புதுச்சேரி, நவ.14 புதுச்சேரி மாநிலம் உழவர்கரை நகராட்சி திராவிடர் கழகத் தலைவர் ஆ.சிவராசன் - விமலா சிவராசன் ஆகியோர் மகள் பிரபாவதி, வில்லியனூர் கொம்யூன் பிச்சை வீரன் நகர் ஆனந்த வேலு - முத்தாலம்மாள் ஆகியோர் மகன் கலைநிதி ஆகியோரின் மணவிழா வரவேற்பு நிகழ்ச்சி புதுவை தர்மாபுரி சிறீராம் திருமண மண்டபத்தில் 12.11.2022 இரவு 7 மணி அளவில் நடைபெற்றது.
நிகழ்வில் கழகத் தோழர்களும் அனைத்துக் கட்சி நண்பர்களும், உறவுகளும் ஏராளமாகப் பங்கேற்று சிறப்பித்தனர். தந்தை பெரியாரின் பெண்ணுரிமை பற்றிய சிந்தனை நூல்கள் பங்கேற்ற அனைவருக்கும் வழங்கப்பட்டது. கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ,வீரமணி, மண்டல கழகத் தலைவர் இரா.சடகோபன், செயலாளர் அறிவழகன், அமைப்பாளர் ராஜு, அரியாங்குப்பம் தன்னுரிமை இயக்கத் தலைவர் சடகோபன், வே.அன்பரசன், கோ.மு.தமிழ்ச்செல்வன், களஞ்சியம் கே. குமார், பொதுக்குழு உறுப்பினர் பழனி, துணைத்தலைவர் குப்புசாமி, தியாகு, துணைத் தலைவர் துளசிராமன், முத்துவேல் உலகநாதன், இருசாம்பாளையம் இளங்கோவன், ஆதிநாரா யணன் விலாசினி ராஜ், விசயலட்சுமி, தமிழ் நிலவன், முகேஷ், தழுதாளி அன்புக்கரசன், துரை சிவாஜி ஆகியோர் கலந்துகொண்டு மண மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment