திராவிடர் கழகப் பொதுக் குழு உறுப்பினர் இயக்கத்தின் நீண்ட கால சீரிய முன்னணித் தோழர் தூத்துக்குடி மாவட்டம் மேல்மாந்தை மானமிகு
பெ. காலாடி (வயது 72) அவர்கள் மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். அவர் பிரிவால் பெருந் துயரத்திற்கு ஆளாகி இருக்கும் குடும்பத்தினருக்கும், கழகத்தினருக்கும் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
12.11.2022
குறிப்பு: கழகத் தலைவர் ஆசிரியர் காலாடி அவர்களின் குடும்பத்தினர்களிடம் தொலைப்பேசி மூலம் ஆறுதல் கூறினார்.
No comments:
Post a Comment