சென்னை, டிச.25 டிராக்டர்கள் ஏற்றுமதியில் இந்தியாவின் நம்பர் 1 பிராண்டாகத் திகழும் சோனாலிகா டிராக்டர்கள் மிகவும் உறுதியான, இத்துறையில் வேறெந்த நிறுவனமும் இதுவரை மேற்கொள்ளாத புரட்சிகரமான சூழலை அதன் செயல்பாடு மூலம் வெளிப்படுத்தியுள்ளது. மேலும் 2023-ஆம் நிதி ஆண்டின் எதிர்வரும் பொங்கல் விழா காலத்தை சிறப்பிக்கும் வகையில் தனது அதிகாரப் பூர்வ இணையதளத்தில் அனைத்து விதமான டிராக் டர்களின் விலை விவரத்தையும் வெளியிட முடிவு செய்துள்ளது.
இந்நிறுவனம் விவசாயிகளுக்குத் தேவையான கருவிகளை அளிப்பதோடு 140 நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தை புதுப்பித்து அதில் மிகவும் தெளிவாக டிராக்டர்களின் விலையை விவசாயிகள் புரிந்துகொள்ளும் வகையில் பதிவேற்ற உள்ளது. இதன் மூலம் விவசாயிகள் டிராக்டர் களின் விலையை அறிந்து அதற்கேற்ப நிதி நிலையை உருவாக்கிக் கொள்வர். இதன் மூலம் தங்களுக்கு விருப்பமான டிராக்டர்களை அதற்குரிய விலையை மட்டும் கொடுத்து வாங்க வழியேற் பட்டுள்ளது.
இது குறித்து இந்நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குநர் ரமன் மிட்டல் கூறுகையில், “இன்றைய சூழலில் விவசாயிகள் விவ ரங்களை நன்கறிந்தவர்களாக உள் ளனர். இதற்கு டிஜிட்டல் மயமாக்கல் மிக முக்கியக் காரண மாகும். டிராக்டர் வாங்குவதில் அதன் விலை விவரம் மிக முக்கிய காரணியாகும். இருப்பினும் பல ஆண்டுகளாக டிராக்டர்களின் விலை விவரம் சரிவர வெளியிடப்படுவ தில்லை. இத்தகைய சூழலில் எங்கள் நிறுவன டிராக் டர்களின் விலையை எங்களது அதிகாரப் பூர்வ இணைய தளத் தில் வெளியிட முடிவு செய்துள் ளோம்.
No comments:
Post a Comment