வடலூர், நவ.8 வடலூர் நகர திராவிடர் கழக செயலாளர் இரா.குணசேகரன்- செல்வ ராணி இணையரின் மகள் செல்வ நிலா - நாமக்கல் மாவட்டம் செல்லியாயிபாளையம் லோகேந்திரன்-ராஜேஸ்வரி இணையரின் மகன் சூர்யா ஆகியோர் மணவிழாவினை நாமக்கல் பில்டர்ஸ் மகாலில் கழகப் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் தலைமையில் 7.11.2022 அன்று காலை 7 மணி அளவில் பெரியார் சுயமரி யாதைப் பிரச்சார நிறுவன தலைவர் பொத்தனூர் க.சண்முகம் அவர்கள் நடத்தி வைத்தார்.
லோகேந்திரன் வரவேற்புரை ஆற்றினார் நாமக்கல் மாவட்ட தலைவர் குமார் மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பெரியசாமி வேலூர் நகரத் தலைவர் அசேன் ,அறிவாயுதம் பொத்தனூர், வடலூர் இந்திரஜித், நெய்வேலி பாவேந்தர் விரும்பி, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் முனியம்மாள் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். முடிவில் பண்ருட்டி பன்னீர்செல்வம் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment