திராவிடர் கழகத் தலைவர் இரங்கல் அறிக்கை
தந்தை பெரியார் குடும்பத்தைச் சேர்ந்தவரும், அருமைத் தோழர் மானமிகு ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களின் அருமை மகனும், ஈரோடு கிழக்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினருமான திருமகன் ஈ.வெ.ரா. (வயது 46) மாரடைப்பால் ஈரோட்டில் மரண மடைந்தார் என்பதை அறிந்து பெரிதும் வேதனையும், துயரமும் அடைகிறோம். துடிப்பு மிக்க இளைஞர் - அரசியல் உலகில் ஜொலிக்கக் கூடியவர் என்ற எதிர்பார்ப்போடு இருந்தோம்.இந்த மரணம் ஈடு செய்யப்படவே முடியாதது. இயற்கையின் கோணல் புத்தி ஒரு வாலிபரின் உயிரைப் பறித்து விட்டது. பெருந்துயரத்திற்கு ஆளாகியுள்ள நமது அருமை நண்பர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன் அவர்களுக்கும், குடும்பத்திற்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4-1-2023
குறிப்பு: திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு த. சண்முகம் அவர்களின் தலைமையில் கழகத் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்துவர்.
No comments:
Post a Comment