா ளர்களை மட்டுமல்ல, வந்திருக் கக்கூடிய உங்களையும் தன்வசப் படுத்தக்கூடிய ஒரு ஆற்றல் அவ ருக்கு இருக்கிற காரணத்தால் தான் அவரை 'நாவரசர்' என்று கூட சொல்லலாம்.

அந்த அளவிற்கு ஒரு ஆற்றலை பெற்றிருக்கக்கூடியவர் நம்முடைய லியோனி. ஆரம்பக் காலங்களில் தமிழ்நாடே அவரு டைய உரைகளை நேரடியாகவும், கேசட்டுகள் வாயிலாகவும் கேட்டு, மெய் மறந்து இருந்தது. தமிழ்நாடே மயங்கியபோது நான் மட்டும் விதிவிலக்கா என்ன? காரில் போகும் போதெல்லாம் அவருடைய கேசட்டுகளை நான் கேட்பதுண்டு.

 இன்றைய தினம் தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் இந்தளவு செயல்பட லியோனியின் ஆர்வம் அடிப்படை காரணமாக அமைந்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சி நடைபெற்றபோது, ஓராண்டு காலத்தில் 6 புத்தகம் தான் வெளியிட்டிருந்தார்கள். ஆனால், கடந்த 2 ஆண்டுகளில் தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு 120 புத்தகங்கள் வெளியாகி இருக்கிறது. அதற்கு முழு கார ணம் நம்முடைய லியோனியினுடைய சீரிய முயற்சிதான். இன்னும் 150 புத்தகங்கள் தயாராகிக்கொண்டிருக்கிறது. இப்படி ஒரு புத்தகப்புரட்சி நடக்க லியோனியின் பணிகள் காரணமாக அமைந்திருக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். விழாவில், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, அந்தியூர் செல்வராஜ், மேனாள் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோ வன், எழுத்தாளர் எஸ்.ராம கிருஷ் ணன், லியோ சிவக்குமார் உள் பட பலர் கலந்து கொண்டனர்.


No comments:

Post a Comment