ராகுல் காந்தியின் நடைப்பயணம் நிறைவு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 12, 2023

ராகுல் காந்தியின் நடைப்பயணம் நிறைவு விழா

21 கட்சிகளுக்கு அழைப்பு

மல்லிகார்ஜூன கார்கே கடிதம்

புதுடில்லி,ஜன.12- கன்னியாகுமரியில் தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களால் கடந்த செப்டம் பர் 7ஆம் தேதி  அன்று காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி யின் இந்திய ஒற்றுமைக் கான  நடைப்பயணம் தொடங்கி வைக்கப்பட் டது.

கேரளா, கருநாடகா, ஆந்திரா, தெலங்கானா, மராட்டியம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், டில்லி, உத்தரப்பிரதேசம், அரியானா ஆகிய மாநி லங்கள் வழியாக அப் பயணம் பஞ்சாபை அடைந்துள்ளது. இது வரை 3 ஆயிரத்து 300 கி.மீ.க்கு மேல் நடைப் பயணம் நடந்துள்ளது. காஷ்மீர் தலைநகர் சிறீ நகரில், இம்மாதம் 30ஆம் தேதி பயணம் நிறை வடைகிறது.  

இந்த நிலையில், நடைப்பயணத்தின் நிறைவு விழாவில் பங் கேற்க வருமாறு ஒருமித்த கருத்து கொண்ட 21 அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு காங் கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே அழைப்பு விடுத்துள்ளார். அந்த தலைவர்களுக்கு எழுதிய கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:- நடைப்பயணம் தொடங் கியதில் இருந்தே ஒரு மித்த கருத்து கொண்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து வந்துள்ளோம். ராகுல்காந்தி அழைப் பின்பேரில், பல்வேறு கட் சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

அதுபோல், சிறீநகரில் 30ஆம் தேதி நடக்கும் நிறைவு விழாவுக்கு வரு மாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். வெறுப்பு, வன்முறைக்கு எதிராக இடைவிடாமல் போராடி உயிர்நீத்த காந்தியார் நினைவு நாளில் நடக்கும் நிகழ்ச் சியை காந்தியின் நினைவு களுக்கு அர்ப்பணிக்கி றோம். சிக்கலான இந்த தருணத்தில் முக்கிய பிரச்சினைகளில் இருந்து மக்களின் கவனம் திசை திருப்பப்படுகிறது. இத் தகைய சூழ்நிலையில், நடைப்பயணம் வலிமையான குரலாக உருவெடுத்துள்ளது. எனவே, நீங்கள் பங்கேற் றால், நடைப்பயணத்தின் நோக்கத்ததுக்கு வலு சேர்ப்பதாக அமையும். நீங்கள் பங்கேற்பீர்கள் என்று நம்புகிறேன். இன்று, நாடு பொருளா தார, சமூக, அரசியல் சிக்கலை சந்திக்கும்போது, எதிர்க்கட்சிகளின் குரல் நசுக்கப்படும் நிலையில், லட்சக்கணக்கானோரை நடைப்பயணம் இணைக் கிறது. சமூகத்தின் அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்றுள்ளனர். மக்களுடனான நேரடி உரையாடல்தான், நடைப்பயணத்தின் மிகப் பெரிய சாதனை. 

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment