மூன்று பார்ப்பனர்களின் செயல்பாட்டால் பன்னாட்டு விமானங்களில் மது வழங்கும் சேவை - மறுஆய்வு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 9, 2023

மூன்று பார்ப்பனர்களின் செயல்பாட்டால் பன்னாட்டு விமானங்களில் மது வழங்கும் சேவை - மறுஆய்வு

புதுடில்லி, ஜன. 9- பன்னாட்டு விமானங்களில் மது வழங்கும் சேவையை ஏர் இந்தியா, மறுஆய்வு செய்ய உள்ளதாக அதன் சிஇஓ கூறினார். டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா தலைமை நிர்வாக அதிகாரி கேம்ப்பெல் வில்சன், விமானத்தில் பயணி மீது சிறுநீர் கழித்த நிகழ்விற்கு பிறகு பன்னாட்டு விமானங்களில், அதன் மது வழங்கும் சேவையை விமான நிறுவனம் மறு ஆய்வு செய்ய உள்ளதாக கூறினார். நவம்பர் மாதம் நியூயார்க்கில் இருந்து ஒரு விமானத்தில் சக பெண் பயணியின் மீது சிறுநீர் கழித்த நிகழ்விற்காக, வில்சன் மன்னிப்பு கேட்டார். மேலும் நான்கு கேபின் பணியாளர்கள் மற்றும் ஒரு பைலட் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறினார்.

எங்கள் விமானத்தில் சக பயணிகளின் இந்த கண் டிக்கத்தக்க செயல்களால், வாடிக்கையாளர்கள் பாதிக்கப் பட்டுள்ள விசயத்தில் ஏர் இந்தியா ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது. இதற்காக நாங்கள் வருந்துகிறோம் மற்றும் வேதனைப்படுகிறோம், என்று காம்ப்பெல் வில்சன் கூறினார். சமூகவலைதளங்களில் மூன்றுக்கும் மேற்பட்ட வர்கள் மது அருந்திவிட்டு சிறுநீர் கழித்த தகவல்கள் தொடர்ந்து வந்துகொண்டு இருந்த நிலையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.


No comments:

Post a Comment