தமிழ்நாடு முதலமைச்சருக்கு மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 25, 2023

தமிழ்நாடு முதலமைச்சருக்கு மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி பாராட்டு

புதுடில்லி, பிப்.25- தமிழ்நாட்டிலுள்ள சிறைகளில் சீர்திருத்தம் மேற்கொண்டு, சலவை இயந்திரங்கள் வழங்கி முன்மாதிரியுடன் திகழ்வதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.கஸ்டாலின் அவர்களைப் பாராட்டி மேற்கு வங்க மாநில மேனாள் ஆளுநர் கோபாலகிருஷ்ண காந்தி கடிதம் எழுதியுள்ளார்.

மற்றொரு முன்மாதிரி நடவடிக்கையாக தங் களது அரசின் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணி கள் துறையால்  சிறைவாசிகளுக்கு, குறிப்பாக பெண் கைதிகளுக்கு உதவும் வகையில் சிறைச் சாலைகளில் கனரக சலவை இயந்திரங்கள் (Heavy duty Laundry machine) வழங்கப்பட் டுள்ளது மிகவும் பாராட்டுக்குரியதாகும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை பாராட்டி கடிதம் எழுதியுள்ளார்.  

தென்னாப்பிரிக்காவில் 1913 ஆம் ஆண்டின் பிற்பகுதியில், பெரும் பேரணியில் பங்கேற்றதற்காக தில்லையாடி வள்ளியம்மாள் மற்றும் கஸ்தூரிபாய் மோகன்தாஸ் காந்தி ஆகியோர் மாரிட்ஸ்பர்க் சிறையில் மூன்று மாதங்கள் கடுமையான சிறைத் தண்டனை அனுபவித்தனர். “தென்னாப்பிரிக்கா வில் சத்தியாகிரகம்” என்ற புத்தகத்தில் காந்தியார் அவர்கள், அப்பெண்களுக்கு சிறையில் வழங்கப் பட்ட உணவு மிகவும் தரமற்றதாக இருந்தது என்றும், சிறையில் அவர்களுக்கு சலவை செய்யும் வேலை வழங்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். அவ்விரு பெண்களும் கடினமான சூழ்நிலைகளில் வாழ்ந்து பழகியவர்கள் என்றாலும், கடுமையான வேலை இருவருக்கும் சோதனையாக இருந்த தோடு மட்டுமல்லாமல் அவர்களது ஆரோக்கி யத்தையும் பாதித்தது.

1914 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் தேதி தில்லையாடி வள்ளியம்மாள் அவர்கள் காய்ச்சல் காரணமாக மரணமடைந்தார். கஸ்தூரிபா அவர்கள் சிறையிலிருந்து விடுதலையான போது உடல்மெலிந்து காணப்பட்டதோடு, முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது, 1944 ஆம் ஆண்டு அதே பிப்ரவரி 22 அன்று ஆகாகான் அரண்மனை சிறையில் உயிரிழந்தார். 

சிறைச்சாலைகளில் கனரக சலவை இயந்தி ரங்கள் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாங்கள் மேற்கொண்ட மிகச்சிறந்த சீர் திருத்த நிகழ்வை அதே பிப்ரவரி 22 ஆம் நாளில் பகிர்ந்து கொள்ள விரும்பியதாக தெரிவித்துக் கடிதம் எழுதியுள்ளார். 

இனி சலவை இயந்திரங்கள் பயன்பாடு நமது மாநிலத்தில் உள்ள அனைத்து சீர்திருத்த இல்லங் களிலும் நிலையான நடைமுறையாக இடம்பெறும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாடு தொடர்ந்து சிறைச் சீர்திருத்தங்களை முன்னெ டுத்து, அந்தத் துறையில், குறிப்பாக பெண் சிறை வாசிகளுக்கு உதவிடும் வகையில் ஒரு முன்மாதிரி யாக திகழட்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment