எவ்வித மூடச்சடங்குகளுமின்றி பதிவுத் திருமணமாக நடைபெற்ற அரியாங்குப்பம் சடகோபன் இல்ல மணவிழா! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, November 14, 2022

எவ்வித மூடச்சடங்குகளுமின்றி பதிவுத் திருமணமாக நடைபெற்ற அரியாங்குப்பம் சடகோபன் இல்ல மணவிழா!

புதுச்சேரி, நவ.14 புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளி பெரியார் அறிவியல் மன்றம் நிறுவனர் புதுச்சேரி தன்னுரிமை கழகத் தலை வர் தூ.சடகோபன் - திலகவதி ஆகியோர் மகன் இளஞ்செழியன், மனவெளி ஆறுமுகம் - அமுதா ஆகியோர் மகள் முனைவர் சாந்தி ஆகியோர் மணவிழா 11.11.2022 அன்று காலை 10 மணி அளவில் அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில், மயிலம் சட்ட மன்ற உறுப்பினர் டாக்டர் மாசிலாமணி தலை மையில் பதிவுத் திருமணமாக எவ்வித மூடச் சடங்குகளும் இன்றி, தந்தை பெரியார் கொள்கை பாட்டையில் நடைபெற்றது.

12.11.2022 இரவு 8 மணி அளவில் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திர சேகரன், பூரணாங்குப்பம் ஆதிநாராயணன் ஆகியோர் தோழரின் இல்லம் சென்று மண மக்களையும், அவரின் பெற்றோர்களையும் பாராட்டி வாழ்த்தினார்.


No comments:

Post a Comment