சீர்திருத்தத்தை உடனே மேற்கொள்ளாவிட்டால் அய்.நா. மதிப்பிழக்கும்: இந்தியா எச்சரிக்கை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, December 25, 2022

சீர்திருத்தத்தை உடனே மேற்கொள்ளாவிட்டால் அய்.நா. மதிப்பிழக்கும்: இந்தியா எச்சரிக்கை!

வாசிங்டன், டிச. 25, அய்.நா. பாதுகாப்பு அவையில் உடனடியாக சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண் டும் என வலியுறுத்தியுள்ள இந்தியா, அப்படிச் செய்யாவிட்டால் அந்த அமைப்பு மதிப்பிழக்கும் என எச்சரித் துள்ளது.

அய்.நா. பாதுகாப்பு அவையில் அமெரிக்கா, ரஷ்யா, இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா ஆகிய 5 நாடுகள் மட்டும் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது. மற்ற நாடுகளுக்கு இத்தகைய அதிகாரம் இல்லை. பன்னாட்டு அரசியலில் நிகழ்ந்துள்ள மாற்றங்கள் காரணமாக வீட்டோ அதிகாரத்தைப் பெற பல்வேறு நாடுகள் முயன்று வருகின்றன. குறிப்பாக இந்தியா, ஜப்பான், தென் ஆப்பிரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகள் தங்களை அய்.நா. பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக அறிவிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுத்தி வருகின்றன. எனினும், வீட்டோ அதிகாரத்தைப் பெற்றுள்ள நாடுகளின் அணுகுமுறை காரணமாக இதற்கான சீர்திருத்தம் தடைபட்டு வருகிறது. 

இந்நிலையில், அய்.நா. தலைமைய கத்தில் செய்தியா ளர்களிடம் பேசிய அய்.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி ருச்சிரா கம்போஜ், "அய்.நா. பாதுகாப்பு அவை உடனடியாக சீர்திருத்தப்பட வேண் டும். அய்.நா. பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு நாடுகளின் எண்ணிக் கையை அதிகரிக்க வேண்டும். இது நிகழாவிட்டால் அய்.நா மதிப்பிழக்கும். ஜி20 போன்ற பன்னாட்டு அமைப்புகள் அய்.நா.வை பின்னுக்குத் தள்ளி முன்னேறும். அய்.நா. பாதுகாப்பு அவையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக இருக்கக்கூடிய நாடுகளில் சில, தங்களுக்கு இருக்கும் வீட்டோ அதிகா ரம் வேறு யாருக்கும் இருக்கக் கூடாது என எண்ணுகின்றன. எனவே, சீர்தி ருத்தம் ஏற்படுவதை அவை விரும்ப வில்லை. அதன் காரணமாகவே இந்த விவகாரம் சிக்கல் நிறைந்ததாக உள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment