உணர்வெனும் அனலில்... - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, November 5, 2022

உணர்வெனும் அனலில்...

அனல் பட்டது

புழுவானால் பொசுங்கும்

மெழுகானால் உருகும்

உணர்வெனும் அனல்பட்டது

தேமதுரத்தமிழானால் தீய்க்கும்

அன்று பதுங்கிய இந்தி 

இன்று பாய்ந்து வருகிறது சிந்தி

மூலநிதியிலா இந்தி 

நம் முன்னேற்றம் முடக்கும் நந்தி 

முட்டுக்கொடுக்கும் பார்ப்பனத்தொந்தி

நெட்டிமுறிக்கும் ஆர்எஸ்எஸ் மந்தி

எட்டி உதைப்போம் பார் எந்தி 

வெட்டிமுறிப்போம் அதை முந்தி!

மருத்துவத்திலும் இந்தி 

ஒருமொழிப்பாடம் என்கிறான் 

போட்டித் தேர்வுகள் அனைத்தும் 

இந்தி ஆங்கிலம் என்கிறான்

ஒன்றிய அரசு வேலைக்கு 

இந்தி வேண்டும் என்கிறான்

பள்ளிப் பிள்ளைக்கும் 

இந்தி கட்டாயம் என்கிறான்

இந்தி பேசாதவன் 

தேச துரோகி என்கிறான்

இந்தி தெரியாத மீனவனை 

பூட்சு காலால் மிதிக்கிறான்

விட்டால் மனைவியைக் கொஞ்சுதற்கும் 

இந்தியைக் கொண்டுவருவான்

மழலை தாய்ப்பால் குடிப்பதற்கும்

இந்திவேண்டுமென்பான்

விடாதீர்.....

நம்மொழியை நம்மை 

வெட்டிச்சாய்ப்பதன்றி வேறில்லை கண்டீர் 

அடிமை வாழ்வு வாழ இங்கு 

தமிழனில்லை என்பீர்!

என்மொழி நாளை சாகுமானால்

நான் இன்று சாவேன் 

நடராசன் தாளமுத்துகள் என்றாவேன்...! 

பொறுத்ததுபோதுமென பொங்கி எழுவேன் 

பொல்லாத இந்தி சமற்கிருத 

நூலர்களின் தோலுரிப்பேன்

எல்லாம் சொல்லிப் பார்த்தாச்சி... 

வேண்டாம் உந்தன் பேயாட்சி.... 

ஈவிரக்கமிலா கொடுங்கோலாட்சி... 

அன்று கேட்டது மாநிலசுயாட்சி.... 

இனி கேட்கப்போவது தனியாட்சி...!

உணர்வெனும் அனல்

குறையாதெங்கள் குருதி 

கட்டுக்குலையாதெங்கள் உறுதி 

இதுவே உனக்கு இறுதி 

மூண்டிடும்பார் பெருந் தீ..!

- தமிழினியன் வாசித்த கவிதை


No comments:

Post a Comment