தேர்தல் பணியைத் தொடங்கிய திமுக களத்தில் அமைச்சர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 25, 2023

தேர்தல் பணியைத் தொடங்கிய திமுக களத்தில் அமைச்சர்கள்

ஈரோடு,ஜன.25- ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈ.வெ.ரா ஜனவரி 4ஆம் தேதி மாரடைப்பால் மரணமடைந்தார். அதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஆளுங்கட்சியான திமுக அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரசுக்கு இத்தொகுதியை மீண்டும் ஒதுக்கி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், திமுக தேர்தல் பணியைத் தொடங்கி விட்டது.

அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு மாவட்ட திமுக சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டத்தைக் கூட்டி தேர்தல் பணியைத் தொடங்கிய இரண்டாவது நாளில் வாக்காளர்களிடம் வாக்கு கேட்கும் பணியையும் தொடங்கி விட்டார். அமைச்சர் முத்துசாமியுடன் அமைச்சர் கே.என்.நேருவும் இணைந்து ஈரோடு பகுதியில் காங்கிரஸ் கட்சியின் கை சின்னத்திற்கு வாக்கு கேட்டு தேர்தல் வேலையைத் தொடங்கி விட்டார்கள்.

பரபரப்பான இடைத்தேர்தல் களத்தில் திமுகவின் முன்னணி தலைவர்கள் இப்போதே தேர்தல் பணிகளைத் தொடங்கி விட்டதால், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மட்டுமின்றி தொண்டர்களும் உற்சாகத் தில் உள்ளனர்.

No comments:

Post a Comment