திருவண்ணாமலை மாவட்ட தலைவர் புலவர் கோ.ஏழுமலை மறைவு: கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 23, 2022

திருவண்ணாமலை மாவட்ட தலைவர் புலவர் கோ.ஏழுமலை மறைவு: கழகப்பொறுப்பாளர்கள் மரியாதை

திருவண்ணாமலை, டிச. 23- திருவண்ணா மலை மாவட்ட தலைவர் புலவர். கோ.ஏழுமலை கடந்த 16.12.2022 வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு மாரடைப்பு காரணமாக இயற்கை எய்தினார். 

17.12.2022 பிற்பகல் 2.00 மணிக்கு எவ்வித சடங்குகளும் இல்லாமல் பகுத்தறிவு முறைப்படி அவர் உடல் ஊர்வலமாக பெரியார் கொள்கைகளை முழக்கம் இட்டு எடுத்து செல்லப்பட்டது. அவரு டைய தாயாரின்  நினைவிடத்துக்கு அருகில் எவ்வித சடங்குகளுமின்றி அவரது உடல் அடக்கம் செய்யப் பட்டது.

இறுதியாக இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சி.மூர்த்தி தலைமை  தாங்கினார். மண்டல செயலாளர் பி.பட்டாபிராமன் இரங்கல் உரை ஆற்றினார். மாவட்ட மாணவர் கழகத்  தலை வர் தலைவர் மு.க.இராம்குமார் நன்றி உரை ஆற்றினார்.

நிகழ்வில் முனு.ஜானகிராமன், எம்.எஸ்.பலராமன், ஓகூர் சுந்தர மூர்த்தி, எஸ்.பன்னீர்செல்வம், கு.பஞ்சாட்சரம், சா.கிருட்டிணன், கோ.தேவராஜ் ,வழக்குரைஞர் சங்கர், பா.குமரிமன்னன், கு.இரா மன், திராவிடபழநி, பா.வெங் கட்ராமன், ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment