புதுச்சேரியில் இருந்து இலங்கைக்கு விரைவில் படகு சேவை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, December 19, 2022

புதுச்சேரியில் இருந்து இலங்கைக்கு விரைவில் படகு சேவை

புதுச்சேரி, டிச. 19, புதுச்சேரியில் இருந்து இலங்கைக்கு அடுத்த மாதம் முதல் படகுப் போக்குவரத்து தொடங்குகிறது. 

புதுச்சேரியில் இருந்து இலங்கையின் யாழ்ப்பாணம் மாவட் டம் காங்கேசன் துறைக்கு படகுப் போக்குவ ரத்துக்கு இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வந்தன. இதற்கான ஒப்புதலை இலங்கை அரசு ஏற்கெனவே வழங்கி இருந்தது. இந்த நிலையில் இந்த படகு சேவை அடுத்த மாதம் (ஜனவரி) மத்தியில் தொடங்குவதாக இலங்கை கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிர்மல் சிரிபலா டி சில்வா தெரிவித்து உள்ளார். 

இது தொடர்பாக மேலும் அவர் கூறியிருப்பதாவது:- 

இலங்கையின் யாழ்ப்பாணம் தீபகற் பத்தில் ஏராளமான இந்தியர்கள் வர்த்தக நடவடிக்கைகளை மேற் கொண்டு வருகின் றனர். இதற்காக காங்கேசன் துறைக்கும், புதுச் சேரிக்கும் இடையே படகுப் போக்கு வரத்து நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. இரு நாட்டு மக்களின் கோரிக்கைக்கு ஏற்பத் தொடங்கப்படும் இந்த சேவையால், இலங் கைக்கு அதிக அளவு வெளிநாட்டு வருவாய் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

அத்துடன் இந்தியாவுக்கு செல்லும் புத்த பயணிகளுக்கும் இது மிகவும் வசதியாக இருக்கும். இந்த சேவையில் ஈடுபடும் படகு உரிமையாளர்களுடன் நடத்திய ஆலோச னையின்போது, படகு சேவைக்காக துறைமு கங்களில் வசதிகளை மேம்படுத்துமாறு அவர்கள் தெரிவித்தனர்.

அதன்படி சுங்கத்துறை, குடியுரிமை மற்றும் பிற வசதிகளை மேம்படுத்துமாறு துறை செயலாளருக்கு அறிவுறுத்தப் பட்டு இருக்கிறது.  இதைப்போல தென் இந்தியாவில் இருந்து திரிகோணமலை மற்றும் கொழும்பு போன்ற பகுதி களுக்கும் போக்குவரத்து சேவைகள் தொடங்கப்படும். 

அதேநேரம் தலைமன்னா ருக்கும், இந்தியாவுக்கும் இடை யேயான படகு போக்குவரத்துக்கு இன்னும் ஒப்புதல் வழங்கப்படவில்லை. இவ்வாறு அமைச்சர் நிர்மல் சிரிபலா டி சில்வா கூறியுள்ளார். புதுச்சேரி மற்றும் காங்கேசன் துறை இடையேயான ஒரு வழி பயணத்துக்கு 60 டாலர் (சுமார் ரூ.4,800) கட்டணம் வசூலிக்கப்படும் என படகு உரிமை யாளர்கள் தெரிவித்து உள்ளனர். பயணி ஒருவர் 100 கிலோ வரையிலான பொருட்களை எடுத்துச் செல்ல முடியும். 

இந்த சேவைக்காக பயன்படுத் தப்படும் படகுகளில் 300 முதல் 400 பேர் வரை பயணம் செய்ய முடியும். புதுச்சேரியில் இருந்து மூன்றரை மணி நேரத்தில் காங்கேசன் துறையை அடைய முடியும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர். 

புதுச்சேரி-இலங்கை இடையேயான இந்த படகுப் போக்கு வரத்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் வர்த்தகர்களுக்கு பெரும் பயனை தரும் என எதிர் பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment