10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 25, 2022

10,11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

சென்னை, டிச. 25-  நடப்பு கல்வியாண் டுக்கான பொதுத்தேர்வு 2023ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற உள்ள நிலையில்,  10, 11, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுத தனி தேர்வர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று  அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “நடைபெறவுள்ள மார்ச் / ஏப்ரல் 2023, பத்தாம் வகுப்பு(10) / மேல் நிலை முதலாம் ஆண்டு(+1) / இரண்டாம் ஆண்டு(+2) பொதுத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதியான தனித் தேர்வர்களிடமிருந்து, இணைய தளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றது.

ஏற்கெனவே நேரடித் தனித்தேர்வராக மேல்நிலை முதலாமாண்டு (+1) பொதுத் தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற / தேர்ச்சி பெறாத / வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும், தற்போது மேல்நிலை இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வெழு துவதற்கும், முதலாம் ஆண்டு (+1) தேர்வில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.  தனித் தேர்வர்கள், 26.12.2022 (திங்கட்கிழமை) முதல் 03.01.2023 (செவ்வாய்க்கிழமை) வரையிலான நாட் களில் (31.12.2022 (சனிக்கிழமை) மற்றும் 01.01.2023 (ஞாயிற்றுக் கிழமை) நீங்கலாக காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மாவட்ட வாரியாக அமைக்கப் பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மய்யங்களுக்கு (ஷிமீக்ஷீஸ்வீநீமீ நீமீஸீtக்ஷீமீs) நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம்.

மேற்கண்ட தேதிகளில் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் 05.01.2023 (வியாழக்கிழமை) முதல் 07.01.2023 (சனிக்கிழமை) வரையிலான நாட்களில் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மய்யத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக ரூ.1000/- (மேல்நிலை) / ரூ.500 (பத்தாம் வகுப்பு) சிறப்புக் கட்டணமாக செலுத்தி இணைய வழி தத்கல் முறையில் விண்ணப்பித்துக் கொள்ளலாம். பத்தாம் வகுப்பிற்கு தேர்வுக்கட்டணம் ரூ.125 மற்றும் ஆன் லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 கட்டணம் செலுத்த வேண்டும். 

மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு தேர்வுகளை முதல் முறையாக எழுத விண்ணப்பிக்கும் தனித்தேர்வுகள் தேர்வுக் கட்டணம் ரூ.150, இதரகட்டணம் ரூ.35 ஆன்லைன் பதிவுக்கட்டணம் ரூ. 50 மொத்தம் ரூ.235 கட்டணமாக செலுத்த வேண்டும்.

மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டு தேர்வுகளை ஏற்கெனவே தேர்வெழுதி தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தேர்வர்கள் ஒவ்வொரு படத்திற்கும் தேர்வுக் கட்டணமாக ரூ.50-யும், இதர கட்டணம் ரூ.35, ஆன்லைன் பதிவுக் கட்டணம் ரூ.50 ஆகியவை கட்டண மாக செலுத்த வேண்டும். மாவட்ட வாரி யாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் இயக்கக சேவை மய்யங்களின் (நிஷீஸ்மீக்ஷீஸீனீமீஸீt ணிஜ்ணீனீவீஸீணீtவீஷீஸீs ஷிமீக்ஷீஸ்வீநீமீ நீமீஸீtக்ஷீமீs) விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை லீttஜீs://பீரீமீ1.tஸீ.ரீஷீஸ்.வீஸீ என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம். 


No comments:

Post a Comment