Viduthalai

செய்திகள் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் விடையளிக்கிறார் ஊசி மிளகாய் ஒற்றைப் பத்தி கழகம் சிறப்புக் கட்டுரை தமிழ்நாடு தலையங்கம் மின்சாரம் வாழ்வியல் சிந்தனைகள்
126ஆவது நாள்: காஷ்மீரில் ராகுல்காந்தி நடைப்பயணம்
January 23, 2023 • Viduthalai

சிறீநகர், ஜன. 23 காஷ்மீர் மாநிலத்தில் ஒற்றுமை நடைப் பயணம் மேற்கொண்டு வரும் ராகுல்காந்தி, அங்கு வாட்டும் கடுங் குளிர் மற்றும் மழை காரணமாக, முதல் முறையாக குளிரில் இருந்து தன்னை காத்துக்கொள்ள மழைக் காப்புடை அணிந்து நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.  

126ஆ-வது நாளாக அவரது நடைப் பயணம் நடைபெற்று வருகிறது.

மதநல்லிணக்கத்தை வலியுறுத் தியும், 2024ஆம் ஆண்டு நாடாளு மன்ற தேர்தலில் காங்கிரஸ் கட் சிக்கு எழுச்சியூட்டவும், குமரி முதல் காஷ்மீர் வரையிலான 150 நாட்கள் நடைப் பயணத்தை ராகுல்காந்தி மேற்கொண்டு வருகிறார். கடந்த 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 7ஆம் தேதி  குமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்த இந்த நடைப் பயணமானது பல் வேறு மாநிலங்களை கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த  வியாழக்கிழமை (19.01.2023) பஞ்சாப் வழியாக காஷ்மீர் மாநிலத்திற்குள் நுழைந் தார். அவருக்கு தேசிய மாநாட்டு கட்சி தலைவர் மேனாள் முதல மைச்சர் பரூக் அப்துல்லா வரவேற்பு அளித்தார்.  கதுவா மாவட்டத்தின் எல்லையை பகிர்ந்து கொள்ளும் பஞ்சாப் மாநிலம் மாதோபூரில் ராகுல் காந்திக்கு பாடல் மற்றும் நடனங்களுக்கு மத்தியில் மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அவரது நடைப்பயணம் நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், வடமாநிலங் களில் கடும் குளிர் நிலவி வந்தாலும், இதுவரை வெறும்  டி-சர்ட் மட்டுமே அணிந்து நடைப் பயணம் சென்ற ராகுல் காந்தி, காஷ்மீரில்  நிலவும் கடும் குளிர், பனிப்பொழிவு காரண மாக, முதல் முறையாக  குளிரை போக்கும் குளிர் காப்புடை அணிந்து  நடைப் பயணம்  மேற் கொண்டார்.   ஜம்மு முழுவதும் தூறல் மழை பெய்ததால், ராகுல் காந்தி மழை மற்றும் குளிரில் இருந்து  தற்காத்துக் கொள்ள குளிர் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்கும் ஆடையை அணிந்தார் என்று கூறப்படுகிறது.

மழை நின்றதும்,  தான் அணிந்து இருந்த  மழைக் காப்புடையைக் கழற்றிவிட்டு,  மீண்டும் வெள்ளை நிற டி-ஷர்ட்டில் நடந்து சென்றதாக கூறப்படுகிறது. நடைப் பயணம் சத்வாலில் நிறுத்தப்பட்டு  ஹிரா நகரில் இருந்து துகர் ஹவேலி வரையிலும், விஜயபூரிலிருந்து சத்வாரி வரையிலும் செல்லும் என திட்டமிடப்பட்டு உள்ளது.

கதுவாவின் ஹட்லி மோரில் இருந்து மீண்டும் தொடங்கிய நடைப் பயணத்திற்கு ராகுல் காந்தி  மற்றும் அவருடன் நடைப் பயணத்தில் பயணிகளுக்கு காவல் துறை மற்றும் துணை ராணுவம்  வேலி அமைத்து, உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜாமர்களும் வைக்கப்பட்டுள்ளன.

காஷ்மீரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தின் போது சில இடங்களில் நடக்க வேண்டாம் என்று  ராகுலுக்கு பாதுகாப்பு முகமைகள்  முன்பு அறிவுறுத் தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது, 52 வயதான காங் கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் உள்ள பனிஹாலில் ஜனவரி 25 அன்று தேசியக் கொடியை ஏற்ற உள்ளார். 

மேலும் இரண்டு நாட் களுக்குப் பிறகு அதாவது ஜனவரி 27 அன்று அனந்த்நாக் வழியாக சிறீ நகருக்குள் நுழையத் திட்டமிடப் பட்டுள்ளது. ராகுலின் நடைப் பய ணம்  சிறீநகரில் ஜனவரி 30 அன்று நிறைவடைகிறது.  அன்று மாபெரும் பொதுக்கூட்டம் நடை பெறும் என்பதோடு இதில் கலந்து கொள்ள கூட்டணிக்  கட்சி தலைவர்கள், மாநில முதலமைச் சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட் டுள்ளது.


Comments

பெரியார் வலைக்காட்சி


பெரியார் பண்பலை

Popular posts
''அரசமைப்புச் சட்டமும் - ஆளுநரின் அதிகார எல்லையும்'' தி.மு.க. சட்டக் கருத்தரங்கத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் முழக்கம்!
January 21, 2023 • Viduthalai
Image
முதலமைச்சர் மோடியைப் பார்த்து, பிரதமர் வாஜ்பேயி ''ராஜதர்மத்தைக் காப்பாற்றுங்கள்'' என்று சொல்லவேண்டிய அவசியம் என்ன?
January 27, 2023 • Viduthalai
Image
பெரியார் நினைவிடத்தில் ஈ.வெ.கி.ச.இளங்கோவன் மரியாதை - தமிழர் தலைவர் வாழ்த்து
January 23, 2023 • Viduthalai
Image
ஒரத்தநாட்டில் கலைஞர் செய்திகள் தொலைக்காட்சிக்குத் தமிழர் தலைவர் பேட்டி
January 22, 2023 • Viduthalai
ஆசிரியர் விடையளிக்கிறார்
January 21, 2023 • Viduthalai
Image

தேட

Publisher Information
Contact
About
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily
அரசியல் அரசு அறிவியல் ஆசிரியர் அறிக்கை ஆசிரியர் உரை ஆசிரியர் விடையளிக்கிறார் இந்தியா இளைஞர் அரங்கம் உலகம் ஊசி மிளகாய் ஏட்டுத் திக்குகளிலிருந்து... ஒற்றைப் பத்தி கட்டுரை கரோனா கவிஞர் கலி.பூங்குன்றன் கழகக் களத்தில் கழகம் சட்டமன்றச் செய்திகள் சிறப்புக் கட்டுரை செய்திச் சுருக்கம் செய்தியும் சிந்தனையும்....! ஞாயிறு மலர் தந்தை பெரியார் அறிவுரை தமிழ்நாடு தலையங்கம் நடக்க இருப்பவை நாடாளுமன்ற செய்திகள் பகுத்தறிவுக் களஞ்சியம் பதிலடிப் பக்கம் பிற இதழிலிருந்து... பெரியார் கேட்கும் கேள்வி! மகளிர் அரங்கம் மருத்துவம் மற்றவை மின்சாரம் வணிகச் செய்திகள் வரலாற்றுச் சுவடுகள் வாழ்வியல் சிந்தனைகள்
Share this page
Email
Message
Facebook
Whatsapp
Twitter
LinkedIn