ஒரு பெண்ணின் உலக சாதனை 150 நாட்களாக தினமும் ஒரு மாரத்தான் ஒட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 18, 2023

ஒரு பெண்ணின் உலக சாதனை 150 நாட்களாக தினமும் ஒரு மாரத்தான் ஒட்டம்

மெல்பர்ன், ஜன. 18  150 நாட்களாக தினமும் ஒரு மாரத்தான் ஓடி ஆஸ்திரேலிய பெண் ஒருவர் உலக சாதனை படைத்துள்ளார். அவர் 6,300 கி.மீ தூரத்தை நிறைவு செய்தார். 

ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த மாரத் தான் ஓட்டப் பந்தய வீராங் கனை எர்ச்சனா முர்ரே பார்ட்லெட். 32 வய தான இவர் ஆரம்பத்தில் தொழில் முறை ஓட்டப்பந்தய வீராங் கனையாக இருந்தார். ஆனால் டோக்கியோ ஒலிம் பிக்கிற்கு தகுதி பெறு வதை தவறவிட்ட பிறகு தனது மற்றொரு வாழ்நாள் கனவில் கவனத்தை திருப் பினார். மாரத்தான் ஓட்டம் மூலம் முழு ஆஸ்திரேலியாவையும் சுற்றிவர முடிவு செய்தார். 

மேலும் 106 நாட்களுக்கு தினமும் ஒரு மாரத்தான் ஓடி கின்னஸ் உலக சாதனை படைத்த இங்கிலாந்தை சேர்ந்த மாரத்தான் ஓட்டப் பந்தய வீராங்கனை கேட் ஜேடனின் சாதனையை முறியடிக்கவும் அவர் விரும்பினார். 

அதன்படி 5 மாதங் களுக்கு முன்பு ஆஸ்தி ரேலியாவின் ஒரு முனையில் இருந்து நாட் டின் தெற்கு எல்லையை இலக்காக கொண்டு தனது மாரத்தான் ஓட்டத்தை முர்ரே தொடங் கினார். 

ஆஸ்திரேலிய விலங் குகள் மற்றும் தாவரங்களை பாதிக் கும் பேரழிவு குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற் படுத்த மாரத்தான் ஓட்டத்தை நடத்தினார். 

தொடர் மாரத் தான் ஓட்டத்தால் உடல் சோர்வு, உடலில் கொப்புளங்கள், கால் வீக்கம் போன்ற பல பிரச்சினைகளை சந்தித்த போதும் முர்ரே மாரத் தானை நிறுத்தாமல் தொடர்ந்து ஓடி னார். 

அதன்படி அவர் 150 நாட்களுக்கு தினமும் ஒரு மாரத்தான் ஓடி 6,300 கி.மீ. தூரத்தை நேற்று முன்தினம் நிறைவு செய்தார். இதன் மூலம் கேட் ஜேடனின் சாத னையை முறியடித்து, அதிக நாட்களுக்கு தினமும் ஒரு மாரத்தான் ஓடிய பெண் என்கிற உலக சாதனையை முர்ரே படைத்துள்ளார்.


No comments:

Post a Comment