மதுரை நவ 18- மதுரை அரசு மருத்துவ மனையில் மூளைச்சாவு அடைந்த வாலிபரின் இதயம், நுரையீரல் ஆகியவை விமானம் மூலம் சென் னைக்கு கொண்டு செல்லப்பட்டன.
கோவை ஆசிரியர்கள் காலனி கருணைநகர் பகுதியை சேர்ந்தவர் முத்துசங்கர் (வயது 28). இவர், மதுரையில் உள்ள துணிக்கடையில் வேலை செய்து வந்தார். கடந்த 14ஆம் தேதி, வேலைக்கு சென்ற போது கோரிப்பாளையம் பகுதி யில் இருசக்கர வாகனத்தில் மோதிய விபத்தில் சிக்கி படுகாயம் அடைந் தார். மயக்க நிலையில் இருந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சையில் இருந்த அவர், நேற்று முன்தினம் (16.11.2022) இரவு மூளைச்சாவு அடைந்ததாக மருத் துவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அவரது உடல் உறுப் புகளை கொடையாக வழங்க அவ ரது குடும்பத்தினர் முன்வந்தனர். அதனை தொடர்ந்து டீன் ரத் தினவேல் அறிவுறுத்தலின் பேரில், சிறப்பு குழுவினர் மூலம் முத்துசங் கரின் இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், கண்கள், எலும்புகள் ஆகியவை எடுக்கப்பட்டன.
இதனை தொடர்ந்து, இதயம் மற்றும் நுரையீரல் ஆகியவை சென்னைக்கு கொண்டு செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதயம், நுரையீரல் ஆகியவை பெட்டியில் வைக்கப்பட்டு, நேற்று (17.11.2022) காலை ஆம்புலன்ஸ் மூலம் மதுரை விமான நிலையம் கொண்டு செல்லப்பட்டது. சுமார் 15 நிமிடத்தில் விமான நிலையத் திற்கு உடல் உறுப்புகள் கொண்டு செல்லப்பட்டன. போக்குவரத்து இடையூறு ஏற்படாமல் இருக்க தேவையான முன் ஏற்பாடுகளை காவல்துறையினர் ஆம்புலன்ஸ் செல்லும் பாதையில் செய்திருந்த னர். விமானத்தில் இதயம், நுரை யீரல் சென்னைக்கு கொண்டு செல் லப்பட்டு, உறுப்பு மாற்று சிகிச் சைக்கு காத்திருந்த நோயாளிக ளுக்கு பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதுபோல், கல்லீ ரல், கண்கள், எலும்பு, சிறுநீரகம் ஆகியவை மதுரை அரசு மருத்துவ மனைக்கும், மற்றொரு சிறுநீரகம் நெல்லை அரசு மருத்துவமனைக்கும் கொடையாக அளிக்கப்பட்டன. உடல் உறுப்பு கொடை அளித்த முத்துசங்கரின் குடும்பத்தினர் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத் தியது.
1 மணி நேரம் 10 நிமிடத்தில் சென்னைக்கு விமானத்தில் இத யத்தை கொண்டு வந்து இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றி கரமாக செயல்பட்டுள்ளது. வாலி பரின் உடல் உறுப்பு கொடையால் சேலம் விவசாயி உயிர் பிழைத்தார்.
No comments:
Post a Comment