Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
ஓமாந்தூரார்
February 18, 2023 • Viduthalai

'வரலாறு படியுங்க உதய நிதி!' என்று ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளது 'தினமலர்', (12.2.2023). இதோ அது:

''ஓமாந்தூர் ராமசாமி ரெட்டி யார், முதல்வராக இருந்த கால கட்டத்தில், ஒருமுறை அவரது காரானது ஒரு வழிப்பாதையில் செல்ல நேரிட்டது. அப்போது, அந்தப் பாதையில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர், காரை வழிமறித்து, 'இது, ஒரு வழிப்பாதை; இந்த வழியாகச் செல்ல அனுமதியில்லை' என்று கூறியுள்ளார்.

உடன் ஓமந்தூரார், 'நான் யார் தெரியுமா?' என்று கேட்க, 'தெரியும் சார்... சட்டம் அனை வருக்கும் சமமானது' என பதில் அளித்துள்ளார், அந்தக் காவலர்.

ஓமந்தூரார் இடத்தில், திராவிட கட்சிகளின் முதல்வர்கள் இருந்திருந்தால், பாதுகாப்புப் பணியில் இருந்த காவலரின் கதி என்னவாகியிருக்கும் என்று, கற்பனை செய்துகூட பார்க்க முடியாது. ஆனால், ஓமந்தூரார், அந்தக் காவலரை மறுநாளே நேரில் வரவழைத்து பாராட்டியதுடன், பதவி உயர்வும் வழங்கினார். இப்படிப்பட்ட அற்புதமான தலைவர்கள் ஆண்ட தமிழகம்தான், இன்று தரமற்ற அரசியல்வாதிகளின் கையில் சிக்கித் தவிக்கிறது.

அரசியலில் புதிதாக நுழைந் திருக்கும் உதயநிதி போன்ற வர்கள் ஓமந்தூரார், காமராஜர் போன்ற அப்பழுக்கற்ற தலைவர் களின் அரசியல் வரலாற்றை கொஞ்சமாவது படித்துப் பார்க்க வேண்டும்.''என்பதுதான் 'தின மலரில்' வெளிவந்துள்ள கடிதம்.

ஒழுக்க சீலர் ஓமாந்தூரார் என்ற அடைமொழிகூட உண்டு.

ஓமாந்தூரார்பற்றி இது மட்டும்தான் தெரியுமா? 'சேரன்மாதேவி, சேரன் மாதேவி போராட்டம்' என்று சொல்கிறோமே, அந்தப் போராட்டம் தொடங்கப்படு வதற்கே காரணம் ஒரு வகையில் அந்த ஓமாந்தூரார்தான்.

காங்கிரஸ் பெயரால், மக்க ளின் நன்கொடையோடு நடத் தப்பட்டதுதான் சேரன்மாதேவி குருகுலம். இதன் நிர்வாகி வ.வே.சு.அய்யர். அந்தக் குரு குலத்தில் பார்ப்பன மாணவர் களுக்குத் தனியாகவும், சிறப் பாகவும் உணவு ஏற்பாடு! பார்ப்பனர் அல்லாத மாணவர் களுக்கு வேறு இடம்; வேறு வகையான உணவு.

அந்த குருகுலத்தில் பயின்று விடுமுறைக்கு ஊர் வந்த ஓமாந்தூரார் மகன் தன் தந்தையிடம் இந்த பாராபட்சத் தையும் சொல்ல 'இதை நயினா விடம்' போய்ச் சொல்லச் சொல்லி யிருக்கிறார். நயினா என்றால் வேறு யாருமில்லை, அப்பொழுது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் செயலாளராக இருந்த தந்தை பெரியார்தான்!

இதுபோன்ற பாரபட்சத்தை தந்தை பெரியார் விடுவாரா? போர்க்கொடி தூக்கினார். தமிழ் நாடு காங்கிரஸ் கூட்டத்தில் தீப்பொறி பறந்தது. பெரியார், திரு.வி.க., டாக்டர் வரதராஜூலு நாயுடு, எஸ்.இராமநாதன், என்.தண்டபாணி பிள்ளை இவர்கள் எல்லாம் ஓர் அணி; ராஜாஜி, என்.எஸ்.வரதராச்சாரி, கே.சந்தானம், சாமிநாத சாஸ்திரி போன்ற பார்ப்பனர்கள் காங்கிரஸ் கமிட்டியிலிருந்து வெளியேறினர் என்ற வரலாறு தெரியாமல் கடைசியில் குருகுலம் இழுத்து மூடப்பட்டது என்ற சரித்திரம் சங்கி 'தினமலர்' கூட்டம் அறியுமா?

ஓமாந்தூரார் முதலமைச்ச ராக இருந்தபோது, ''இவரு தாடியில்லாத ராமசாமி நாயக்கர்'' என்று பார்ப்பனர்கள் பிரச்சாரம் செய்ததுண்டே!

காந்தியார் அழைத்துக் கேட்டபோது, புள்ளி விவரங்களு டன் பார்ப்பனர்கள் கல்வி, உத் தியோகங்களில் ஆதிக்கம் செலுத்துவதை விளக்கிக் கூறியதுண்டே!

காந்தியாரிடம் மறுபடியும் பார்ப்பனர்கள் சென்றபோது, 'வேதம் படிக்கவேண்டிய உங் களின் கைகளில் ஸ்டெதாஸ் கோப்பும், டி-ஸ்கொயரும் ஏன்?' என்று முகத்தில் அறைந்ததுபோல் சொன்னாரே! விளைவு காந்தியார் தீர்த்துக் கட்டப்பட்டார்!

உதயநிதிக்கு வரலாறு தெரியுமா? என்று கேட்கும் 'தினமலரே' - இதற்குப் பதில் சொல் பார்க்கலாம்!

 -  மயிலாடன்


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
காரைக்குடி என்.ஆர்.சாமி இல்ல மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கொள்கையுரை
March 27, 2023 • Viduthalai
Image
இளைஞர்களே, மாவீரன் நாத்திகன் பகத்சிங்கைப் பின்பற்றுவீர்! அது உங்களை ''சொக்க சுயமரியாதைக்காரர்'' ஆக்கும்!
March 23, 2023 • Viduthalai
Image
ஓடப்பராக இருக்கும் ஏழையப்பர், உதையப்பர் ஆக வேண்டியதில்லை! ஓட்டப்பராகிவிட்டால் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாசிசம் வீழ்ந்துவிடும்!
March 27, 2023 • Viduthalai
Image
வேளாண் துறைக்கென்று தனி பட்ஜெட் - 'திராவிட மாடல்' ஆட்சியின் புதிய அணுகுமுறை விவசாயம் 'பாவ தொழில்' என்பது மனுதர்மம் - விவசாயிகளைக் கைதூக்கி விடுவது திராவிடம்
March 22, 2023 • Viduthalai
Image
தமிழ்நாட்டில் விளையாட்டு நகரத்திற்கு இரண்டு இடங்கள் தேர்வு
March 22, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இரங்கல் அறிக்கை இளைஞர் அரங்கம் உடற்கொடை உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn