தந்தை பெரியாரின் மண்ணில் சனாதன முயற்சிகள் ஒரு போதும் வெற்றி பெறாது வைகோ திட்டவட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 25, 2023

தந்தை பெரியாரின் மண்ணில் சனாதன முயற்சிகள் ஒரு போதும் வெற்றி பெறாது வைகோ திட்டவட்டம்

மதுரை,ஜன.25- மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் களிடம் கூறுகையில்,

"தி.மு.க அரசு எண்ணற்ற மக்கள் நலத்திட்டங்கள் மூலம் மக்கள் செல்வாக்கை பெற்று வரு கிறது. இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக இன்று தமிழ்நாடு திகழ்கிறது.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க கூட் டணி கட்சி ஆதரவுடன் போட்டி யிடும் காங்கிரஸ் பெரிய வெற்றியை பெறும். தந்தை பெரியாரின் மண் ணில், பா.ஜ.க., கட்சியின் சனாதன முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறாது. அவர்கள் கோடிக்கணக் கில் பணம் செலவழித்தாலும் இடைத்தேர்தலில் அவர்களால் வெற்றி பெற முடியாது.

ஆளுநர் பதவி ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று. அரசியலில் தோற்றுப் போனவர்களுக்கு கொடுக்கும் பதவிதான் இந்த ஆளுநர் பதவி. இவர்களுக்காகத் தான் ஆளுநர் மாளிகைகளும் உருவாக்கப்பட்டன. இந்த ஆளுநர் மாளிகைகளை ஏழை, எளிய மக் களுக்கான மருத்துவமனைகளாகப் பயன்படுத்தலாம் என காந்தியார் கூறினார். எனவே ஆளுநர் மாளிகைகளை மருத்துவ மனைகளாக மாற்றலாம்.

தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி நாள்தோறும் அரசியல் சட்டத்திற்கு புறம்பாகப் பேசி வரு கிறார். தமிழ்நாட்டை தமிழ்நாடு என்று சொல்லிவிட்டு தற்போது போலித்தமான விளக்கத்தைக் கொடுத்துள்ளார். இதில் இருந்தே தெரிகிறது அவருக்குத் தமிழ் நாட்டை பற்றி எதுவும் தெரிய வில்லை என்று" என வைகோ தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment