சென்னை,நவ.1- மணிப்பூர் மாநில ஆளுநராகவும், மேற்கு வங்க மாநில பொறுப்புஆளுநராகவும் இருப்பவர் இல.கணேசன். அவரது அண்ணன் எல்.கோபாலனின் 80-ஆவது பிறந்தநாள் விழா, வரும் 3-ஆம் தேதி சென்னையில் கொண்டாடப்படுகிறது. இதில் பங்கேற்குமாறு மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தாவுக்கு, இல.கணேசன் அழைப்பு விடுத்திருந்தார். அந்த அழைப்பை ஏற்று, விழாவில் பங்கேற்பதற்காக மம்தா நாளை மாலை சென்னை வருகிறார்.
மேற்கு வங்க முந்தைய ஆளுநருடன் மோதல் போக்கை கடைப்பிடித்த மம்தா தற்போது பொறுப்பு ஆளுநராக உள்ள இல.கணேசனுடன் நட்பு பாராட்டி வருகிறார். சென்னை வரும் மம்தா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும்சில அரசியல் கட்சித் தலைவர்களை சந்திக்கவுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நேற்று (31.10.2022) வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘நாளை மாலை தமிழ்நாட்டுக்கு வரும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது முகாம் அலுவலகத்தில் சந்தித்து பேச உள்ளார்’ என்று கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment