தமிழ்நாடு ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார் அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, November 29, 2022

தமிழ்நாடு ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார் அமைச்சர் துரைமுருகன் குற்றச்சாட்டு

வேலூர், நவ 29 தமிழ்நாடு ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார் என்று அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டினார்.  வேலூர் மாவட்டம் பொன்னையில் தனியார் திருமண மண்டபத்தில் தி.மு.க. நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு பேசினார். 

அவர் பேசுகையில், தமிழ்நாட்டில் நிதிநிலை கடும் நெருக்கடியில் உள்ளது. கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அதனை சமாளித்து வருகிறோம். நிதி நெருக்கடியிலிருந்து மீட்கும் பணிகள் படிப்படியாகத்தான் நடக்கும். அது வரையில் கட்சியினர்ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்றார். பொதுமக்களிட மிருந்து கோரிக்கை மனுக்களையும் அவர் பெற்றுக்கொண்டார். முன்ன தாக பொன்னை ஆற்றின் குறுக்கே ரூ.40 கோடியில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளையும் அமைச்சர் பார்வையிட்டார். நிகழ்ச்சியில் மக்க ளவை உறுப்பினர் கதிர் ஆனந்த்  உள் ளிட்டோர்பங்கேற்றனர். 

கூட்டத்திற்கு பின்னர் அமைச்சர் துரை முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-  

தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் காலாவதியானது. தற் போதாவது மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதலை அளிப்பார் என எதிர்ப் பார்க்கிறோம். அவர் ஒப்புதல் அளிக்க வில்லை என்றால் அதன் பின்னர் எங்களுடைய நிலைப்பாடு என்ன என்பது தெரியும். தமிழ்நாடு ஆளுநர் முழுக்க முழுக்க அரசியல் செய்கிறார்.


No comments:

Post a Comment