அபாய அறிவிப்பு: நாள்தோறும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகும் 5,500 குழந்தைகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 12, 2023

அபாய அறிவிப்பு: நாள்தோறும் புகையிலைப் பழக்கத்திற்கு அடிமையாகும் 5,500 குழந்தைகள்

ஆண்டுதோறும் சாவு 10 இலட்சம்புதுடில்லி, மார்ச் 12- கைபிடிப்பதால் ஆண்டுதோறும் இந்தியாவில் 10 லட்சம் மரணங்கள் நிகழ்வதாக தகவல் வெளியாகி உள்ளதுபுகையிலையை புகைப்பவருக்கு மட்டுமில்லாமல் அந்த பாதிப்பு அருகில் உள்ளவர்களுக்கும் மிக பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எந்தவொரு வடிவத்திலும் புகையிலையின் நுகர்வு எல்லோருக்கும் தீங்கிழைக்கக்கூடியதுதான். ஆனாலும் உலகெங்கும் பலர் இதற்கு அடிமையாகி உயிரிழக்கின்றனர். 

2ஆவது இடத்தில் இந்தியா

இந்நிலையில் இதுகுறித்து பிரபல தொற்றுநோய் நிபணர் புரோஹித் கூறுகையில், "அதிகமாக புகையிலை பயன்படுத்துபவர்களில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு 26 கோடியே 80 லட்சம் பேர் புகையிலை பயன்படுத்துகின்றனர். இந்த புகையிலை பயன்பாட்டால் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் புகையிலை சுவாசிப்பதால் உயிரிழப்பதாகவும்” தெரிகிறது. 

புகை பிடிப்பதால் இந்தியாவில் ஆண்டுதோறும் 10 லட்சம் மரணங் கள் நிகழ்கின்றன. பக்கத்திலிருந்து புகையை சுவாசிப்பவர்களில் 2 லட்சம் பேர் இறக்கிறார்கள். மேலும், இந்தியாவில் புற்றுநோய் மரணங்களில் 27 சதவீதம் மரணங் கள், புகையிலை பயன்பாட்டால் ஏற்படுகின்றன” என்றார்.

5,500 குழந்தைகள் அடிமை

இதனை தொடர்ந்து தொற்றுநோய் நிபுணர் கூறியதாவது, "நாட்டில் தினமும் 5,500 குழந்தைகள் புகையிலை பழக்கத்துக்கு அடிமை ஆகிறார்கள். அவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர், புற்றுநோய், மாரடைப்பு, ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளில் பாதிக்கப்படுகின்றனர். மேலும், புகைபிடிக்கும்போது அருகில் இருந்து புகையை சுவாசிப்பவர்களுக்கு இதய நோய்கள், நுரையீரல் புற்றுநோய், குழந்தைகளுக்கு சுவாச தொற்று ஏற்படும் என்று தெரிவிக்கின்றனர்.

மேலும், ஓட்டல், உணவகம், விமான நிலையம் ஆகிய இடங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் புகைபிடிக்க அனுமதி அளிக்கப்படுகிறது. அந்த பகுதிகளை ரத்து செய்து, பொது இடங்களில் 100 சதவீத தடை விதிக்க வேண்டும். அப்போதுதான் பாதிப்புகளை குறைக்க முடியும் என்றார். புகையிலையில் ஆயிரக்கணக்கான ரசாயனங்கள் இருப்பதாகவும், அதில் குறைந்தது 80 ரசயானங்கள் புற்றுநோயை உண்டாக்குவதாக தெரிவித்தார். இந்த ரசாயனங்களால் 80 விதமான புற்றுநோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். பெண்களுக்கு கூட புகை யிலை பழக்கத்தால், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்று நோய் ஏற்படுகின்றன” என்றார்.

புகையிலை விளைவிக்கும் தீங்குகள்

புகை பிடிப்பதனால் கார்பன் மோனாக்சைடு உடலில் சென்று இதயமும் கடுமையாக பாதிக்கப் பட்டு நுரையீரலுக்கு மற்றும் கை கால்களுக்கு தேவையான ஆக்சிஜன் குறைகிறது. இதனால் புற்று நோய், மாரடைப்பு, பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

நிறுத்தினால் என்ன பயன்?

புகைபிடிப்பதை நிறுத்தினால் ஆண்மைக் குறைவு, கருத்தரித்தல் பிரச்சினை, குறைப் பிரசவம், குறைந்த எடையில் குழந்தை பிறப்பது, கருச்சிதைவு ஆகியவை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது என்கின்றனர் மருத்துவர்கள்.


No comments:

Post a Comment