பட்டுக்கோட்டை கொள்கை வீரர் சின்னக்கண்ணுக்கு
நமது வீர வணக்கம்!
அவர் மிகுந்த கட்டுப்பாடும், பண்பாடும் நிறைந்த சிறந்த எமது கொள்கைப் பயணத் தோழர். அவரை விருது நகரில் அவர் பணியிலிருந்த காலம் முதலே அறிந்தவன்.
அவரது மறைவு அவரது குடும்பத்தினருக்கு எவ்வளவு பேரிழப்போ அதே அளவுக்கு திராவிடர் கழகத்திற்குமாகும்.
அவரை இழந்து, வருந்தும் அவரது வாழ் விணையர் திருமதி பத்மாவதி, மகன் சி. கபிலன், மகள் தமிழ்ச்செல்வி மற்றும் குடும்பத்தினர், பட்டுக் கோட்டை கழக உறவுகள் அத்துணைப் பேருக்கும் நமது ஆறுதலையும், மறைந்தவருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கொள்கை வீரர், சின்னக்கண்ணுக்கு நமது வீர வணக்கம்!
சென்னை தலைவர்,
25.1.2023 திராவிடர் கழகம்
குறிப்பு: அவரது மகன் கபிலன் அவர்களோடு கழகத் தலைவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்.
பட்டுக்கோட்டையில் 29.5.2018 அன்று நடைபெற்ற இளைஞரணி எழுச்சி மாநாட்டில் தமிழர் தலைவரால் பாராட்டப்பட்டு சின்னக்கண்ணுக்கு விருது வழங்கியது குறிப்பிடத்தக்கது. கழகப் பொதுச் செயலாளர் தஞ்சை இரா. ஜெயக்குமார் கழகச் சார்பில் நேரில் சென்று இறுதி மரியாதை செலுத்துவார்.
No comments:
Post a Comment