ஒன்றியம் என்று சொல்வதற்கு சிலர் சர்ச்சையைக் கிளப்பி வருகிறார்களே, ஆர்.எஸ்.எஸின் குருநாதர் கோல்வால்கர் எழுதிய 'ஞானகங்கை'யில் இருப்பதை அப்படியே இங்கே தருகிறோம்.
''இன்று நமக்குள்ள அரசியல் சாஸனத்தை உருவாக்கியவர்கள் நமது ராஷ்ட்ரமானது உடலைப் போன்று பிரிக்கப்பட முடியாத ஓருறுப்பு தேசியம் வாய்ந்தது என்ற உறுதியான நம்பிக்கையில் ஆழ்ந்து ஊன்றியவர்கள் அல்லவென்பது நமது அரசியல் சாஸனத்தை சமஷ்டி அமைப்பாக நிறுவியதிலிருந்து புலனாகிறது; நமது நாடானது பல ராஜ்யங்களின் ஒன்றியம் (யூனியன்) என்று இன்று வர்ணிக்கப்படுகின்றது. இதற்கு முந்திய அமைப்பில் வெறும் மாகாணமாக இருந்தவையெல்லாம், மாநிலங்க ளென்ற கவுரவ அந்தஸ்துடன், எத்தனையோ தனி அதிகாரங்களுடன் விளங்குகின்றன. முற்காலத்தில் நமது ஒருமித்த ஒரே தேசிய வாழ்க்கையை, தனியுரிமை பெற்ற பல அரசியல் அமைப்புகளாகத் துண்டாடியபோது தேசியஒருமைப்பாடு சிதைந்தழிந்ததற்கும், தோல்வியடைந் ததற்கும் விதைகள் விதைக்கப்பட்டன. இன்றுள்ள சமஷ்டி அமைப்பும் அதே பிரிவினை விதைகளை விதைத்துள்ளது.''
மேலே கண்ட கூற்று, அவரது மொழி பெயர்ப்பான 'ஞானகங்கை' (Bunch of Thoughts- ஆங்கில நூல் தலைப்பு) நூலின் 326 ஆம் பக்கத்தில் உள்ளவை இவை.
இதிலே ஒன்றியம் (Union) என்று கூறியிருக்கிறார்.
குதர்க்கமாகப் பேசிவரும் தமிழ்நாடு ஆளுநருக்கு இது தெரியாதோ!
No comments:
Post a Comment